
அப்போதுதான், நயன்தாரா சாயலில் ஒரு அழகான மலையாள நடிகை இருக்கிறார். அதுவும் தமிழில் நேரம் என்றொரு படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்று செய்தி வர, உடனடியாக சென்று பார்த்த சற்குணம், அந்த இடத்திலேயே நஸ்ரியாவை தன் படத்துக்கு ஒ.கே. செய்து விட்டார்.
இந்த நிலையில், நஸ்ரியாவை அடுத்தடுத்து புக் பண்ணியிருக்கும் முன்னணி இயக்குனர்கள், அவரை பார்த்துவிட்டு, இந்த நடிகைக்கு தமிழில் ஒரு பெரிய இடம் இருக்கு என்று ஆரூடம் சொல்லி வருகின்றனர். இதனால் சந்தோசத்தின் உச்சாணியில் இருக்கும் நஸ்ரியா நசீம், இதுவரை மலையாளத்தில் முகாமிட்டு தமிழ்ப்படங்களில் நடித்துவருபவர், விரைவில், கோடம்பாக்கத்தில் வீடுபார்த்து குடியேறப்போவதாக கூறி வருகிறார்.
No comments:
Post a Comment