Friday, September 7, 2012


 

டிமிக்கு ¦கொடுக்கும் பிந்து மாதவி

பெங்களூரில் நடந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ஷ¥ட்டிங்குக்கு வராமல் டிமிக்கி அடித்து விட்டாராம் நடிகை பிந்து மாதவி. இதனால் படக் குழுவினர் அப்செட் ஆகி விட்டனராம்.
கழுகு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் பிந்து மாதவி. அப்படியே சிலுக்கு போலவே இருக்கிறார் என்று திரையுலகினரால் பாராட்டப்பட்டதால் பிந்து மாதவிக்கு தன் மீதே காதல் வந்துவிட்டதாம். அந்தப் பெருமிதத்துடன் தற்போது நடித்து வரும் பிந்து, சட்டம் ஒரு இருட்டறை ரீ மேக்கிலும் நாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷ¥ட்டிங் சமீபத்தில் பெங்களூரில் நடத்த திட்டமிட்டு படக்குழுவினர் போய் விட்டனர். ஆனால் பிந்து மாதவியைக் காணோம் அன்று முழுவதும் அவர் படப்பிடிப்புக்கே வரவில்லையாம். இதனால் ஷ¥ட்டிங் கென்சலாகி விட்டதாம்.
என்ன, ஏது என்று விசாரித்தபோது அவருக்கு ஏதோ காயம் ஏற்பட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் தன்னைத் தேடி புதிதாக வந்த மூன்று படங்கள் தொடர்பான ஆழமான டிஸ்கஷனில் அவர் இருந்ததால்தான் சட்டம் ஒரு இருட்டறை ஷ¥ட்டிங்குக்கு வர முடியாமல் போனதாக இன்னொரு தகவலும் கிடைத்ததால் படக் குழுவினர் கடும் அப்செட்டானார்கள்.



 

ரஜனி கமலுடன் மீண்டும் நடிப்பேன்

ஸ்ரீதேவி
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன் என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் ஸ்ரீதேவி, தற்போது தமிழ் – இந்திய ஆகிய 2 மொழிகளில் உருவாகும் இங்கிலீஷ் – விங்கிலீஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது இத்தனை காலம் நடிக்காமல் இருந்ததற்குக் காரணம் என் மகள்கள் இருவரும் சின்ன குழந்தைகளாக இருந்தார்கள்.
அவர்களை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. இப்போது அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன் என்றார். ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீதேவி, நிச்சயமாக நடிப்பேன். இரண்டு பேரையும் சமீபத்தில் கூட சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நியாயமாக இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். பொருத்தமான சூழல் அமைய வேண்டும் என்றார்.


 

பேஸ் புக் காதல்

தமிழ்ப்படவுலகினருக்கு டைட்டிலுக்கு மட்டும் ஒருபோதும் பங்சமே வருவதில்லை. நல்ல நல்ல பெயரைத் தவிர வித்தியாசமான பெயரையும் போட்டுத் தாக்கி படம் பண்ணி விடுகிறார்கள்.
முன்பெல்லாம் இலக்கிய நயம் மிக்க பெயர்களில் படங்கள் வந்தன. பின்னர் சில வருடங்களுக்கு முன்பு வரை ஆங்கிலப் பெயர்களாக வைத்துத் தள்ளினர். அதை விட கொடுமையாக ஏய், போடா, வாடா, சண்டை என்று கொத்துப் புரோட்டா போட்டனர். அதற்கு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் முடிவு கட்டினர். இதையடுத்து தமிழ்ப் பெயர்களில் வர ஆரம்பித்தன.
இந்த நிலையில் பேஸ்புக் என்ற பெயரில் ஒரு புதுப் படத்திற்குப் பெயர் போட்டுள்ளனர். இந்தப் படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் படத்திற்கு வரிச் சலுகை கிடைக்காது என்பது உறுதியாகத் தெரிகிறது. இருப்பினும் அது குறித்து தயாரிப்பாளர்களுக்கு கவலை இல்லை போல படத்திற்கான பன்ச் லைனாக காதல் என்ற பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதை என்று தனியாக எந்தச் செய்தியும் தரத் தேவையில்லை. காரணம், பேஸ்புக் மூலம் ஏற்படும் ஒருகாதலைத்தான் இப்படம் சொல்லப் போகிறதாம்.
படத்தில் காதலுடன், கவர்ச்சியும் கரைபுரண்டோடும் என்று படத்தின் நாயகியைப் பார்த்தாலே தெரிகிறது.


