விஜய், பிரபுதேவா,அசின் விருந்து

விஜய் வந்த விவரம் அறிந்ததும் அசினும் அங்கு சென்றார். மூவரும் விருந்து சாப்பிட்டபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய ‘போக்கிரி’ படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடித்தனர். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. எனவே மீண்டும் மூவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவது பற்றி பேசியதாக கூறப்படுகிறது.
பிரபுதேவா இந்தியில் தற்போது முன்னணி இயக்குநராக உள்ளார். அசினும் இந்தியில் நடிக்கிறார். தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு படத்தை இயக்கி அதில் விஜய், அசினை ஜோடியாக நடிக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவாஜpயின் பேரன் விக்ரம் பிரபு நடிக்கும் யானைகளின் ~கும்கி'
மைனா படத்தை தொடர்ந்து டைரக்டர் பிரபுசாலமன் இயக்கும் படம் ‘கும்கி’ காட்டு யானைகளை மையப்படுத்தி, யானைகள் ஏன் காடுகளை விட்டு கீழே இறங்கி கிராமங்களுக்கு வருகின்றன. அதற்கு தீர்வு என்ன என்பதுடன் ஒரு அழகான காதல் கதையையும் சொல்ல வருகிறது இந்த கும்கி.
இமான் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் பிரபு சொலமன், யு. டி. வி. யும், லிங்குசாமியின் திருப்பதி பேனர்ஸ் இணைந்து கும்கி படத்தை தயாரிக்கின்றனர்.
கும்கி படத்தை பற்றி டைரக்டர் பிரபு சொலமன் கூறும் போது, காட்டுக்குள் இருந்து ஊர் பக்கம் வருகிற யானைகளை விரட்டி அடிக்க மனிதனால் பழக்கப்பட்ட யானைக்கு கும்கி என்று பெயர். அந்த யானைகளின் வாழ்வியல் பின்னணியில் ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறேன். இது ஒரு பிரமாண்டமான காதல் படமாக இருக்கும்.
வனத்தையும், மனதையும் ஒருசேர தூண்டில் போட்டு தூக்கும் யானைகள் பொதுவாக 11 அடி உயரம் இருக்கும். தந்தம் ஐந்தரை அடி இருக்கும். அதற்கு பக்கத்தில் நின்றால், ஒருவர் கம்பீரமாக தெரிய வேண்டும்.அப்படி தெரிகிறார் விக்ரம். அவர்தான் யானையை குளிப்பாட்டுகிறார். அது தின்பதற்கு மட்டை போடுகிறார். செல்லம் கொஞ்சுகிறார்.
அவரை, யானை தும்பிக்கையில் தூக்கிக்கொண்டு போகிறது. படப்பிடிப்பு முடிந்தால், அந்த யானையை அன்பாக அதட்டி லொறியில் ஏற்றி அனுப்பி வைக்கிற வரை எல்லாமே விக்ரம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றார்.
சுட்டி பையனும் நான்கு திருடர்களும்

இதில் விஜய் டி. பி. புகழ் ஸ்ரீகாந்த் சுட்டிப் பையனாகவும், மகாநதி சங்கர், ரோபோ சங்கர், சுருளி மனோகர், கிங்காங் ஆகிய 4 பேரும் சிரிப்பு திருடர்களாகவும் நடிக்கிறார்கள். இவர்களின் தலைவனாக ஜாஸ்பர் நடிக்கிறார்.
மற்றும் பயில்வான் ரங்கநாதன், லொள்ளு சபா உதய், கலக்கப்போவது யாரு புகழ் அர்ஜூன், சாய்பிரகாஷ், சாய்பிரியா, லதாராவ், மனோரஞ்சிதம், பாக்கியாஞ்சலி ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவாஜி இயக்குகிநார். ஆர். வாணிஸ்ரீ, ஆர். சிவம், ஆர் செல்வன் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள்..
