இந்திய விடுதலைச் செய்தியை முதலில் வானொலியில் கூறிய செய்தி வாசிப்பாளர்
தனது 18வது வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சிறிது காலம் புதுடில்லியில் வாழ்ந்த விஸ்வநாதன் 1945 இல் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கினார். 1947 இல் அகில இந்திய வானொலியில் முதலாவதாக இந்தியா விடுதலைச் செய்தியை கூறியுள்ளார்.
எழுத்தாளர் சுஜாதாவின் 10 நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதன் மேடை ஏற்றி உள்ளார். 1979 ஆம் ஆண்டு துவங்கி 1997 ஆம் ஆண்டு வரை அவர் நாடகங்களை நடத்தி வந்தார். அடிமைகள், கடவுள் வந்திருக்கிறார், அன்புள்ள அப்பா, வாசல், ஊஞ்ச், சிங்கம் அய்யங்காரின் பேரன், பாரதி இருந்த வீடு உள்ளிட்ட 10 நாடகங்களை சுஜாதா எழுதி பூர்ணம் விஸ்வாதன் மேடை ஏற்றினார்.
அண்டர் செகரெட்டரி, 50 – 50 போன்ற நாடகங்களை தானே எழுதியும் நடித்துள்ளார். கடைசியாக 1997 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் பாரதி இருந்த வீடு என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அதன் பின்னர் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் கோகுலம் ஒரிஜினல் போய்ஸ் கம்பெனி என்ற பெயரில் நாடகங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
டில்லி, லக்னோ, மும்பை ஆகிய நகரங்களில் இவர் நாடகம் நடித்துள்ளார். சங்கீதா நாடக அகடமி விருதை பெற்றுள்ளார். வருஷம் 16, வறுமையின் நிறம் சிவப்பு, தில்லுமுல்லு, மகாநதி, விதி, மூன்றாம் பிறை, புதுப்புது அர்த்தங்கள், கேளடி கண்மணி, ஆண் பாவம் உள்ளிட்ட 86 படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த பூர்ணம் விஸ்வநாதன் 2008, அக்டோபர் 1 ஆம் திகதி உயிரிழந்தார். மறைந்த பூர்ணம் விஸ்வநாதனுக்கு சுசீலா என்ற மனைவியும், உமா, பத்மஜா என்ற மகள்களும்,சித்தார்தா என்ற மகனும் உள்ளனர்.
15 ஆண்டுகளாக தாலி கட்டாமலேயே கணவன் - மனைவியாக வாழ்ந்த சிலுக்கு
சுமிதாவுக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்தால்தான் கணவன் - மனைவியா என்று கேட்டார். என்று ‘சில்க்’ சுமிதாவின் காதலரான தாடிக்காரர் டொக்டர் ராதாகிருஷ்ணமூர்த்தி கூறினார்.சுமிதாவின் மரணத்துக்குப் பிறகு, அவர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார். சுமிதாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி? அவருடன் உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது? என்று நிருபர் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
சுமீதாவுக்கு நான் தூரத்து உறவு! டொக்டருக்கு படித்து இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே என்னை அவளுக்குத் தெரியும். அவள் சினிமா நடிகையான போதிலும், அவளுக்கு ஆதரவு யாரும் இல்லை. தனியாகத்தான் விடு எடுத்து தங்கி வந்தாள்.
அவளுக்குத் தெரிந்த ஒரே ஆள் என்பதால் என்னை வரவழைத்து, எனக்கு பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டாள். நானும் எனது குடும்பத்தை விட்டு விட்டு சென்னை வந்து அவளுடன் தங்கினேன்.
நாளாக நாளாக எங்கள் நட்பு காதலாக மலர்ந்தது. நாங்கள் இருவருமே சேர்ந்தே படப்பிடிப்புகளுக்கு போவோம். பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருக்கிறோம். இதுபற்றி பத்திரிகைகளில் கிசு கிசு வந்தன. சுமிதாவின் தாடிக்கார காதலர் என எழுதினார்கள்.

‘பெண்கள் தாலி கட்டிக்கொண்ட பிறகு அவளை ஆண்கள் அடிமை போல் நடத்துகிறார்கள். இது பெண்களின் உரிமையைப் பாதிக்கும் செயல் என்பது சுமிதாவின் எண்ணமாக இருந்தது. நானும் அதனால் வற்புறுத்தவில்லை என் மீது அவளுக்கு அதிக பாசம். அவளுக்காக நான் என் குடும்பத்தை விட்டு விலகி வந்தேன். மனைவி குழந்தைகளை விட்டு விட்டு சுமிதாவுடனேயே வந்து தங்கிவிட்டேன். நானும், சுமிதாவும் கடந்த 15 ஆண்டுகளாக தாலி கட்டாமலேயே கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தோம்.
கேள்வி:- சிலிக் சுமிதாவின் இந்த முடிவுக்கு பணக்கஷ்டம் காரணமா?
டொக்டர்:- நிச்சயமாக இல்லை. பணமும், நகைகளும் லொக்கரில் இருக்கிறது.
சுமிதாவுக்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பணக்கஷ்டம் இருந்தது உண்மை. காரணம் அவள் இரவும் பகலும் ஆடி ஆடி சம்பாதித்த பணத்தையெல்லாம் சொந்தப்படம் எடுப்பதில் விட்டுவிட்டாள். தெலுங்கில் வீரவிகாரம், பிரேமசேச்சுடு ஆகிய படங்களையும், மலையாளத்தில் பெண் சிங்கம் என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தாள்.
ஆனால் மூன்று படங்களுமே தோல்வியைத் தழுவின கையில் இருந்த பணம் எல்லாம் போய்விட்டது. இந்த அதிர்ச்சியை சுமிதாவால் தாங்கமுடியவில்லை. மிகவும் வேதனைப்பட்டாள். அந்த மனச்சோர்வில் படத்தில் நடிப்பதை கூட விட்டு விட்டாள். பிறகு 1 1/2 வருடத்துக்குப்பிறகு நடித்தாள். கடன்களை எல்லாம் அடைத்தாள். பணமும் சேர்ந்தது.
இந்த பங்களாவை கூட வாங்க நினைத்து, அட்வான்ஸ் கூட கொடுத்து இருக்கிறோம். எனவே பணக்கஷ்டம் இந்த முடிவுக்கு காரணமாக இருக்க முடியாது.
வேறு என்ன காரணமாக இருக்கும் என்று கருதுகிaர்கள்?
டொக்டர்:- சுமிதா எழுதி வைத்துள்ள கடித்தில் 5 வருடத்துக்கு முன்பு ஒருவர் எனக்கு வாழ்க்கை தருகிறேன்னு சொன்னார். ஆனால் ஏமாற்றிவிட்டார்ன்னு எழுதி இருக்கிறாள். அந்த ஏமாற்றத்தினாள் கூட இந்த முடிவுக்கு வந்து, இருக்கலாமோ என்னவோ, யாருக்குத் தெரியும்?
கேள்வி:- அந்த நபர் யார் என்று தெரியுமா?
டொக்டர்:- தெரியலையே சுமிதாவின் மனதில் என்ன இருக்கும் என்று யாருக்குமே தெரியாது.
அவள் யாரையாவது விரும்புகிறாள் என்று தெரிந்தால் நிச்சயம். நான் விலகி இருப்பேன். குறுக்கே நிற்கமாட்டேன்.
வழக்கமாக சுமிதா என் அறையில் என்னுடன்தான் படுத்துத் தூங்குவாள். அன்றைய தினம் பேத்தி உத்ரா இருந்ததால் அவளை அழைத்துக்கொண்டு பக்கத்து அறைக்குப்போய் விட்டாள். போனவள்.
ஒரேயடியாய் போய் சேருவாள் என்று நினைக்கவே இல்லை. இப்படி செய்த விட்டாளே’
‘இவ்வாறு கண் கலங்கியபடி டொக்டர் ராமகிருஷ்ண மூர்த்தி கூறினார்.
சில்க் சுமிதாவின் தாயார் நரசம்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
‘எனக்கு ஒரு மகளும், மகனும்தான் உண்டு. சுமிதா என் மீது அன்பை பொழிவாள். நான் ஊரில் இருந்து வந்தால் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொஞ்சுவாள். இனி யார் என்னிடம் அப்படி அன்பாக இருக்கப் போகிறார்கள். என மகள் ரொம்ப நல்ல பொண்ணு. அவளை மாதிரி யாரும் வரமாட்டார்கள்.
பெங்களூர் சூட்டிங் சென்றுவிட்டு என் ஊருக்கு வந்தால் என்னைப் பார்த்துவிட்டுத்தான் சென்னை திரும்புவாள். (இறந்த அன்று) மீண்டும் வருவதாக கூறினாள். ஆனால் அவள் வரவலில்லை. அவள் இறந்து விட்டதாக தந்தி வந்தது. மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புவாள்.