 

டூயட் பாட அனுமதி கேட்ட அனுஷ்கா

அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்தியுடன் டூயட் பாட இயக்குனர் செல்வராகவனிடம் அனுமதி கேட்டுள்ளார் நடிகை அனுஷ்கா.
நடிகை அனுஷ்கா செல்வராகவனின் இரண்டாம் உலகம் பட ஷ¥ட்டிங்கிற்காக ஜோர்ஜியா பறந்துவிட்டார். இதற்கிடையே அவர் கதாநாயகியாக நடிக்கும் அகெஸ் பாண்டியன் படத்தில் நாயகி இல்லாமல் கார்த்தியால் டூயட் பாட முடியவில்லை.
இதையடுத்து அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவினர் அனுஷ்காவுக்கு போன் மேல் போன் போட்டதுடன் ஏராளமான ஈமெயில் அனுப்பி உடனே சென்னை வாருங்கள், நீங்கள் நடிக்க வேண்டிய பாகங்கள் ஷ¥ட் செய்ய வேண்டியுள்ளது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓயாது போன் ஒலித்ததையடுத்து அனுஷ்கா செல்வராகவனிடம் சென்று விவரத்தைக் கூறி சென்னை செல்ல அனுமதி கேட்டுள்ளார். அவரும் அனுமதி அளிக்கவே அம்மணி சென்னைக்கு வந்தார். வந்த கையோடு கார்த்தியோடு டூயட் பாட சென்றுவிட்டார்.
அலெக்ஸ் பாண்டியன் தெலுங்கில் ‘பேட் பாய்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி மற்றும் அனுஷ்காவுக்கு ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம் என்பதால் படம் அங்கும் நிச்சயம் ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது


