Monday, July 22, 2019

எனக்கு ஆர்மோனியப் பெட்டிதான் நண்பன்



எனக்கு ஆர்மோனிய பெட்டிதான் நண்பன் என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.
இசைஞானியுடன் ஓர் இசைமாலை என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி அக்கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:
என்னுடன் நண்பர்களாக பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. எனக்கு ஆர்மோனியப் பெட்டி தான் நண்பன். இந்த ஆர்மோனியப் பெட்டியை கோவை, உக்கடத்தில் ரூ.60-க்கு எனது அண்ணன் வாங்கினார். இதில் பயிற்சி பெற்றுத்தான் இசையமைப்பாளராக முடிந்தது. என்னிடம் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் இந்த ஆர்மோனியப் பெட்டிதான்.
ஒரு பாடல் நல்ல கருத்தையும், உணர்வையும் கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது பாடல் இல்லை.
பாடல் பாடும் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆலோசனைகள் சொல்ல முடியாது. அது பாடுபவர்களைப் பொருத்து மாறுபடும். நான் எதிர்பார்த்தபடி இதுவரை பாடல்கள் எதுவுமே அமைந்ததில்லை. ஒவ்வொரு பாடலிலும் எங்காவது தவறு இருக்கும். இசையில் அனைத்து செல்வங்களும் இருக்கின்றன. அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.இசையில் வெற்றி, தோல்வி என்பது கிடையாது என்றார்.
 

No comments:

Post a Comment