பிக் பொஸ் 2 நிகழ்ச்சி குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கிடைத்துள்ளன.
பிக் பொஸ் 2 நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. முதல் சீசனை போன்றே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் பிக் பொஸ் வீட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் சில சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.
வாஸ்து பார்த்து பிக் பொஸ் வீட்டு செட்டை போட்டுள்ளார்களாம். கடந்த சீசன் போன்று இல்லாமல் இந்த சீசனில் முற்றிலும் வித்தியாசமான வீடாக உள்ளதாம். இந்த சீசனில் நீச்சல் குளம் அருகே சிறை ஒன்றை அமைத்துள்ளார்களாம்.
இந்தி பிக் பொஸ் வீட்டில் சிறை இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழ் பிக் பொஸ் வீட்டு சிறையில் கழிப்பறை வசதி கிடையாது. இம்முறை தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் சீஸனில் போட்டிகளில் தோற்றவருக்குத் தண்டனையாக அவர்மீது முட்டையை உடைத்து ஊற்றுவது, அரிசி மாவை ஊற்றுவது, மிளகாய்ப்பொடியைக் கரைத்து ஊற்றுவது, நீச்சல் குளத்துக்குள் தள்ளி விடுவது போன்றவை இருந்தன. ஆனால், இந்த முறை தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும் போலிருக்கிறது.
காரணம், இந்த முறை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் ஜெயில் செட்டும் போடப்பட்டுள்ளது. அதற்குள் இரும்பாலான ஒரு கட்டில் மற்றும் மேசை, விளக்கு மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. எனவே சிறைத் தண்டனைக்கு உள்ளாகுபவர்கள், மெத்தை, தலையணை, போர்வை, ஏசி என எதுவுமே இல்லாமல் வெறும் கட்டிலில்தான் தூங்க வேண்டும்.
யார் யார் இந்தத் தண்டனைக்கு உள்ளாகின்றனர், எந்தப் போட்டியில் தோற்றவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கடந்த சீசனை போன்று இல்லாமல் இந்த சீசனில் 8 பெண் போட்டியாளர்கள், 8 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 16 பேராம். கடந்த சீசனில் 8 ஆண் போட்டியாளர்கள், 7 பெண் போட்டியாளர்கள் என 15 பேர் கலந்து கொண்டனர். அது போக வைல்ட் கார்ட் மூலம் நான்கு பேர் வந்தனர். இதற்காக ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் ‘பிக் பொஸ்’ வீடு செட் அமைக்கப்பட்டுள்ளது.
பிக் பொஸ் 2 சீசனை 100 நாட்களுக்கு மேல் நடத்த முடிவு செய்துள்ளார்களாம். வீட்டில் பேய் எதுவும் வந்துவிடாமல் இருக்க தகடுகள் எல்லாம் வைக்கப்பட்டுள்ளதாம்.
பெண்களுக்கான படுக்கையறையில் இம்முறை கழிப்பிடம் வைக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் அறை தனியாக வைக்காமல் கழிப்பிடத்துடன் சேர்த்து கட்டியுள்ளனர். தம்மடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் தம்மடிப்பவர்களுக்கும் இடையே சண்டையை தூண்ட இந்த ஏற்பாடோ?. வீட்டை கலர்ஃபுல்லாக உருவாக்கியிருக்கிறார்களாம்.
பிக் பொஸ் 2 நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. முதல் சீசனை போன்றே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் பிக் பொஸ் வீட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் சில சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.
வாஸ்து பார்த்து பிக் பொஸ் வீட்டு செட்டை போட்டுள்ளார்களாம். கடந்த சீசன் போன்று இல்லாமல் இந்த சீசனில் முற்றிலும் வித்தியாசமான வீடாக உள்ளதாம். இந்த சீசனில் நீச்சல் குளம் அருகே சிறை ஒன்றை அமைத்துள்ளார்களாம்.
இந்தி பிக் பொஸ் வீட்டில் சிறை இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழ் பிக் பொஸ் வீட்டு சிறையில் கழிப்பறை வசதி கிடையாது. இம்முறை தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் சீஸனில் போட்டிகளில் தோற்றவருக்குத் தண்டனையாக அவர்மீது முட்டையை உடைத்து ஊற்றுவது, அரிசி மாவை ஊற்றுவது, மிளகாய்ப்பொடியைக் கரைத்து ஊற்றுவது, நீச்சல் குளத்துக்குள் தள்ளி விடுவது போன்றவை இருந்தன. ஆனால், இந்த முறை தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும் போலிருக்கிறது.
காரணம், இந்த முறை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் ஜெயில் செட்டும் போடப்பட்டுள்ளது. அதற்குள் இரும்பாலான ஒரு கட்டில் மற்றும் மேசை, விளக்கு மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. எனவே சிறைத் தண்டனைக்கு உள்ளாகுபவர்கள், மெத்தை, தலையணை, போர்வை, ஏசி என எதுவுமே இல்லாமல் வெறும் கட்டிலில்தான் தூங்க வேண்டும்.
யார் யார் இந்தத் தண்டனைக்கு உள்ளாகின்றனர், எந்தப் போட்டியில் தோற்றவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கடந்த சீசனை போன்று இல்லாமல் இந்த சீசனில் 8 பெண் போட்டியாளர்கள், 8 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 16 பேராம். கடந்த சீசனில் 8 ஆண் போட்டியாளர்கள், 7 பெண் போட்டியாளர்கள் என 15 பேர் கலந்து கொண்டனர். அது போக வைல்ட் கார்ட் மூலம் நான்கு பேர் வந்தனர். இதற்காக ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் ‘பிக் பொஸ்’ வீடு செட் அமைக்கப்பட்டுள்ளது.
பிக் பொஸ் 2 சீசனை 100 நாட்களுக்கு மேல் நடத்த முடிவு செய்துள்ளார்களாம். வீட்டில் பேய் எதுவும் வந்துவிடாமல் இருக்க தகடுகள் எல்லாம் வைக்கப்பட்டுள்ளதாம்.
பெண்களுக்கான படுக்கையறையில் இம்முறை கழிப்பிடம் வைக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் அறை தனியாக வைக்காமல் கழிப்பிடத்துடன் சேர்த்து கட்டியுள்ளனர். தம்மடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் தம்மடிப்பவர்களுக்கும் இடையே சண்டையை தூண்ட இந்த ஏற்பாடோ?. வீட்டை கலர்ஃபுல்லாக உருவாக்கியிருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment