Wednesday, August 7, 2013

எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் எப்படி இருக்க கூடாது என்பதற்கும் சாட்சியான சாவித்திரி

ணிந்திராவின் விஜயவாடா நகரில் 1937 ல் பிறந்தார். பூரண சாஸ்த்ரி என்பவரிடம் நடனம் கற்று விஜயவாடாவில் நடன அரங்கேற்றம் செய்தார். ஓட்டோமொபைல் வியாபாரியான பெரியப்பா வளர்ப்பில் ஆந்திராவெங்கும் நடனம் ஆடினார்.
ஒன்பதாவது வரை படித்தார். 1950 ல் தெலுங்கு சம்சாரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி திரை உலகில் நுழைந்தவர் சாவித்திரி. பெரியப்பா கே. வி. செளத்ரியின் முயற்சியால் சினிமாவில் நுழைந்து பட உலகில் வலம் வந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார்.
தேவதாஸ் என்ற ஒரு படமே சாவித்ரியை தென் இந்திய திரைப்படத்தில் மிகப்பெரிய நடிகையாக மாற்றிவிட்டது.
மிஸ்ஸியம்மா, அமரதீபம், என வெற்றிப் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்தது. 1953 ல் மனம் போல மாங்கல்யம் படத்தில் தான் ஜெமினி கணேசனை முதலில் சந்தித்தார். படப்பிடிப்பிலேயே காதல் தொடங்கியது.
மிஸ்ஸிய்யம்மா படத்தில் காதல் உறுதியானது. எனினும் இருவரும் சொல்லி கொள்ளவில்லை. காரணம் அப்போது ஜெமினி இருமுறை திருமணம் செய்து இருந்தார். அலமேலு என்ற பாஜியோடு நுங்கம்பாக்கத்தில் குடி இருந்தார். தன்னுடன் நடித்த நடிகை புஷ்பவல்லியையும் திருமணம் செய்து இருந்தார். நடிகை ரேகாவின் அம்மா புஷ்பவல்லி.
இருப்பினும் சாவித்திரி மேல் இருந்த காதலையும் ஜெமினியால் மறக்க முடியவில்லை. ஒருநாள் இரவு சாவித்திரியும் அவர் தோழி தாட்சாயணியும் ஜெமினியை தேடி அவர் வீட்டுக்கே சென்று விட்டார்கள். காரணம்.
ஜெமினியை சாவித்திரி விரும்புவதை தெரிந்து கொண்ட சாவித்ரியின் பெரியப்பா துப்பாக்கியோடு சாவித்திரியை மிரட்டி, ஜெமினியை சுட்டுவிடுவதாகவும் சொல்ல அங்கிருந்து கிளம்பி விட்டதாக சாவித்திரி சொன்னார். இரவு அங்கேயே தங்கிய சாவித்திரி பெரியப்பாவின் பிடியில் தான் படும் கஷ்டங்களை சொன்னார். சாவித்ரிக்கு ஆதரவாக ஜெமினி இருப்பதாக ஜெமினி ஆறுதல் சொன்னார்.
தொடர்ந்து அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஜெமினி - சாவித்திரி. படங்களினால் அப்போது ரசிகர்களே அவர்களின் திருமணத்தை விரும்பினர் சாவித்திரி வேறு யாரோடு நடித்தாலும் அது ஓடுமா என்ற நிலை. ஒரே நேரத்தில் அவர்களுக்கு 10 படங்கள் ஒப்பந்தம் ஆகி வேறு இருந்தது.
இந்நிலையில் தான் இந்த சம்பவம் ஒரு வழியாக திரை உலக பிரபலங்கள் உதவியோடு 1956 செப்டம்பரில் சாவித்திரி ஜெமினி திருமணம் நடைபெற்றது. அபிராமபுரத்தில் தனி வீடு வாழ்க்கை இனிமையாக மாறியது. தொடர்ந்து நடித்தார். பணம் கொட்டியது.
1958ல் கர்ப்பமானதால் படங்களில் நடிக்க முடியாமல் சில மாதங்கள் ஓய்வு எடுத்தார். நிறைய தெலுங்கு, தமிழ் தயாரிப்பாளர்கள் தவித்து போனார்கள். அப்போது அவர் நடிக்காமல் போன படங்கள் கல்யாண பரிசு, நல்ல தீர்ப்பு போன்றவையாகும். முதல் குழந்தை பெண் சாமுண்டீஸ்வரி பிறந்தார்.
பிறகும் நடிப்பு தொடர்ந்தது. 1959 ல் பாசமலர், பார்த்தால் பசி தீரும், பாவமன்னிப்பு என வெற்றி தொடர்ந்தது. 1960ல் சின்னாரி பாப்பலு என்ற தெலுங்கு குழந்தைகள் படத்தை சாவித்திரி இயக்கினார்.
படம் அமோக வெற்றி. தமிழில் அந்த படம் குழந்தை உள்ளம் என்ற பெயரில் கூட வந்தது. சுமாரான வெற்றி. 100 படங்கள் முடித்த சாவித்ரிக்கு 1965ல் சதீஷ் என்ற மகனும் பிறந்தார். நவராத்திரி, கை கொடுத்த தெய்வம் என குண்டு உருவத்திலும் இவர் வெற்றி தொடர்ந்தது. எம். ஜி யாரோடு பரிசு, வேட்டைக்காரன், மகாதேவி, என். டி. யாரோடு ஏகப்பட்ட படங்கள் நடித்தார்.
ஒரு முறை வட நாட்டுக்கு சென்று இருந்த போது அங்கு இருந்த பத்திரிகையாளர் ‘இவளோ குண்டாக இருக்கும் உங்களை எப்படி தென் இந்திய ரசிகர்கள் வெற்றி பெற செய்தார்கள் என்று கேட்க, உடனே சாவித்திரி ‘எங்கள் ஊரில் நடிப்பை கழுத்துக்கு மேலே தான் பார்ப்பார்கள்’ என்று கோவமாக தெரிவித்தார். இயல்பான அழகு, காண்பவரை தம் வசம் இழக்க செய்யும் அற்புத நடிப்பு.
குழந்தை உள்ளம், சட்டென்ற கோவம் என் சாவித்திரி திரை உலகின் உச்ச நட்சத்திரமாய் வாழ்ந்தார். கண்ணதாசனின் சொந்த படமான ரத்த திலகம் படத்தில் நடித்த போது கால்iட் விஷயத்தால் நிதானம் இழந்த கண்ணதாசன் மோசமாக சாவித்ரியை பேசி விட அதை கேட்டு விட்ட சாவித்திரி அந்த படத்திலே நடிக்க மாட்டேன் என்று வேட்டைக்காரன் படத்துக்கு அந்த திகதிகளை கொடுத்து விட்டார். பின்னர் மனமிரங்கி நடித்துக் கொடுத்தார். வருபவர்க்கெல்லாம் வாரி வழங்கும் குணம் கொண்ட அப்போதைய நடிகை சாவித்திரி, மற்றொருவர் அஞ்சலிதேவி.
1967 வரை வெற்றி தொடர புராண படங்களில் சக்தியாக, சரஸ்வதியாக வாழ்ந்தார். தனுஸ்கோடி புயலில் சிக்கி மறுஜென்மம் பெற்று வந்தார். 1970 வரை வாழ்க்கை நல்லபடியாகவே சென்றது. பிறகு மெல்ல புயல் வீச தொடங்கியது. அது தெரியாமல் இந்த மென்மலர் சிரித்துக்கொண்டே இருந்தது.

No comments:

Post a Comment