பி. சரோஜாதேவி (பிறப்பு 7 ஜனவரி 1938). அவர் ஒரு இந்திய நடிகை. அவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளா். அவர் அறுபதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார்; 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி பைரப்பா, ருத்ரம்மா ஆகியோரின் 4-வது மகளாக ராதாதேவி என்ற இயற்பெயருடன் பிறந்தாா். இவருக்கு சரஸ்வதிதேவி, பாமாதேவி, சீதாதேவி, என்ற மூன்று அக்காவும் வசந்தாதேவி என்ற ஒரு தங்கையும் உள்ளனா். இவா் ராதாதேவி என்ற பெயரை திரை உலகிற்காக சரோஜாதேவி என்று பெயரை மாற்றி கொண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் (1955) கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற சரோஜாதேவிக்கு, தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித்தந்த படம் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் (1958).
No comments:
Post a Comment