இன்றும் எம் உதடுகள் முணுமுணுக்கும்
போதையில் மிதந்த மேதையின் உள்ளத்தில் உதித்த பாடல்கள்
பூஜ்ஜியத்துக்குள் கவி ராஜ்யத்தை ஆண்டு இணையற்ற கவிஞர் என்ற தனித்துவ கொடியை ஏந்தி காலத்தால் அழியாத தத்துவ ஞானியாக வாழ்ந்து நினைவில் நீங்காது நிலைத்து நிற்கும் கவிஞர் கோ. கண்ணதாசனுக்கு நிகராக இனித்தான் எவரும் பிறக்க வேண்டும் என்பது அவர் பால் ஈர்க்கப்பட்டோரின் முடிவாகும்.‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்’ என்று தத்துவத்தை உணர்த்திய கவிஞர் ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும்’ என்று காதலின் மகிமையையும் கவியிலே வடித்தார்.

இற்றைக்கு எண்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் சாத்தப்ப செட்டியாருக்கும் விசாலாட்சி அம்மையாருக்கும் எட்டாவது குழந்தையாகப் பிறந்ததாலோ என்னவோ எட்டாம் வகுப்போடு தன் பாடசாலைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலை இந்த முத்தையாவுக்கு ஏற்பட்டது.
ஆம் இதுதான் அவரது இயற்பெயர். ஆனால் கண்ணதாசனுக்கும் தமக்கு இடையிலே பல்வேறு வகைகளில் ஒற்றுமை இருப்பதாகக் கருதிய இவர் தன்பெயரைக் கண்ணதாசன் என மாற்றிக்கொண்டார்.
பள்ளிப்படிப்பை இடைநடுவில் நிறுத்திக் கொண்டாலும் கல்வி கேள்விகளில் ஞானம் மிக்கவராகி ஞாலம் புகழ் விளங்கினார். ‘திருமகள்’ எனும் பத்திரிகையில் அவரால் எழுதப்பட்ட முதல் கதையும் முதல் கவிதையும் வெளியானதை அடுத்து கவிமங்கையின் காலனானார்.
1949ல் ‘கன்னியின் காதலி’ என்ற படத்துக்குத் தனது கன்னிப் பாடலை எழுதியதன் மூலம் சினிமாப் பாடலாசிரியராக அறிமுகமானார். நவரசங்களையும் அதற்கு அப்பாலும் தொட்டுபாடல் எழுதி தனது காவியங்களால் மானிட உள்ளங்களில் மதிப்போடு கட்டுண்டார்.
அவரது வரிகள் இதயங்களை இதமாகக் கவர்ந்தன. கோவை செழியன் ‘கவிஞர்’ என்ற பட்டத்தை வழங்கி இவரைக் கெளரவித்தார். ஜமால் முஹம்மது கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நைனார் முஹம்மது ‘கவிசரசு’ என்ற பட்டத்தை வழங்கி மேலும் ஒருபடி உயர்த்திவிட்டார்.
தேசிய ஒற்றுமையை வளர்க்கும் பாடல்களை எழுதியமைக்காக 1970ல் இவர் தேசிய விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். சிறந்த சினிமா கவிஞருக்கான விருது வழங்கி 1971ல்தமிழக அரசு இவரைக் கெளரவித்தது. 1978ல் தமிழக அரசு ஆஸ்தான கவிஞராக இவரை நியமித்து மதிப்பளித்தது. கவிஞர் கண்ணதாசன் தனது வாழ்நாளில் 4000 கவிதைகளையும் சுமார் 5000 சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார். 21 நாவல்கள் உட்பட 109 நூல்களை இவர் எழுதியுள்ளார். இவரால் எழுதப்பட்ட ‘சேரமான் காதலி’ எனும் நாவல் சாகித்திய எக்கடமி பரிசு பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் கவித்துவம் மட்டுமல்ல தெய்வீக மணம் கமழுவனவுமாகும். இறைவன் வாழும் இடங்கள் எவை என்பதையும் கூட மனக் கண்களால் கண்டு உணர்த்தியவர் அவர்.
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன், அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் தென்னை இள நீருக்குள்ளே தேங்கி உள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் அவனைத் தெரிந்துகொண்டால் அவன்தான் இறைவன் கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் அந்த ஏளையின் பேர் உலகில் இறைவன். உழைக்கும் கைகள் எங்கே உண்மை இறைவன் அங்கே கருணை பொங்கும் உள்ளம் அது.
கடவுள் வாழும் இல்லம் என்று இறை தத்துவங்களை எல்லாம் எளிய மொழியில் புரிய வைத்தவர் கவிஞர் கண்ணதாசன்.
