"அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பாடல் வரிகள் எழுதும்போது கமல், காதல் தோல்வியை மையப்படுத்தி ஒரு பாட்டு எழுதுங்கள் என்று வாலியிடம் சொல்லியிருக்கிறார். அவரும் சுமார் 5 பாடல்களை கமலுக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால் கமல் திருப்திபடவில்லை. பின்னர் இறுதியாக 6வதாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் கொடுத்து, இதுக்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என்று சொல்லியுள்ளார். அந்தப்பாடல் தான் 'உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்' என்ற பாடல்... அந்தப்பாடல் தான் தேசிய விருது பெற்றது." அதேபோல, மன்னன்' படத்துக்காக வாலி எழுதிய, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே...' பாடலின் வரிகள், தாய்மையின் மேன்மையை உணர்த்துகிறது என்று பாராட்டி, திருச்சியிலுள்ள ஐயப்பன் கோவிலில் அந்தப் பாடல் வரிகள் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது. வேறெந்த கவிஞருக்கும் கிடைக்காத மணிமகுடம்.
15, 000-க்கு மேல் பாடல்களை எழுதி இருக்கிறார் வாலி. இது இல்லாமல் தனிப்பாடல்கள் வேறு. 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். அத்துடன் `பொய்க்கால் குதிரை, `சத்யா', `பாத்தாலே பரசவம்', `ஹே ராம்', என நான்கு படங்களில் நடித்தும் இருக்கிறார் வாலி!. இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை கவிஞர் வாலி எழுதி இருக்கிறார். அவற்றுள் ‘அவதார புருஷன்', ‘பாண்டவர் பூமி', ‘ராமானுஜ காவியம்', ‘கிருஷ்ண விஜயம்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வாலி பத்மஸ்ரீ விருது, 5 முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்று இருக்கிறார்.
No comments:
Post a Comment