Monday, June 25, 2018

இஸ்லாமிய தந்தை- இந்து தாயின் மகள் ஜரீனா மொய்து?




ஓர் இஸ்லாமிய தந்தைக்கும் ஓர் இந்து தாய்க்கும் மலையாள குடும்பத்தில் மும்பையில் 24.10.1966ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நதியா மொய்து. இவரது இயற்பெயர் ஜரீனா மொய்து. இவரது தந்தையின் சொந்த ஊர் கேரளத்திலுள்ள தலஷேரி. தாயாரின் ஊர் திருவல்லா.
தமிழ், மலையாளம், தெலுங்கு என மும்மொழிகளிலும் கதாநாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர் நதியா.
இவரது முதல் படம் மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் 1984இல் வெளிவந்த ‘நோக்கெத்தா தூரத்து கந்நும் நட்டு’ என்ற படம். இதே படம் 1985இல் ‘பூவே பூச்சூடவா’ என்ற பெயரில் வெளிவந்தது. இவ்விரு படங்களுமே வெற்றி வாகை சூடியதால் இவர் எடுத்த எடுப்பிலேயே முன்னணி கதாநாயகியாக ஒளி வீசினார்.
1984 தொடங்கி 1994 வரை முதல் சுற்றில் தமிழிலும் மலையாளத்திலும் நடித்து வந்தார். தமிழில் ராஜாதி ராஜா, உயிரே உனக்காக, பூக்களைப் பறிக்காதீர்கள், நிலவே மலரே, சின்னத்தம்பி பெரிய தம்பி போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
1988இல் மும்பையைச் சேர்ந்த ஷ்ரீஷ் கோட்பொலே என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஷனம், ஜனா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பின்னும் நடிப்பைத் தொடர்ந்தார். 1994-ராஜகுமாரன் என்ற தமிழ்ப் படத்தில் இவர் நடித்ததுதான் கதாநாயகியாக நடித்த கடைசிப் படம்.
2001-க்குப் பின் கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்கா சென்று அங்கு வசித்து வந்தார். பின்னர் சிறிது காலம் இலண்டனில் வசித்து வந்தார். தற்போது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் இரண்டாவது சுற்றில் 2004-இல் தமிழில் எம்.குமரன் சன் ஒஃப் மஹாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார். அதிலிருந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் மகா திமிர் பிடித்தவரென திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் கூறப்படுவதுண்டு.

No comments:

Post a Comment