அதே கவிஞர் தனது வரிகளில் இறைவன் தன் படைப்போடு புரியும் திருவிளையாடல்களைக் கண்டு வெதும்பி இப்படியும் சொல்கிறார்.
அழகைப் படைத்தவன் இறைவன் என்றால்
அவன் அழிவை ஏன் படைத்தான்.
மொழி¨ய் படைத்தவன் இறைவனென்றால்
அவன் ஊமையை ஏன் படைத்தான்.
விழியைப் படைத்தவன் இறைவனென்றால்
அவன் குருடரை ஏன் படைத்தான்.
ஒளியைப் படைத்தவன் இறைவனென்றால் அவன் இருளை ஏன் படைத்தான் என்றெல்லாம் கேள்வி அலைகளால் உள்ளங்களை சிந்திக்கத் தூண்டுகிறார் அவர்.
எம்.ஜP.ஆரின் மூன்றாவது மனைவி ஜhனகியின் கல்யாண கதை
tp.என். ஜானகியின் சொந்த ஊர் கேரளா பாலக்காட்டுக்கு அடுத்து உள்ள வைக்கம் என்ற ஊர். பிரபல கர்நாடக பாடல் ஆசிரியர் பாபநாசம் அவருடைய தம்பி ராஜகோபால் ஐயருடைய மகள்தான் வி.என். ஜானகி. வைக்கத்தில் பிறந்தவராக இருந்தாலும் படித்தது, நடனம் கற்றுக்கொண்டது எல்லாம் சென்னைதான்.
![]() ![]() |
இவர்கள் பக்கா பிராமின் வி. என். ஜானகி பிரபல டைரக்டர் கே. சுப்பிரமணி, நடிகை எஸ்.டி. சுப்புலட்சுமி நடத்தி வந்த நாடக குழுவில் நடித்து வந்தார். பிறகு டைரக்டர் சுப்பிரமணி வழியாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் நடித்த முதல் படம் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ இந்த படத்தில் கதாநாயகியாக ரொம்ப பிரமாதமாக நடித்துள்ளார். அந்தப் படத்தில் இவர் ஆயிரம் தலைகளை வெட்டி குவிக்கும் காட்சி மயிர் சிலிர்க்க வைக்கும் அந்தப் படம். எம்.ஜி. ஆருடன் கதாநாயகியாக நடிக்க மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.
முதல் படம் மோகினி 1948 இல் வெளிவந்தது. அதை அடுத்து மருத நாட்டு இளவரசி நாம் போன்ற படங்கள் இவர்கள் நடித்த படங்கள். இந்த கால கட்டத்தில் இல்லற வாழ்க்கையே நமக்கு இனிமேல் இல்லை, தான் உண்டு தன் தொழில் உண்டு உழைப்பே உயர்வு என்ற ஏணியில் ஏறிக்கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய சறுக்கல் ஏற்பட்டது.

இதற்கு இடையில் எம்.ஜி. மீது அன்பு கொண்டார். இதை அறிந்த எம்.ஜி.ஆர். அன்புக்கு அடிமையானார். ஆனால் காதல் என்பது சினிமாவில் மட்டும் (நடிப்பில்) என்னுடைய சொந்த வாழ்க்கையில் இல்லை.
என் தாய் உடனே எனக்கு கேரளாவில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். நான் அந்தப் பெண்ணுடன் ஒரு வருடம் தான் வாழ்ந்தேன். பிறகு ஒரு வருடம் கழித்து எனக்கு கட்டாயமாக இரண்டாவது கல்யாணம் நடந்தது. அந்தப் பெண்ணோடு நான் ஒரு வருடம் தான் நல்ல சந்தோஷமாக வாழ முடிந்தது.
பிறகு அந்தப் பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அது சரி ஆகாமல் தொடர்ந்து உடல் நலக்குறைவாகவே இருக்குது. இந்த மாதிரியான சூழ்நிலையில் உள்ள என்னிடம் என்னை நீங்கள் விரும்புவது எப்படி சரியாகும். தயவுசெய்து இது வேண்டாம் நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்.
தொடர்ந்து படங்களில் நடிப்போம் என்று எம்.ஜி.ஆர். மிக விளக்கமாக தன்னுடைய குடும்ப நிலைகளை விபரமாக சொன்னார். பெண் என்றால் பேயின் மனம் இரங்கும் என்பது போல் எல்லாவற்றையும் யோசித்த எம்.ஜி.ஆர். இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்பட்டார். ஒரு பக்கம் தன் தாய், மறுபக்கம் தன் மனைவி, மேலும் மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணை காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ சட்டப்படி குற்றம் என்பதை எம்.ஜி.ஆர். நன்கு அறிவார். அவர் நாடகம், சினிமா, குடும்ப வாழ்க்கையில் மிகவும் அனுபவம் பெற்றவர்.