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஜெயஸ்ரீயின் மகள் ஜெயசித்ரா
சீஞ்சலிதேவியின் மகளாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து 200 படங்களுக்கு மேல் நடித்தார்.
ஜெயசித்ராவின் தாயாரும் நடிகைதான். அந்த காலகட்டத்தில் ஜெயஸ்ரீ பிரபல நடிகையாக விளங்கினார். அவர் 1954 ஆம் ஆண்டு ‘ரோஜலு மாராயி’ (தெலுங்கு ‘காலம் மாறிப்போச்சு’) படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அன்னதாத்தா, டைகர்ராமுலு உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்தார்.
1955 ஆம் ஆண்டு ‘மகாவீரபீமன்’ என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் திரெளபதியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின்னர் ‘தெய்வபலம்’, ‘சிவகாமி’ உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். மொத்தம் 40 படங்கள் வரை நடித்து இருக்கிறார்.
திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு ஜெயஸ்ரீ திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். பின்னர் தனது குழந்தையான ஜெயசித்ராவை நன்றாக வளர்க்கவேண்டும். நிறையப்படிக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.
இந்த நிலையில் 5 வயது குழந்தையாக இருந்த போது ‘பகதபோதனா’ என்ற தெலுங்கு படத்தில் நடிகை அஞ்சலி தேவிக்கு மகளாக ஜெயசித்ரா நடித்தார்.
ஜெயசித்ரா படிக்கும் போதே நாட்டியமும் கற்று வந்தார். பரதநாட்டியத்தை முழுமையாக கற்றுக்கொண்டபின், ஜெயசித்ராவின் 11 வது வயதில் நாட்டிய அரங்கேற்றம் சென்னை வாணிகமகாலில் நடந்தது. நடன் அரங்கேற்றத்துக்கு சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.
முழுக்க முழுக்க படிப்பிலேயே ஆர்வம் காட்டி வந்த ஜெயசித்ராவிற்கு நடிகையாகும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அவரோ சினிமாவில் நடிக்க சிறிதும் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் 7ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த ஜெயசித்ராவை விட்டலாச்சாரியா தனது படத்தில் நடிக்கவைக்க நினைத்தார். ஒரு தெலுங்கு படத்திற்கு நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க வைக்க ‘கெமரா டெஸ்ட்’ எடுத்தனர். ஆனால் உருவத்தில் குமரிப் பெண்ணாக இருந்தாலும் குரல் இன்னும் குழந்தைக் குரலாக இருக்கிறது என்றும் கூறி ‘நீ இப்போது நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க முடியாது. பிறகு வாய்ப்புத் தருகிறேன்’ என்று கூறிவிட்டார் விட்டலாச்சாரியார்.
திரைத்துறைக்கு வந்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:
‘நான் சென்னை வித்யோதயா பள்ளியில் 11ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எனது தாயார் என்னை படிக்கவைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். நான் வழுவூர்ராமையா பிள்ளை மகன் சாம்ராஜிடம் பரதநாட்டியமும், சின்ன சத்தியம் மாஸ்டர், எம்.எஸ். சைவா ஆகியோரிடம் குச்சுப்புடி நடனமும் கற்றேன்.
இந்த நிலையில்தான் விட்டலாச்சாரியாவின் பீதலபாட்லு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு அப்போது நடிக்க ஆர்வம் இல்லை. அந்த சமயத்தில் 7ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். படத்தில் நடிப்பதற்காக கெமரா டெஸ்ட் எடுத்தனர். நான் பேசும்போது தொண்டை கீச், கீச் என்றதால் ‘இன்னும் குழந்தைத்தனம் போகவில்லை. பிறகு வாய்ப்பு தருகிறேன்’ என்றார் விட்டலாச்சாரியார்.
