~கள்ளப்பருந்து' க்கு நடந்தது என்ன?
பொன்முடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கள்ளப் பருந்து’. இதயன் என்பவர் இயக்கி உள்ளார். அம்சவேல், மஞ்சுதீத், சோனு என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்துக்கு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் இசை அமைத்து இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் அவர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர்கள் படத்தை பார்த்துவிட்டு ஒரு சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்து படத்தை திரையிட அனுமதி வழங்கிவிட்டனர். அதோடு மட்டுமல்ல இது சமூகத்துக்கு தேவையான கருத்தைக் கொண்டது என்ற சான்றும் வழங்கிவிட்டதாம்.
இது இங்குள்ள தணிக்கை குழுவுக்கும், மறு ஆய்வு குழுவுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தணிக்கை குழு வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல் இது. ‘ஒரு பணக்காரருக்கு மூன்று பெண் குழந்தைகள் அவர்களை கடுமையான கட்டுப்பாடுகளுடன் வளர்க்கிறார்.
வெளியே விட்டால் கெட்டுப் போய்விடுவார்கள் என்று வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்க்கிறார். மனைவியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. அந்த வீட்டுக்கு புதிதாக ஒரு டிரைவர் வேலைக்கு வருகிறார். அவர் வீட்டின் நிலையை புரிந்து கொண்டு ஒவ்வொரு பெண்ணாக மயக்கி தன் ஆசைக்கு இணங்க வைக்கிறார்.
கடைசியில் பணக்காரரின் மனைவியையும் தன் ஆசைக்கு இணங்க வைக்கிறாராம். இதை ஒரு நாள் கண்டுபிடிக்கும் பணக்காரர் அனைவரையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். இதுதான் படத்தோட கதை. இந்தக் கதைக்குள் எத்தனை ஆபாச சீன் இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இதை எப்படி அனுமதிக்க முடியும். ஆனால் தாங்கள் அனுமதிக்காத படத்தை டில்லிக்குச் சென்று அனுமதி வாங்கி வந்துவிடுகிறார்கள். டில்லியில் என்ன நடக்கிறது என்றே எங்களுக்குத் தெரியவில்லை’ என்றார் ஒரு தணிக்கை குழு உறுப்பினர்.
அமலாவாக மாறிய அனகா
தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு கதாநாயகியை கனவுக் கன்னியாய் அடையாளம் காட்டும். அந்த வரிசையில், குறுகிய காலத்தில், குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து, இளசுகளின் இதயத்தில் இடம்பிடித்தவர் அமலா போல். தமிழ் சினிமாவின் ‘கேரள இறக்குமதியில், இவரும் சோடை போகவில்லை. 1991 அக்., 26ல், கொச்சியில் பிறந்தார். ஆசை யாரை விட்டது; அனகாவை, அமலாவாக மாற்றியது சினிமா. 2009 ல் ‘நீலதம்ரா’ மலையாளப் படத்தில் திரைக்கு வந்தார் அமலா.
‘தெய்வத் திருமகள்’, ‘வேட்டை’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ என இளைஞர்களை கிறங்கடிக்கும் பல அவதாரங்களை எடுத்தார். ‘உன் பூப்போட்ட பாவாடை போதும் எனக்கு; அதில் வெள்ளி விழா படம் காட்ட ஆசை எனக்கு, என அனைவரையும் உளற வைத்த அமலாவின் அசத்தல் முடிந்தபாடில்லை. ‘ஆகாஷிண்டே நிறம் என்ற மலையாளப் படத்தில் பிஸியாய் இருப்பதால் தமிழ் இயக்குனர்கள்
தவிக்கிறார்கள். பேச நேரம் இல்லாமல் தவிக்கும் அமலாவை, ‘பேஸ்புக் மூலம் தொடர்புகொண்ட போது, ‘மொத்தம் 13 படம் நடிச்சிருக்கேன். அதில் எட்டு, தமிழ் படம். என்னை தாங்கிப் பிடித்த தமிழ் சினிமாவை மறக்க முடியாது. தமிழில் கிடைத்த வரவேற்பு, தெலுங்கில் பெஜவாடா, லவ் பெய்லியர் வாய்பைத் தந்தது. ‘ஆகாஷிண்டே நிறம் முடிந்ததும், அங்கே (தமிழ்) தான் வருவேன் என அழகாய் ‘டைப் செய்திருந்தார். ‘அடடா... கண்ணுக்கு குளிர்ச்சி தர எப்போது வருவார் அமலா என காத்திருக்கும் ரசிகர்களுக்கு, நம் வழியாக அமலா போல் அனுப்பிய மெஜேச் ஆறுதல் தரட்டும்!
எனது இடம் அப்படியே இருக்கு
மீண்டும் பாக்கியராஜ்

சினிமா நவீனமயமாகி விட்ட இந்த காலத்தில், உங்களோட பழைய பாணி எடுபடுமா? என்ற கேள்விக்கு, அவர் அளித்த பதில், ஏன் எடுபடாது. தற்போது தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால், திரையுலகத்தையே திருப்பிப் போடுற மாதிரியோ, அசத்துற மாதிரியோ, யாரும் பெரிதாக, படம் எடுக்கவில்லை. தொழில்நுட்பம் வளர்ந்த அளவுக்கு, கதை சொல்லும் திறமை வளரவில்லை. இப்போதைய சினிமா, செக்குமாடு போல தான். ஒரே மாதிரியா சுத்தி வருது. தமிழ் சினிமால என் இடம் அப்படியே தான் இருக்குது. நிச்சயம் மறுபடியும் ஜெயிப்பேன். இவ்வாறு பாக்கியராஜ் கூறினார்.
ரகளபுரத்தில் கருணாஸ் ஹீரோவாக அங்கனா
திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் 3வது படம் ரகளபுரம். இப்படத்தில் கருணாஸ் ஜோடியாக அங்கனா நடிக்கிறார். கோவை சரளா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர பரத் ரெட்டி, எம். எஸ். பாஸ்கர், பவன், மயில்வாமி, சிங்கம்புலி, ஓ. ஏ. கே. சுந்தர், சஞ்சனாசிங், ரகசியா ஆகியோரும் நடிக்கிறார்கள்.பயந்த சுபாவம் உள்ள ஒரு பொலிஸ்காரரை பற்றிய படம் இது. அவர் தப்பாக எடுக்கும் முடிவுகள் எல்லாம் அவருக்கு சாதகமாக முடிகின்றன. அதனால் ஏற்படும் பிரச்சினைகள் தான் இப்படத்தின் கதை. சுந்தர் சி, சுராஜ், ஷக்தி சிதம்பரம் ஆகிய டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக இருந்த மனோ இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோவாக நடிப்பதுடன் தன்னுடைய கென் ஸ்டூடியோ சார்பில் கருணாஸே இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
No comments:
Post a Comment