எதையும் யோசிக்காமல் செய்யமாட்டார். அப்படிப்பட்ட இவருக்கு வி.என். ஜானகி விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. வி.என். ஜானகி அம்மாவிடமும், சதானந்தவதியிடமும் பேசுவது, சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடுவோமே என்று மிகவும் மனதை தைரியப்படுத்தி கொண்டு ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் முதலில் தன் மனைவியை பார்த்து விட்டுத்தான் மற்ற வேலைகளை செய்வது வழக்கமாக நடக்கிற விஷயம்.
இப்போ தன் மனைவியிடமே நேரடியாக இதைப்பற்றி பேசி விடலாம் என்ற என்னத்துடன் தன் மனைவியிடம் வி.என். ஜானகியைப் பற்றி முழு விவரத்தையும் சுருக்கமாக சொல்லிவிட்டு பிறகு காதல் கல்யாண விஷயத்தையும் கடகடவென்று சொல்லிவிட்டு தன் மனைவியின் கையைப் பிடித்து கொண்டார். இந்த விஷயத்தில் மனைவியின் சம்மதம் இருந்தால் போதும். பிறகு மற்றவர்களுடைய சம்மதத்தை பெற்று விடலாம். தன் கணவர் தன்னிடம் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்த சதானந்தவதியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். உடனே கண்ணீரை துடைத்துவிட்டு கொண்டே தன் மனைவியிடம் உணக்கு இது பிடிக்காவிட்டால் விட்டு விடு அழாதே உன்னுடைய சம்மதம் இல்லாமல் இனி மேல் அந்த பெண்ணிடம் பேசக்கூட மாட்டேன். கவலைப்படாதே இந்த விஷயத்தை அம்மாவிடம் கூட நான் சொல்லவில்லை நீ நல்லா யோசித்து உன் முடிவை மெதுவாக சொல். அவசரம் இல்லை என்று சொல்லிவிட்டு அவருடைய அறைக்குள் போய்விட்டார்.
இவர் சென்ற பிறகு தன்னுடைய கணவருடைய நிலைமையைப் பற்றியும் அவருடைய வேண்டுகோளைப் பற்றியும் நினைத்து இந்த விஷயத்தை அடுத்த நாள் தன் மாமியார் இடமும் எம்.ஜி.யிடமும் இந்த விஷயத்தைப் பற்றி பேசினார். இந்த செய்தியைக் கேட்ட இருவரும் அதிர்ச்சி அடைந்து போனார்கள்.
பிறகு சதானந்தவதி சத்தியதாயிடமும் எம்.ஜி. யிடமும் தன் கணவர் விருப்பப்படி அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும். எனக்கு என் கணவருடைய மன நலம் தான் முக்கியம் அவருடைய மனம் நோகக் கூடாது. என்னுடைய உடல் இனிமேல் நலம் பெற்று நான் எழுந்து மீண்டும் என்னுடைய பொறுப்புகளை சேவைகளை அவருக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை.
எனவே தயவு செய்து அவரிடம் எந்தவித மறுப்பும் சொல்லாமல் கேள்விகள் கேட்காமல் நீங்களே உங்களுடைய சம்மதத்தை சொல்லுங்கள். அவர் மனம் புண்படாமல் நல்ல சந்தோஷமாக இருப்பது தான் நமக்கு முக்கியம் என்று சொல்லிக்கொண்டு சத்தியதாயுடைய கையைப் பிடித்து கண்ணீர் விட்டார்.
இந்து அகாரதிப்படி கணவன்தான் மனைவியிடம் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன் என்ற சம்மதம் கேட்டதும் இல்லை. மனைவி கணவருக்கு சரி செய்து கொள்ளுங்கள் என்ற சொன்னதில்லை. எந்த சூழ்நிலையிலும் தன் கணவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் வைப்பாட்டியோ இரண்டாவது பெண்டாட்டியோ வைத்து கொள்ள நல்ல மனத்துடன் சம்மதிக்க மாட்டார்கள்.
ஆனால் சதானந்தவதி தன் கணவர் தன்னிடம் நான் திருமணம் செய்துகொள்ள அனுமதி கேட்டதை நினைத்து பூரிப்பு அடைந்து போனார். தன் மனைவி ஒரு படுக்கை நோயாளி என்று நினைக்காமல் பாசத்தோடும் பற்றோடும் கேட்டாரே இவர் வேறு திருமணம் செய்து கொண்ட பிறகு நம் மீது வைத்துள்ள அன்பும், பாசமும், பற்றும் போய்விடுமோ என்று நினைத்து எதுவானாலும் சரி அவர் நல்லா இருந்தால் போதும்.