அதன் பின்னர் டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த போது அழைத்துச் சென்று இரண்டு வசனங்களை பேசச் சொன்னார். நானும் பேசினேன். நான் பேசியதை கேட்டு சந்தோஷப்பட்ட டைரக்டர், ‘தமிழ் நாட்டிற்கு ஒரு சிறந்த கதாநாயகி கிடைத்துவிட்டார்’ என்று படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் அழைத்து மகிழ்ச்சி பொங்க கூறினார்.’
இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.
குறத்தி மகனில் நடிக்க ஒப்பந்தம் செய்த போதுதான், ‘ஜெயசித்ரா’ என்ற பெயரை கோபாலகிருஷ்ணன் சூட்டினார். இந்தப் படத்தில் குறவர் இனத்தைச் சேர்ந்த இளைஞனை பணக்காரரின் மகளான ஜெயசித்ரா விரும்புவார். இந்தக் காதலை தந்தை ஏற்காததால், ஜெயசித்ரா குறத்தி வேடம் போட்டுக்கொண்டு காதலனுடன் சென்றுவிடுவார். இப்படத்தில் ஜெயசித்ரா துருதுருவென்று நடித்து ரசிகர்களிடம் ‘சபாஷ்’ பெற்றார்.
பலியான ~வாங்கோண்ணா' புகழ் ராணி சந்திரா
பத்ரகாளி என்ற படத்தின் கதாநாயகியாக நடித்தவர் ராணி சந்திரா. இவர் கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தந்தை பெயர் சந்திரன். தாயார் காந்திமதி. 1965 ஆம் ஆண்டில் கேரள அழகு ராணியாக (‘மிஸ் கேரளா’) ராணி சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.தைத்தொடர்ந்து, மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அஞ்சு சுந்தரிகள்’, ‘சொப்னாடம்’ உட்பட சுமார் 60 மலையாளப்படங்களில் நடித்தார். சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதையும் பெற்றார். தமிழ்ப்பட உலகில் புகழ் பெற வேண்டும் என்பது ராணி சந்திராவின் ஆசை. ‘பொற்சிலை’, ‘தேன் சிந்துதே வானம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார். சிறு வேடங்கள். படங்களும் பெரிதாக ஓடவில்லை.
எனவே, தமிழ்ப்பட உலகில் ராணி சந்திராவுக்கு சரியான அறிமுகம் கிடைக்கவில்லை. 1976 இல் ‘பத்ரகாளி’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரிக்க, டைரக்டர் திருலோகசந்தர் ஏற்பாடு செய்தார்.
எழுத்தாளர் மகரிஷி எழுதிய கதை. வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். பிராமண குடும்பத்தில் நடப்பது போன்ற கதை. கதாநாயகனாக நடிக்க சிவகுமார் ஒப்பந்தமானார். கதாநாயகியாக நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடினார்கள். கடைசியில் ராணி சந்திராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
திறமையும், அழகும் கொண்ட ராணி சந்திராவை ‘காயத்ரி’ என்ற புதிய பெயரில் அறிமுகப்படுத்த திருலோகசந்தர் முடிவு செய்தார். படப்பிடிப்பு வேகமாக நடந்தது. படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில காட்சிகளே பாக்கி. இந்த சமயத்தில் விதி விளையாடியது. டுபாயில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டுபாய் நாட்டுக்கு ராணி சந்திரா (வயது 22) சென்றார்.
அவருடன் தாயார் காந்திமதி, தங்கைகள் அம்புலி (வயது 19), சீதா (18), நிம்மி (13) ஆகியோரும் சென்றார்கள். கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு, விமானத்தில் ராணி சந்திரா திரும்பினார். விமானம் பம்பாய்க்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் பழுது ஏற்பட்டு இருந்ததால் வேறு விமானத்தில் இவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.
11.10.1976 நள்ளிரவு 1.40 மணிக்கு (அதாவது 12ம் திகதி அதிகாலை) விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் தீப்பிடித்து விமான நிலையத்திலேயே நொறுங்கி விழுந்தது. விமானத்தில் மொத்தம் 95 பேர் இருந்தார்கள். அனைவரும் கருகி மாண்டனர். ராணி சந்திராவுடன் அவர் தாயாரும், 3 தங்கைகளும் இறந்துபோனார்கள்.
ராணி சந்திராவின் கலைக்குழுவில் இடம்பெற்றிருந்த ஜெயலட்சுமி (பாடகி), சி.கே. கிருஷ்ணகுட்டி (மத்தளம்), எம்.கோதண்டராம் (மிருதங்கம்), பி.எஸ். மாணிக்கம் (ஆர்மோனியம்) ஆகியோரும்பலியானார்கள்.
இதே விமானத்தில் பயணம் செய்த தமிழக சட்டசபை முன்னாள் உறுப்பினரும், காமராஜர் தலைமையிலான பழைய காங்கிரஸ் கட்சித் தலைவருமான பொன்னப்ப நாடாரும் (வயது 53) பலியானார்.
இவர், 1971 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராணி சந்திராவின் உடலும், அவருடைய தாயார், 3 தங்கைகள் உடல்களும் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டன. உடல்களைப் பார்த்து ராணி சந்திராவின் தந்தை சந்திரன், சகோதரர் ஜாஜி, மூத்த சகோதரி ஆயிஷா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
திரை உலகினர் திரளாக வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். உடல்கள் நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.
இதற்கிடையே ‘பத்ரகாளி’ படத்தை முடிப்பது எப்படி என்று டைரக்டர் திருலோகசந்தர் தீவிரமாக ஆலோசித்தார். கதையை மாற்ற முடியாது. ராணி சந்திரா சம்பந்தப்பட்ட ‘கிளைமாக்ஸ்’ காட்சியை படமாக்கியே தீர வேண்டும். இந்த இக்கட்டான நிலையில் ராணி சந்திரா மாதிரி தோற்றமுள்ள துணை நடிகை யாராவது கிடைப்பாளா என்று அலசிப் பார்த்தார்.
இறுதியில், ஏறக்குறைய ராணி சந்திரா போலவே தோற்றம் உள்ள புஷ்பா என்ற நடிகை கிடைத்தார். அவரை வைத்து இறுதிக் காட்சிகளைப் படமாக்கினார் திருலோகசந்தர். டைரக்டர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் திறமையால் அக்காட்சிகளில் ராணி சந்திராவுக்கு பதிலாக வேறொரு நடிகை நடித்திருக்கிறார் என்று யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.
படம் 10.12.1976 அன்று ரிலீஸ் ஆயிற்று. பொதுவாக, படம் வெளியாவதற்கு முன் அதன் முக்கிய நட்சத்திரம் இறந்து போனால் அந்தப் படம் சரியாக ஓடாது. இதற்கு முன் உதராணங்கள் பல உண்டு.
ஆனால் ‘பத்ரகாளி’ படம் பிரமாதமாக ஓடியது. அதில் அசல் பிராமணப் பெண்ணாகவே மாறி, ‘வாங்கோண்ணா....’ என்று சிவகுமாருடன் ஆடிப்பாடிய ராணி சந்திராவைப் பார்த்தவர்கள், ‘இவ்வளவு அழகான திறமையான நடிகைக்கா இத்தகைய சோக முடிவு’ என்று கண்கலங்கினர்.
போதையில் மிதந்த மேதையின் உள்ளத்தில் உதித்த பாடல்கள்
இன்றும் எம் உதடுகள் முணுமுணுக்கும்\

உண்ணும் அழகைப்
பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே
விழித்திருப்பாயே
கண்ணை இமை போல்
காத்திருப்பாயே
காதல் கொடியே கண் துயில்வாயே
என்ற அடிகள் இவை. பாலும் பழமும் படத்தில் அமரர் சிவாஜிகணேசனின் நடிப்பாற்றலால் பெருமைபெற்று இன்றும் இதழ்களில் நடமாடிக் கொண்டிருக்கின்றன.
இதேபோல் ஒரு சமயம் இவர் பகவத் கீதைபடித்ததுக் கொண்டிருந்த போது இதயத்தைக் கவர்ந்த ஒரு தத்துவம், காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் ஆனது.
இன்னுமொரு சமயம் எழும்பூர் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த வேளை கண்ட காட்சி ‘சட்டி சுட்டதடா கைவிட்டதடா’ ஆனது. பாவமன்னிப்பு படத்தில் ஒருகாட்சி, கதாநாயகன் அனாதையாகி அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் மனம் குலைந்த நிலை இதற்கு ஏற்றாற் போல் பாடல் ஒன்றினை எழுத வேண்டும் சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கவிஞரின் கம்பெனிக்கு கடன் வசூலிக்க ஆள் வந்திருக்கிறார் என்ற செய்தி அது கவிஞரோ இருதலைக் கொள்ளி எறும்பானார். உடனே எழுதுகோல் காகிதத்தில் தள்ளாடியது.
சிறிது நேரத்தில் சிந்தனை வரிகள் அங்கே கொட்டிக்கிடந்தன. ‘சிலர் சிரிப்பார் சிலர் அழுவார். நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ எத்தனை அருமையான தத்துவம்.
கவிஞர் கண்ணதாசன் சாதாரணமாக இருப்பதை விடவும் போதையில் இருக்கும் நேரம்தான் அதிகம். அந்தமேதை இவ்வளவு விரைவில் எம்மிடம் விடைபெறவும் இதுவே காரணமாகியது.
இந்திய சுதந்திர வெள்ளி விழா தொடர்பான கவிரயரங்கம் கவிஞரின் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை அரங்கிலே பாடிய ஒரு கவிஞர் ‘தலைமையில் வீற்றிருக்கும் கவிஞர் குடிப்பதை இனி நிறுத்த வேண்டும்’ என்ற தோரணையில் வார்த்தைகளையும் சேர்த்துப் பாடினார். அதற்கு கவிதையிலேயே பதிலளித்த கவிஞர் கண்ணதாசன்,
நாளை முதல்
குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
ராத்திரிக்கு தூங்க வேணும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்’ என்றார்.
இதுவே ஒரு படத்தின் பாடலாகவும் பிற்காலத்தில் ஒலித்தது.
ஒரு சமயம் அறிஞர் அண்ணா தனது கழக நண்பரிடம் எங்கிருந்து வருகிaர்கள் என்று கேட்டார் அப்போது அவர் நான் கருவூரிலிருந்து வருகிறேன் என்றார். அதைக் கேட்ட அண்ணா எல்லோருமே கருவூரிலிருந்து சாவூருக்குப் போகிறவர்கள்தான் என்றார். அருகிலிருந்த கண்ணதாசன் இந்த வார்த்தைகளை மிகவும் ரசித்தார். இந்த ரசனையின் பிரதிபலிப்பான எழுந்தது காட்டு ரோஜா மூலம் உள்ளங்களைத் தொட்ட எந்த ஊர் என்றவனே என்ற பாடல்.
இப் பாடலிலே கருவூர் உடலூர், உறவூர், காளையூர், கன்னியூர், வேலூர், விழியூர், கையூர், காலூர், மேட்டூர், பள்ளத்தூர் என்று 18 ஊர்களைப் பற்றிப் பாடி மனித வாழ்க்கையின் தத்துவத்தை அப்பாடல் மூலம் ஊரவிட்டுள்ளார்.
கவிஞர் கண்ணதாசம் பற்றி அவரது புலமை பற்றி அவரது தத்துவம் பற்றி சொல்வதென்றால் விடிய விடிய யுகம்யுகமாக பேசலாம். அத்தனை பெருமை வாய்ந்தது. அவரது கவித்துவம்.அவர் வசன கர்த்தாவாக, கதாசிரியராக, படத் தயாரிப்பாளராக, நடிகராக சினிமா உலகிலே பல பரிமாணங்களில் சஞ்சரித்த போதிலும் பாடலாசிரியர் என்ற பாத்திரம் தான் மக்கள் உள்ளங்களில் அவரை நிரந்தரமாக்கியது
கன்னியின் காதலி படத்தில் ‘கலங்காதிரு மனமே’ என்று தொடங்கிய அவரது சினிமா வரிகள் மூன்றாம் பிறை படத்தில் கண்ணே கலைமானே’ என்ற வரிகளோடு அமரத்துவம் பெற்றன. அதற்கிடையில் எத்தனை தத்துவங்களை எத்தனை ரசனைகளைப் பிழிந்துமானிடக் குருதியில் கலக்கச் செய்துள்ளார் என்பதை சிந்திக்கவே காலம் போதாது.
அவர் இயற்றிய பாடல்களில் மிகவும் குறுகிய நேரத்தில் அதாவது பத்தேபத்து நிமிடங்களுக்குள் எழுதி முடித்த பாடல் ‘முத்தான முத்தல்லவோ’ என்ற பாடலாகும்.
நீண்ட காலம் அதாவது பல நாள் சிந்தனையை செலவிட வேண்டி ஏற்பட்ட பாடல் ‘நெஞ்சம் மறக்கவில்லை அது நினைவை இழக்கவில்லை’ என்ற பாடலாம்.
கவிஞர் பாடல் வரிகளைக் கூறும் போது வேட்டியின் ஒரு நுனியைக் கையில் ஏந்தியவாறு அறைக்குள் நடந்த வண்ணமே சொல்லுவாராம். பாடல் வரிகளைக் கூறும் போது அவர் செருப்பு அணிய மாட்டாராம். மதம், தத்துவம், காதல், காமம், அரசியல், சோதிடம் போன்ற துறைகளில் பெருமளவு நூல்களை எழுதியுள்ள இவரிடம், ஒருமுறை நீங்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? என்று கேட்கப்பட்ட போது அவர் ‘நூலைப் பின்பற்றுங்கள் ஆனால் நூலாசிரியரைப் பின் பற்றாதீர்கள்’ என்று பதில் சொன்னாராம்.
தென் இந்தியாவின் சிறுகூடல்பட்டி ஊரிலே பிறந்த இவர் அமெரிக்க நாட்டின் சிக்காக்கோ நகருக்கு வைத்திய சிகிச்சை பெறச் சென்றிருந்த போது அங்கு வைத்தே உயிர் நீத்தார்.
அவர் சிகிச்சைபெறச் சென்றிருந்த சமயத்தில் அங்கு வாழும் இந்தியக் குழந்தைகளைச் சந்தித்த போது அவருக்கு பெரும் ஆதங்கம் ஏற்பட்டதாம். அதற்குக் காரணம் தமிழ்க் குழந்தைகள் தமிழ் மொழியில் பேசாமையாம் இதைக் கண்டு வேதனையில் எழுதிய கவிதை வரிகளே அவரது வாழ்க்கையில் எழுதிய இறுதி நான்கு வரிகள்.
மனதனில் ஒன்றுபட்டு சேர்ந்திடுவீர் - இங்கு
மழலைகள் தமிழ் பேசச் செய்திடுவீர்
தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற
தமிழையும் விட்டு விட்டால் வாழ்க்கையில்லை
என்பது தான் அந்த வரிகள் தமிழ் மீது கவிஞர் கொண்டிருந்த பற்றுக்கு இதுவும் ஒரு சான்று.
தொட்டில் முதல் சுடுகாடு வரையிலான தத்துவங்களைப் பொதித்த - வாழ்க்கையின் வளைவுகளை நெளிவுகளை கழிவுகளை வார்த்தைகளில் வடித்த காலத்தால் அழியாக கவிஞரை இனி என்று காண்போம்.
No comments:
Post a Comment