 
எலந்த பழம் பாடல் காட்சியில் நடித்த விஜய நிர்மலா

உலகில் அதிக படங்களை இயக்கிய பெருமைக்குரிய பெண்

படத்தைப் பார்த்தவர்கள், ‘எலந்தப் பழம்’ பாடலை மறந்திருக்க மாட்டார்கள். அந்தப் பாடல் காட்சியில் நடித்த விஜய நிர்மலா, பிற்காலத்தில் ஆந்திரப் பட உலகின் மிகப் புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்ததுடன், 42 படங்களை இயக்கினார்.
உலகத்திலேயே அதிக படங்களை டைரக்ட் செய்த பெண் இயக்குனர் இவர்தான்! விஜய நிர்மலாவின் தாய் மொழி தெலுங்கு. என்றாலும், அவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பிறந்த ஆண்டு 1943.
விஜய நிர்மலா 7 வயது சிறுமியாக இருக்கும்போது, விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஒரு படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
விஜய நிர்மலாவுக்கு 15 வயதாகிய போது, அவருடைய புகைப்பட ஆல்பத்தை குடும்ப நண்பர் ஒருவர் பார்த்தார். ‘இவ்வளவு களையான முகம் கொண்ட விஜய நிர்மலா, சினிமா படங்களில் கதாநாயகியாக நடிக்கலாம். அதற்கு நானே முயற்சி செய்கிறேன்’ என்று கூறிவிட்டு ஆல்பத்தை வாங்கிக் சென்றார்.
அப்போது ‘பார்கவி நிலையம்’ என்ற மலையாளப் படம் தயாராகிக் கொண்டிருந்தது. அந்த பட அதிபரிடம் விஜய நிர்மலாவின் பட ஆல்பம் போயிற்று. அவர் அதைப் பார்த்துவிட்டு, படத்தின் டைரக்டரும், ஒளிப்பதிவாளருமான வின்சென்ட்டிடம் கொடுத்தார்.
‘இந்தப் பெண்ணுக்கு நல்ல முகவெட்டு இருக்கிறது. கேமராவுக்கு ஏற்ற முகம், நம் படத்திலேயே கதாநாயகியாக நடிக்க வைக்கலாம்’ என்று வின்சென்ட் கூற, ‘பார்கவி நிலைய’த்தின் கதாநாயகியானார் நிர்மலா.
ஏற்கனவே தெலுங்கில் வெளியான ‘சவுகார்’ என்ற படத்தை ‘எங்க வீட்டு பெண்’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்க விஜயா புரொடக்ஷன்சார் ஏற்பாடு செய்து வந்தனர். கதாநாயகியாக யாரைப் போடலாம் என்று ஆலோசித்து வந்த அவர்களுக்கு, விஜய நிர்மலா பற்றித் தெரிந்தது. அந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்க விஜய நிர்மலா ஒப்பந்தம் ஆனார்.
இவ்வாறு, ‘எங்க வீட்டுப் பெண்’ படத்தின் மூலமாக, தமிழ்ப்பட உலகுக்கு விஜய நிர்மலா அறிமுகமானார். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் தயாரான ‘பணமா பாசமா’ படத்தில், விஜய நிர்மலா நடித்தார். படம், சூப்பர் ஹிட்டாக அமைந்தது. ‘எலந்த பழம்’ பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலிக்க விஜய நிர்மலா அந்த ஒரே பாடல் காட்சி மூலம் பெரும் புகழ் பெற்றார்.
‘என் அண்ணன்’ படத்தில் எம். ஜி. ஆரிருக்கு, தங்கையாக நடித்தார். பிறகு, ‘சோப்பு சீப்பு கண்ணாடி’ படத்தில் நாகேசுக்கு ஜோடியாக நடித்து, நகைச்சுவை நடிப்பும் தனக்கு நன்றாக வரும் என்பதை நிரூபித்தார்.
தமிழ்ப் படங்களில் நடித்து வந்தபோதே, தெலுங்குப் படங்களிலும் அவர் நடித்த படங்கள் அமோக வெற்றி பெற்றன. எனவே, தெலுங்குப் படங்களில் அதிகம் நடிக்கலானார்.
பல படங்களில், பிரபல நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். விஜய நிர்மலா - கிருஷ்ணா ஜோடி சுமார் 50 படங்களில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலகட்டத்தில், டைரக்ஷனிலும் விஜய நிர்மலா ஈடுபட்டார். அவர் டைரக்ட் செய்த படங்கள் பெரும் வெற்றி பெறவே, டைரக்ஷனில் தீவிரவமாக இறங்கினார். மொத்தம் 42 படங்களை ரைடரக்ட் செய்தார். இது, உலக சாதனை.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 275 படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவில், படத் தயாரிப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு அமைப்புகளில் இடம் பெற்றவர், விஜய நிர்மலா.

என் தமிழ் சுசிலாவை உறுத்தாதிருக்க பல்லவியை ஒற்று எழுத்து வராமல் எழுதினேன்

கவிஞர் வைரமுத்து
நிகழ்ச்சியொன்றில் பி. சுசிலா வைப்பற்றி வைரமுத்து குறிப்பிட்டது எவரின் குரலை நேசித்தேனோ அந்தக் குரலுக்குரியவர் பாட வருகிறார் என்றால் எனக்கு எப்படி இருந்திருக்கும்? ‘பஞ்சமி’ என்றொரு படம். இசை இளையராஜா, பாட்டு நான்!
அனிச்ச பூக்களும் அன்னத்தின் உட்சிறகுகளும் கூட ஒரு பெண்ணின் மெல்லிய பாதத்தை முள்ளாக உறுத்துமென்று சொன்னால் சுசிலா அம்மையாருக்கு என் தமிழ் உறுத்தக் கூடாது என்பதற்காக பல்லவியை ஒற்று எழுத்து வராமல் எழுதினேன்.
“உதய கானமே, நல்ல மேகமே மொழியின் கதவு திறந்தது விழியில் விடியல், புலர்ந்தது அமுதம் பொழிந்து விளைந்த தமிழில் புலமை பிறந்தது” என்று அந்த பல்லவி அமைந்தது. இதில் எந்த இடத்திலும் க்,ச்,த்,ட்,ன் வராது. சுசிலா அவர்களின் தொண்டையை காயப்படுத்தக்கூடாது என்பதற்காக அப்படி எழுதினேன். இதை அன்றே சுசிலா அம்மையாரிடம் சொல்லி நான் உங்கள் ரசிகன் என்றேன், சிரித்தார். நான் சங்கீத வித்துவான் இல்லை இருந்திருந்தால் அந்த சிரிப்பையே ஸ்வரம் பிரித்திருப்பேன்’” என்றார் வைரமுத்து.

