Wednesday, May 9, 2012

நடிகர்களுக்கு சினேகாவின் Special Party


திருமணத்துக்கு முன்பு நடிகர், நடிகைகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி தருகிறார் சினேகா. நடிகர் பிரசன்னா - சினேகா திருமணம் எதிர்வரும் 11ம் திகதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது பற்றி சினேகா கூறியதாவது: எனது திருமண விழாவை 4 நாள் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளேன்.
முதலாவதாக என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள், தோழிகளுக்கு என் வீட்டில் ஸ்பெஷல் பார்ட்டி தருகிறேன். நான்கு நான் விழாவில் மெஹந்தி, சங்கீத் என இரண்டு விழாக்கள் ஆடம்பரமாக நடக்க உள்ளன. திருமணத்தக்காக எல்லா நிறத்திலும் பட்டுச் சேலை வாங்கிவிட்டேன்.
மணமேடையில் அமரும் போது அணிவதற்காக காஞ்சிபுரம் சென்று பட்டுச் சேலைகள் வாங்கினேன். இருமுறைப்படி திருமணம் நடப்பதால் பிராமண முறைப்படி மடிசாரும் அணிந்து கொள்ள உள்ளேன்.
ஒவ்வொரு விழாவின் போதும் விதவிதமான சேலையும், ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ படத்தில் திருமண காட்சியில் மாதுரி தீட்சித் அணிந்து வந்தது போல் காக்ரா உடை அணியவும் உள்ளேன். எல்லா கொஸ்டியூம் டிசைன்களையும் எனது அக்காதான் வடிவமைக்கிறார். பாரம்பரிய முறையிலேயே இந்தத் திருமணம் நடக்கவுள்ளது. திருமண நாளை நினைத்தால் மனசுக்குள் ஆயிரக்கணக்கில் பட்டாம் பூச்சிகள் பறக்கிறது. பிரசன்னா எனக்கு மிக பொருத்தமான ஜோடி இவ்வாறு சினேகா கூறினார்.


சில்க் மாதிரி பிந்து மாதவி


வெப்பம், கழுகு என்று இரண்டே படங்கள்தான் நடித்திருக்கிறார் பிந்து மாதவி, இவர் நடித்த கழுகு பட விழாவில் சில்க் மாதிரி இருக்கீங்க என்று போகிற போக்கில் போட்டுத் தாக்கிவிட்டு போன சில இயக்குநர்களின் வாழ்த்துரை விளைவு? சில்க் மாதிரி ஒரு கெரக்டர் இருக்கு. பண்aங்களா என்கிறார்களாம். அதை கேட்டு அலுத்துக் கொள்கிற பிந்து மாதவி நல்ல கதைக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் பெயரை மாற்றினால் ராசி மாறும் என நினைத்தாரோ என்னவோ தனது பெயரை பிந்து சாகர் என மாற்றிக் கொண்டுள்ளாராம். ஆனால் சமீபத்தில் இறந்த போன அவரது சகோதரர் நினைவாக சாகர் என்ற பெயரை சேர்த்துக் கொண்டுள்ளதாக கூறுகிறாராம் அம்மணி சகோதரர் சென்டிமென்ட் எப்படி வேர்க் அவுட் ஆகுதுன்னு பார்ப்போம்...!




பாட்டு தர்பார்



கிரியேட்டிவ் கோம்ப் நிறுவனம் சார்பில் அர்ச்சித் தயாரிக்கும் நிகழ்ச்சி, ‘பாட்டு தர்பார்’ மதன்பாப் நடத்துகிறார் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இது குறித்து அவர் கூறியதாவது, இந்த நிகழ்ச்சி 3 பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி ‘பாட்டோட கதை கேளு’! பாடல் பிறந்த கதை, சிறப்பு உள்ளிட்ட விவரங்களை சொல்வேன். இரண்டாவது பகுதி ‘சிரிப்பு மழை’ இதில் மிமிக்ரி கலைஞர்கள் சிரிக்க வைப்பார்கள் அடுத்து, ‘என் கேள்விக்கு என்ன பதில்’ இதில் திரைப்பட கலைஞர்களை பேட்டி காண்கிறேன். ஒரு கோப்பி ஷொப்பில் நடப்பது மாதிரியான நிகழ்ச்சி இது இவ்வாறு மதன்பாபு கூறினார்.


எம். ஜி. ஆரின் கால் முறிந்தது எவ்வாறு? எப்போது?