நாம் சாகும் வரை அவருடைய முகத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் போதும். இந்த விஷயத்தில் சத்தியத்தாயும் எம்.ஜி.சியும் எந்தவித மறுப்பும் சொல்லவில்லை. அப்படி இப்படினு எப்படியோ 1957 இல் என்.ஜி.ஆரும் வி.என். ஜனாகியும்
ம் அமைத்தார். திருமணம் செய்து கொண்ட உடனே வி.என். ஜானகியை சதானந்தவதிக்கு அறிமுகப்படுத்தினார். உடனே வி.என். ஜானகி, சதானந்தவதியுடைய காலை தொட்டு வணங்கிவிட்டு அக்கா நான் உங்களுடைய உடன் பிறவா தங்கை என்னை உங்கள் தங்கை போல் நினைத்துக் கொள்ளுங்கள். எனக்கு இப்போ என் உடன் பிறந்த தம்பியைத் தவிர வேறு யாரும் இல்லை. இதை கேட்ட சதானந்தவதி, வி.என். ஜானகியுடைய கையைப் பிடித்துக் கொண்டு நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்றார்.
அப்படி போடு அருவாள இது ஒலக மகா நடிப்புடா

மகத், மனோஜ் இருவரும் டாப்சிக்காக போட்ட ஃபைட், சினிமா ஸ்ட்ன்டை விட பெரிதாகி, கோலிவுட் டோலிவுட் என எங்கும் சிரிப்பாய் சிரித்துவிட்டது. இந்த சண்டைக்கு பின்னணி டாப்சி யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சைதான் என்பதும் தெரிந்த விஷயமே.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட டாப்சி, இதுவரை மகத் பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தார்.
இப்போது அந்தக் குறை எதற்கு என்ற நினைப்பில் இன்னொரு விளக்கம் அளித்துள்ளார்.
‘மகத் யாருன்னே எனக்குத் தெரியாது. சம்பந்தமே இல்லாம இப்படி என்னை ரெண்டு பேரோட சேர்த்துப் பேசுறது ரொம்ப வருத்தமா இருக்கு.
மகத் என்னை லவ் பண்ணதா சொன்னதுல உண்மை இல்லை. அவரை நான் ஒரு முறைகூட சந்திச்சதே இல்லை. யாருன்னே தெரியாத ஒருத்தர் எப்படி எனக்காக சண்டை போட்டார்னு சொல்aங்க? இன்னொன்னு அந்த சண்டை நடந்ததா சொல்ற நாள்ல நான் கர்னூல்ல இருந்தேன்’ என்கிறார் டாப்சி.
அப்படின்னா மகத்தும் டாப்சியும் வாரத்துக்கு இரு முறை எயார்போர்ட்டில் சந்தித்தது, காரில் ஒன்றாக சுற்றிய படம் வெளியானதெல்லாம் கிராபிக்ஸா இருக்குமோ?
உடலை ஸ்லிம்மாக்கும்

ஒரு சந்திப்பில் வெங்காயம், சூழ்நிலை, கனல் ஆகிய படங்களில் நடித்தவர் பவீனா. இவர் திடீரென்று நடிப்புக்கு மூன்று மாதங்கள் முழுக்குப் போடப் போவதாக சொல்கிறார்.
காரணம் கேட்டால், ‘என் உடம்பு பெருத்திருப்பதால், என்னை ‘மொடர்ன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்ய டைரக்டர்கள் தயாங்குகின்றனர்.
அதனால் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மூலம், உடலை ஸ்லிம்மாக்கி வருகிறேன் இன்னும் மூன்று மாதங்களுக்கு பிறகே, புதிய படங்களில் ஒப்பந்தமாவேன்’ எனக் சொல்லும் பவீனா. தன் பெயரை, வினிதா என்று மாற்ற இருப்பதாகவும் கூறுகிறார்.
கார்த்தி ஜோடியாக

மங்காத்தா படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படமான பிரியாணியில் காக்டெயில் நாயகி டயானா பென்டி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கார்த்தி நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒஸ்தி நாயகி ரிச்சா நடிக்கிறார். சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த கலவையாக படம் உருவாக இருக்கிறது.
கதைப்படி படத்தில் இரண்டு நாயகிகள் என்பதால் ரிச்சாவைத் தொடர்ந்து மற்றொரு நாயகியாக சமந்தா அல்லது இலியானாவை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில் இரண்டாவது நாயகியாக காக்டெயில் நாயகி டயானா பென்டி நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முயற்சியில் தயாரிப்பு தரப்பு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment