Thursday, August 1, 2013

படித்த பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் : ரோஜா பேட்டி!!

Educated women should comes to Politics says Roja
 இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் ‘‘செம்பருத்தி’’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோஜா தற்போது சினிமா, அரசியல், டி.வி., நிகழ்ச்சிகள் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த பிஸி வேலையிலும் நமக்கு அளித்த பேட்டி இதோ...

* நீங்கள்,"செம்பருத்தியில் அறிமுகமானது லக்கா - கிக்கா?

லக்குன்னு நினைக்கிறேன். தெலுங்கு பெண்ணாக இருந்தாலும், தமிழ் திரைப்படங்களில், இந்த அளவுக்கு வெற்றி பெற்று, இன்னிக்கும் உங்க முன் நிற்கிறேன் என்றால், அதற்கு, என் கணவருக்கு தான் நன்றி கூற வேண்டும்..

* பெரிய நடிகையாகி, "ஹிட் படங்களை கொடுப்போம் என, நினைத்தீர்களா?

நிச்சயம் இல்லை. என் முதல் படம், "செம்பருத்தி நன்றாக ஓடியது. அடுத்ததாக, "சூரியன் சூப்பர் ஹிட். ரஜினியுடன் நடித்த "உழைப்பாளி உட்பட, நான் நடித்த பல படங்கள் வெற்றி பெற்று, என்னை முன்னணி நடிகையாக்கியது. இந்த பெயரையும், புகழையும், கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

* அரசியல் ஆர்வம் எப்படி வந்தது?

என் சகோதரர்கள் மற்றும் என் கணவர் மூலம் வந்த ஆர்வம் தான், என்னை அரசியலில், பெரிய இடத்துக்கு கொண்டு சென்றுள்ளது. என்னால் முடிந்த அளவுக்கு, மற்றவர்களுக்கு நல்ல காரியங்களை செய்யக் கூடிய வாய்ப்பை, அரசியல் எனக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

* அரசியல், சினிமா, "டிவி என, பயங்கர பிசியா இருக்கிறீர்களே?

நம்மால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை. நிறைய பேர் நம்மால முடியுமான்னு யோசித்தே, காலத்தை கடத்தி விடுவர். ஆனால், எதுவும் நம்மால முடியும். அரசியல், வீடு, "டிவி இது மட்டும் இல்லாமல்,  எவ்வளவு வேலை கொடுத்தாலும், சந்தோஷமாக திட்டமிட்டு செய்தால், எல்லாமே சாத்தியம் தான்.

* பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

தைரியமாக இருக்க வேண்டும். படித்த பெண்கள், அரசியலுக்கு வர வேண்டும். பெண்கள் பிரச்னை பெண்களுக்கு தான் தெரியும். நல்லது செய்வதற்கு, அதிகமான வாய்ப்புகள் உள்ளன. நமக்கு என்ன என, ஒதுங்கி போக கூடாது. நிறைய விஷயங்களில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், பெண்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். ப்ளீஸ் வாங்க.

* இப்போதும், படங்களில் நடிக்கிறீர்களா?

அம்மா ரோலில் நடிக்க கொஞ்சமும் விருப்பம் இல்லை. என் கேரக்டர் எனக்கு பிடித்தால், உடனே கால்ஷீட் கொடுப்பேன். இப்போது, "ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் நடிக்கிறேன். ரொம்ப நல்ல கேரக்டர். எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment