தமிழ் நாட்டு மர்லின் மன்றோ’
ஹீமிழ்ப்பட உலகில் எத்தனையோ கவர்ச்சிக்கன்னிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து, கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர், ‘சில்க்’ சுமிதா, அவருடைய தொடக்க காலம் சோதனை மிக்கதாக இருந்தது போலவே, இறுதிக்காலமும் சோகமானதாக அமைந்தது.
சில்க் சுமிதாவை ரசிகர்கள் ‘தமிழ் நாட்டு மர்லின் மன்றோ’ என்று அழைப்பது உண்டு. கிட்டத்திட்ட இரு நடிகைகளின் வாழ்க்கையும் ஒரே மாதிரிதான் அமைந்தது. சில்க் சுமிதாவின் சொந்த ஊர் ஆந்திராவில் ராஜமகேந்திரபுரம் அருகே உள்ள பேவாலி என்ற கிராமம். தாயார் பெயர் நரசம்மா. குடும்பம் ஏழ்மையில் தவித்தது. அதன் காரணமாக நான்காம் வகுப்பு வரைதான் சுமிதா படித்தார்.
‘சினிமாவில் சேர்ந்தால் நிறைய பணம் வரும். கஷ்டம் தீரும்’ என்று நினைத்த சுமிதா, 12 வது வயதில் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்தார். சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில், வேலை கேட்டு அலைந்தார். பல சோதனைகளை அனுபவித்தார்.

டைரக்டர் கே. விஜயன் தயாரித்த ‘வண்டிச்சக்கரம்’ என்ற படத்தில் சாராயம் விற்கும் ‘சில்க்’ என்ற பெண்ணாக நடித்தார். அந்தப் படத்தில் அவர் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அது முதல் ‘சில்க்’சுமிதா ஆனார்.
பாரதிராஜா தயாரித்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்து புகழ் பெற்றார். ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமலஹாசனுடன் கவர்ச்சி நடனம் ஆடினார். ‘நேற்று ராத்திரி..... யம்மா’ என்ற பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம், ரசிகர்களைத் தாளம் போட வைத்தது.
பாலுமகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’ படத்தில், ‘உருகுதே....’ என்ற பாடலுக்கு சுமிதா நடனம், ரசிகர்களை உருக வைத்தது. அந்தக் காலகட்டத்தில், சுமிதாவின் கவர்ச்சி நடனம் இருந்தால் ஓடாத படமும் ஓடும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால் ஓய்ச்சல் ஒழிவு இன்றி ஏராளமான படங்களில் நடித்தார்.
அவர் பெயரை வைத்தே ‘சில்க் ..... சில்க்.... சில்க்’ என்ற படம் வெளிவந்தது.
குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில், 300 க்கும் மேற்பட்ட படங்களில் சுமிதா நடித்து முடித்தார். லட்சக்கணக்கான ரசிகர்களை ஏங்க வைத்த சுமிதா, திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆயினும் விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் அவர் ஒரு தாடிக்காரருடன் காணப்பட்டார்.
அவர் பெயர் ராதாகிருஷ்ணமூர்த்தி, 33 வயது சில்க் சுமிதாவும், 48 வயது ராதாகிருஷ்ணமூர்த்தியும், ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ராதாகிருஷ்ணமூர்த்தி ‘எம்.பி.பி.எஸ்’ படித்த டாக்டர்.
இருவரைப் பற்றியும், பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வெளிவந்தபோது அது பற்றி சுமிதா கவலைப்படவில்லை. ‘நாங்கள் கணவன் மனைவியாகத்தான் வாழ்ந்து வருகிறோம்’ என்று சுமிதா பகிரங்கமாக அறிவித்தார்.
டொக்டர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஒரு மகன், மகள் உண்டு. மகளின் குழந்தை பெயர் உத்ரா, 3 வயது, அந்தக் குழந்தை மீது ‘சில்க்’ சுமிதாவுக்கு கெள்ளைப் பிரியம். படப்பிடிப்பு இல்லாதபோது, அந்தக் குழந்தையுடன்தான் இருப்பார். தூங்கும் போது கூட, அந்தக் குழந்தையை தன் அருகே படுக்க வைத்துத் தூங்குவது வழக்கம்.
22.09.1996 இரவு 11 மணிக்கு சுமிதா வழக்கம் போல அந்தக் குழந்தையுடன் தனது படுக்கை அறைக்குச் சென்றார். குழந்தையை பக்கத்தில் படுக்க வைத்து தூங்கினார். அந்த படுக்கை அறைக்கு முன்புறம் ஒரு வழியும், பின்புறம் ஒரு வழியும் இருக்கிறது. இரண்டு பக்க அறைக்கதவையும் உள்பக்கம் தாழ்பாள் போட்டு இருந்தார்.
மறுநாள் காலை 8 மணி அளவில் சில்க் சுமிதாவுடன் படுத்திருந்த குழந்தை உத்ரா வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து கேட்கவே, பக்கத்து அறையில் படுத்து இருந்த ராதாகிருஷ்ணமூர்த்தி எழுந்து வந்தார்.
கீழ் அறையில் படுத்து இருந்த ராதாகிருஷ்ணமூர்த்தியின் மகன் ராமுவும் எழுந்து வந்தார். இருவரும் சில்க் சுமிதாவின் அறைக்கதவை ‘பட பட’வென தட்டினார்கள். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. குழந்தையின் அழுகை சத்தமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
இதனால் இருவரும் சந்தேகம் அடைந்து வீட்டின் பின்பக்கமாக ஓடினார்கள். பிறகு ஏணி மூலம் பின்பக்கமாக ஏறி சில்க் சுமிதாவின் படுக்கை அறை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அங்கே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கை அறையில் உள்ள மின்சார விசிறியில் சில்க் சுமிதா தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.
வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்?
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
படம் : இரு வல்லவர்கள்
பாடியவர் : டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர் : கவிஞர் கண்ணதாசன்
ஆண்டு : 1966
No comments:
Post a Comment