நினைத்த போதெல்லாம் ஓடோடி வருவாள். இனி அவளைப் பார்க்க முடியாது. மணக்கோலத்தில் பார்க்க வேண்டியவளை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது எனக்கு. கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
அவள் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தாள். சம்பாதித்தாள் அவளுக்கு கடன் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவள் சாக வேண்டிய அளவுக்கு கஷ்டம் வந்தது என்று கூறுவதை என்னால் நம்பமுடியவில்லை. பாபு பாபு என்று சொல்கிறார்கள். அவர் ரொம்ப நல்லவர் என்று சுமிதா சொல்ல கேட்டுள்ளேன். நான் யாரையும்
வில்லை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.இவ்வாற நரசம்மா கூறினாள்.
சில்க் சுமிதாவின் தம்பி நாகவரபிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
'நான் சொந்த ஊரில் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன். அக்கா எங்கள் மீது ரொம்ப பாசமாக இருந்தார். அவர்தான் எங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தார்.
அக்காவின் இந்தத் திடீர் மரணம் எங்களை ரொம்ப வேதனைக்குள்ளாக்கிவிட்டது. இந்த முடிவை எடுக்கும் அளவுக்கு அவளுக்கு என்ன கஷ்டம் வந்தது என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
அக்கா அவர் நினைத்த போது எங்களைப் பார்க்க வருவார் நான் கடந்த மாதம் இங்கு வந்து பார்த்தேன். கடந்த 10 நாட்களுக்கு முன் சென்னை வந்தபோது சூட்டிங் போய் விட்டதாக தெரிவித்தார்கள்.
டெலிவிஷன் பார்த்த போது அக்கா மரணம் அடைந்த செய்தியைக் கேட்டேன். அதிர்ச்சி அடைந்தேன்.
பாபு அக்காவுடன்தான் வசித்து வருகிறார். அவர் எப்படிப்பட்டவர் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் நல்லவர் என்று அக்கா சொல்லக் கேட்டிருக்கிறேன். வேறு ஒன்றும் எங்களுக்குத் தெரியாது.
இவ்வாறு நாகவரபிரசாத் கூறினார்.
சிநேகிதனே...சிநேகிதனே.. பாடல் பிறந்த கதை
அலைபாயுதே படத்தில் வரும் ‘சிநேகிதனே சிநேகிதனே....’ எவ்வளவு இனிமையான பாடல், ஆனால் இந்தப் பாடல் உருவான போது கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் மணிரத்னம் இடையே நடந்த சுவையான சம்பவங்கள் அதைவிட மிக சுவையானவை.சினேகிதியே பாட்டின் சரணத்தில் வரும் ‘உந்தன் சட்டை நானும் போட்டு மகிழ்வேன்’ எனும் வரி கவிஞர் வைரமுத்துவுடையது இல்லையாம். கவிஞர் அவர்கள் திருமணமான கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் அந்தரங்கமான நெருக்கத்தை உணர்த்துவதற்காக வேறொரு அற்புதமான வரியை எழுதியிருந்தாராம்.
அது ‘உந்தன் ஜட்டி நானும் போட்டு அலைவேன்’ எனும் வைரவரி. இந்த வரியை படித்துவிட்டு இயக்குனர் மணிரத்னம், ‘கவிஞரே, எந்தக் காரணத்திற்காகவும் சினேகிதர்கள் ஜட்டியை மாற்றி அணிந்து கொள்வது தமிழ் கலாசாரத்தில் கிடையாது. மழை காலத்தின் போது வேண்டுமானால் துவைத்துப் போட்ட சட்டை மழைக்கு காய்ந்திருக்காது, ஆகவே சில நேரம் சட்டையை மாற்றி அணிந்து கொள்வார்கள், எனவே இந்த வரியை ‘உந்தன் சட்டை நானும் போட்டு மகிழ்வேன்’ என சொல்லி அப்படியே செய்தும் விட்டார்.
இதனால் கவிஞர் இயக்குனர் மணிரத்னம் மீது மிக கோபம் கொண்டார். அதே அலைபாயுதே படத்திற்கு அடுத்த பாடல் எழுதும் போது ‘அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டேன்’ என எழுதி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார். ‘அலைபாயுதே படத்தின் பாடல்களும் அக்டோபர் மாதத்தில் தான் உருவானது என்பது அனைவரும் அறிந்ததே.
இயக்குனருக்கும் கவிஞருக்கும் இடையே நடந்த சிறு ஊடல் நமக்கு காலத்தால் அழியாத இரண்டு பாடல்களை தந்திருப்பது பெரும் ஆச்சர்யம்தான் இல்லையா?
No comments:
Post a Comment