ஜெமினி, கமல் நடித்த ~குறத்தி மகன்' உருவான விதம்

கலைஞானம் எழுதிய கதை ‘குறத்தி மகன்’ அது உருவான விதமே ஒரு கதை. கலைஞானம் கூறுகிறார் :-‘ஒரு நாள் மாலை மைலாப்பூரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பிளாட்பாரத்தில் நரிக்குறவர் கூட்டத்தை கண்டேன்.
நான்கு நரிக்குறவப் பெண்கள் சேலையை வட்டமாக பிடித்து நிற்க, நடுவில் படுத்திருந்த பெண், குழந்தை பெற்றாள். தொப்புள் கொடியைத் துண்டித்து, குழந்தையையும், தாயையும் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.
வீட்டுக்காரர் திட்டினார். சாமி! மழை நின்னதும் போயிடுறோம் சாமி! என்று குறத்திகள் கெஞ்சினார்கள். நானும் வீட்டுக்காரரை சமாதானப்படுத்தினேன். மழை நின்றதும் எல்லோரும் விவேகானந்தா கல்லூரி பக்கம் சென்றார்கள்.
இன்னொரு நாள் ஒருபுறம் எச்சில் இலைகளுக்கு நாய்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் இன்னொரு குப்பைத் தொட்டியில் போடப்பட்ட எச்சில் இலைகளில் ஒட்டிக்கொண்டிருந்த சோறு, காய்கறிகளை, நரிக்குறவர்கள் டால்டா டின்னில் எடுத்துக் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
எச்சில் சோற்றுக்காக நாய்கள் போராடுகின்றன. அதே எச்சில் சோற்றுக்காக நரிக்குறவர்களும் போராடுகிறார்கள். இவர்களுக்கு விமோசனமே கிடையாதா என்று சிந்தித்தேன்.
மறுநாள் காலை அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று எல்லோருக்கும் பத்து பைசா, இருபது பைசா கொடுத்தேன். அனைவரும் அன்புடன் வணங்கினார்கள். நான் அவர்கள் மத்தியில் அமர்ந்தேன். அவர்களுடைய வாழ்க்கை பற்றிய முழு விவரங்களையும் கேட்டறிந்தேன்.
ஒரு வார காலம் மீண்டும் மீண்டும் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். அதன் மூலமாக உருவான கதைதான் ‘குறத்தி மகன்’ அதை எப்படி படமாக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.
டைரக்டர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், நடிகர் நம்பிராஜனை என்னிடம் அனுப்பினார். என்னை கே. எஸ். ஜீ. பார்க்க விரும்புவதாக, நம்பிராஜன் சொன்னார் அதன்படி நான் சென்று கோபாலகிருஷ்ணனை சந்தித்தேன். ‘ஏதோ, நரிக்குறவர்கள் பற்றி கதை எழுதியிருக்கிaர்களாமே அது என்ன கதை?’ என்று கேட்டார்.
கதையின் மையத்தைச் சொன்னதுமே, ‘இது போதும் மீதி கதையை நாளை கேட்கிறேன். இந்தக் கதையை 7 ஆயிரம் ரூபாய்க்கு நான் வாங்கிக் கொண்டு நானே தயாரிக்கிறேன். பிற மொழி உரிமை பற்றி அப்புறம் பேசிக்கொள்ளலாம். இப்போதே அட்வான்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறி அட்வான்ஸ் தொகையைக் கொடுத்தார் கோபாலகிருஷ்ணன்.
இவ்வாறு கலைஞானம் கூறினார்.
குறத்தி மகனில் ஜெமினிகணேசன், கே. ஆர். விஜயா, கமலஹாசன், ஜெயசித்ரா ஆகியோர் நடித்தனர். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதி, டைரக்ட் செய்தார். 1972 ஏப்ரல் 29ல் வெளிவந்த ‘குறத்தி மகன்’ வெற்றிப்படமாக அமைந்தது






No comments:

Post a Comment