காஜல் அகர்வாலிடம் விருந்து பெற வழி
காஜல் அகர்வாலிடம் யாராவது நீங்கள் தான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்று சொன்னால் இன்னொரு வாட்டி சொல்லுங்க என்கிறாராம். மேலும் அவர்களுக்கு விருந்து கொடுக்கிறாராம்.
இது தவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் காஜல் தமிழ், தெலுங்கு என்று இத்தனை படங்களில் நடித்து வரும் நீங்கள் தான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்று பலரும் அவருக்கு ஐஸ் வைத்து வருகிறார்களாம்.
இதைக் கேட்டு உச்சி குளிர்ந்து போகும் காஜல் அந்த ஐஸ் பார்ட்டிகளிடம் இன்னொரு வாட்டி சொல்லுங்க என்று கேட்கிறாராம். அவர்களும் அதை திரும்பச் சொல்ல மகிழ்ந்துபோகும் அவர் ஐஸ் பார்ட்டிகளுக்கு விருந்து கொடுத்து அசத்துகிறாராம்.
இத்தனை படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள காஜல் கால்iட்டை குழப்பியதாக சிலர் முணுமுணுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அங்கும், இங்கும் ஓடி, ஓடி நடிப்பதால் சில படங்களில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்க காலதாமதமாவதாகவும் கூறப்படுகிறது.
ராணி முகர்ஜpயுடன் ப்ரித்விராஜ் நடனம்
அய்யா படத்தில் தென்னிந்திய நடிகர்களின் காதில் புகை வரும் அளவிற்கு இந்தி நடிகை ராணி முகர்ஜியுடன் செம குத்தாட்டம் போட்டுள்ளார் ப்ரித்விராஜ்.
இதில் மூன்று குத்தாட்டப் பாடல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ‘ளிrலீaசீuசீ தீakலீupசீ’ இது 80 களில் வெளியான கமலின் சூப்பர் ஹிட்
பாடலின் டியூன். அதை அப்படியே இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர். ராணி முகர்ஜியின் கிளாமர் உடையில் ப்ரித்விராஜும் கமலைப் போல் பாடல் முழுவதும் சட்டை போடாமல் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.
தென்னிந்திய மொழியும், ஆங்கிலமும் கலந்து எழுதப்பட்டுள்ள
இந்தப் பாடலின் இடையில் 1, 2, 3, 4 என்று தமிழும் வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டு நாட்கள் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற மராத்திய இயக்குநர் சச்சின் குந்தல்கர், இந்தியில் இயக்கும் ‘அய்யா’ படத்தின் கதை ரொம்பவே பிடித்து போக உடனே ஓ.கே. சொல்லியிருக்கிறார் ப்ரித்விராஜ்.
பொலிவுட் படங்களில் ஏற்கனவே ‘அப்படிப்போடு’ பாடலும், ‘ரிங்கா ரிங்கா’ பாடலும் ரீமேக் ஆகியுள்ளன. அந்த வரிசையில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது.
தமன்னாவின் அழகில் மயங்கிய ரித்திக் ரோ'ன்
தமன்னாவை பார்த்து அவரது அழகில் மயங்கிய ரித்திக் ரோஷன் அவரை தன்னுடன் ஒரு படத்தில் நடிக்க அழைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற தமன்னாவை பொலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் பார்த்துள்ளார். தமன்னாவின் அழகில் மயங்கிவிட்டாராம். அதன் பிறகு வீட்டுக்கு சென்ற அவர் தமன்னாவுக்கு தூது அனுப்பியுள்ளார். அதாவது தன்னுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அன்புடன் கோரிக்கை வைத்துள்ளார்.
ரித்திக்குடன் நடிக்க நான் நீ என்று நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் போது அவரே தனக்கு தூதுவிட்டதில் அம்மணிக்கு ஏக சந்தோஷமாம். உடனே ஓ.கே. சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது.
சில நடிகைகள் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடுகையில் தமன்னாவுக்கு வாய்ப்பு வீடு தேடி வருகிறது. இது தான் அதிர்ஷ்டம் என்பதோ.
கத்ரீனாவின் வீட்டுக்கு நள்ளிரவில் வந்தவர் யார்?
பொலிவுட் நடிகை கத்ரீனா கைப் வாங்கியுள்ள புது வீட்டுக்கு சல்மான் கானும், ரன்பீர் கபூரும் சத்தமில்லாமல் சென்று வந்துள்ளனர்.
இந்த புது வீட்டுக்கு முதன் முதலாக வந்தது யார் தெரியுமா? கத்ரீனாவின் முன்னாள் காதலர் சல்மான் கான் தான். அதையடுத்து கத்ரீனாவின் நண்பர் ரன்பீர் கபூர் பத்திரிகையாளர்கள் கண்ணில் படாமல் இரவு 11 மணிக்கு வந்துவிட்டு 12.45 மணிக்கு கிளம்பிச் சென்றுள்ளார்.
வீட்டை விட்டு வெளியே வந்த ரன்பீர் பத்திரிகையாளர்கள் யாரும் போட்டோ எடுத்துவிடக் கூடாது என்று விருட்டென்று காரில் ஏறிச் சென்றுவிட்டாராம்.
கத்ரீனா தான் புது வீடு வாங்கியதை யாருக்கும் கூறாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் அவரால் அந்த ரகசியத்தை காக்க முடியவில்லை. சல்மானுடன் சேர்ந்து அவர் நடித்த ஏக் தா டைகர் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment