Saturday, May 11, 2013

நஸ்ரியா சீமுக்கு நல்ல காலம்

தனுஷ் நடித்து வரும் நையாண்டி படத்துக்கு கதாநாயகி கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்தார் அப்படத்தை இயக்கும் களவாணி சற்குணம், காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா, அமலாபால் என்று பலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவர், யாருமே தான் சொன்ன திகதிகளில் ப்ரியாக இல்லாததால், நமக்கேற்ற ஒரு புதுமுகத்தை தேடுவோம் என்று மும்பை, பெங்களூர் என்று வலை வீசி தேடிக் கொண்டிருந்தார்.
அப்போதுதான், நயன்தாரா சாயலில் ஒரு அழகான மலையாள நடிகை இருக்கிறார். அதுவும் தமிழில் நேரம் என்றொரு படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்று செய்தி வர, உடனடியாக சென்று பார்த்த சற்குணம், அந்த இடத்திலேயே நஸ்ரியாவை தன் படத்துக்கு ஒ.கே. செய்து விட்டார்.
இந்த நிலையில், நஸ்ரியாவை அடுத்தடுத்து புக் பண்ணியிருக்கும் முன்னணி இயக்குனர்கள், அவரை பார்த்துவிட்டு, இந்த நடிகைக்கு தமிழில் ஒரு பெரிய இடம் இருக்கு என்று ஆரூடம் சொல்லி வருகின்றனர். இதனால் சந்தோசத்தின் உச்சாணியில் இருக்கும் நஸ்ரியா நசீம், இதுவரை மலையாளத்தில் முகாமிட்டு தமிழ்ப்படங்களில் நடித்துவருபவர், விரைவில், கோடம்பாக்கத்தில் வீடுபார்த்து குடியேறப்போவதாக கூறி வருகிறார்.

No comments:

Post a Comment