நாடோடி மன்னன் மகத்தான வெற்றிக்குப் பின், கண் திருஷ்டி போல் எம். ஜி. ஆருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. புகழ்பெற்ற திரைப்பட நடிகராக விளங்கிய போதிலும், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது நாடகக் குழுவின் நாடகங்களில் நடிப்பது எம்.ஜி. ஆரின் வழக்கம்.
சீர்காழியில், ‘இன்பக்கனவு’ நாடகத்தில் நடித்தபோது, ஒரு சண்டைக் காட்சியில் நடிகர் குண்டுமணியை அலாக்காகத் தூக்கினார். குண்டுமணி, மிகப் பருமனான நடிகர். அப்படியும், அவரை எம். ஜி. ஆர். எளிதாகத் தூக்கிவிட்டார். ஆனால், சற்றே சரிந்ததால், கால் எலும்பு முறிந்து விட்டது. இதனால் மேடையில் விழுந்து விட்டார் எம். ஜி. ஆர்.
வலி கடுமையாக இருந்த போதிலும், அதைத் தாங்கிக் கொண்டு, மேடையில் அமர்ந்தவாறே எம்.ஜி.ஆர். பேசினார். ‘எதிர்பாராத விதமாக, கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு விட்டது. தொடர்ந்து நடிக்க முடியாத நிலையில் இருப்பதற்காக வருந்துகிறேன். விரைவில் குணம் அடைந்து, இந்த நாடகத்தை மீண்டும் உங்கள் முன் நடத்துவேன்’ என்று கூறினார்.
எம். ஜி. ஆருக்கு கால் எலும்பு முறிந்ததை அறிந்து, ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, காரில் சென்னைக்குப் புறப்பட்டார். இதற்குள் எம். ஜி. ஆருக்கு விபத்து ஏற்பட்ட செய்தி, சென்னைக்கு எட்டிவிட்டது. அவர் வீட்டு முன் பெரும் கூட்டம், சென்னை திரும்பிய எம். ஜி.ஆர். எனக்கு ஒன்றும் நேராது, கவலைப்படாதீர்கள்’ என்று ஆறுதல் கூறிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார்.
அங்கு ‘எக்ஸ்ரே’ எடுக்கப்பட்டது. கால் எலும்பு அடியோடு முறிந்துவிடவில்லை என்றும், விரிசல் தான் ஏற்பட்டிருக்கிறது என்றும் சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் டொக்டர்கள் கூறினர். சில நாட்கள் அசையாமல் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் டொக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி, ஆஸ்பத்திரியில் எம். ஜி. ஆர். அனுமதிக்கப்பட்டார்.
எம். ஜி. ஆர். கால் எலும்பு முறிந்து விட்டதால், அவர் குணம் அடைந்தாலும் முன்போல் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் வதந்தி பதவியது. இதனால் எம். ஜி. ஆர். அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது;
என் உடல் நலம் குறித்து, அக்கறையோடு விசாரிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வர இருந்த பேராபத்து, உதய சூரியனைக் கண்ட பனித்துளிபோல் விலகி விட்டதற்கு முக்கிய காரணம், உங்களைப் போன்ற ரசிகர்களின் அன்பும், ஆசியும் தான். என் உடல் நலம் தேறிய பின், நான் இதுவரை இருந்ததைவிட பன்மடங்கு அதிக சக்தியுடனும், தெம்புடனும் மீண்டும் கலைக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் எம். ஜி. ஆர். குறிப்பிட்டிருந்தார்.
அவர் கூறியது போலவே, விரைவாக குணம் அடைந்தார். விரிசல் ஏற்பட்ட எலும்பு சரியாகியது. முன்னரிம் அதிக வலிமை பெற்றார். நிருபர்கள் முன்னிலையில் அவர் பெரும் பளுவைத் தூக்கிக் காட்டினார். நடையில் எவ்வித மாற்றமும் இல்லை. வேகம் சற்று கூடியிருந்தது.


வெள்ளைக்கார சிப்பாயாக நடித்து அப்பாவிடம் உதை வாங்கியதால் காய்ச்சல்


நடிகனாக வேண்டும் என்ற எண்ணம் சிவாஜியின் மனதில் ஆழமாகப் பதிந்தது 7 வயதில்



சிவாஜி கணேசன் 7வது வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிகரானார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே, சிவாஜிக்கு நடிப்பதிலும், பாடுவதிலும் ஆர்வம் இருந்தது.
ஒருமுறை ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்றார். அக்காலத்தில், சின்ன வேடங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டால், நாடகத்துக்கு வரும் சிறுவர்களில் சிலரை அழைத்துப் போய், மேடையில் ஏற்றிவிடுவார்கள்.
‘கட்டபொம்மன்’ நாடகத்தில் வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடிக்க சிலர் தேவைப்பட்டதால், சிவாஜியை நாடகக்காரர்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள். வெள்ளைக்கார சிப்பாய்கள் அணிவகுத்து வரும் காட்சியில், அந்த சிப்பாய்களில் ஒருவராக சிவாஜியும் நடித்து வந்தார்.
நாடகம் முடிந்து வீட்டுக்குச் சென்றதும், சிவாஜிக்கு அவர் அப்பாவிடம் உதை கிடைத்தது. ஏனென்றால் தேசியவாதியான சின்னையா மன்றாயருக்கு வெள்ளைக்காரர்கள் என்றாலே பிடிக்காது. சிவாஜி, வெள்ளைக்கார சிப்பாய் வேடம் போட்டதால், அவருக்கு அளவு கடந்த கோபம்! ‘டேய் கூத்தாடிப் பயலே உனக்கு என்ன தைரியம் இருந்தால் என் எதிரியின் படையில் சேர்ந்து கூத்தாடுவாய்’ என்று கூறியபடி அடித்தார்.
இதனால் சிவாஜிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. படுக்கையில் போய் விழுந்தார். ‘நாமும் நடிகனாக வேண்டும், கட்டபொம்மனாக நடிக்க வேண்டும்’ என்ற எண்ணம் மனதில் ஆழமாகப்பதிந்தது.
இந்த நேரத்தில், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் ‘மதுரை ஸ்ரீபாலகான சபா’ என்ற நாடகக் கம்பெனி திருச்சியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்தது. (யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை என். எஸ். கிருஷ்ணன் நடித்த பெரும்பாலான படங்களில் அவருடன் நடித்தவர். பிற்காலத்தில் சிவாஜி நடித்த ‘தூக்குத் தூக்கி’யில் வாத்தியாராக நடித்தவர்)
இந்த நாடகக் குழுவில் சேர்ந்து விட வேண்டும் என்று சிவாஜி விரும்பினார். நாடகக் குழுவினர் திருச்சியில் நாடகங்கள் நடத்தி முடித்துவிட்டு, வெளியூருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். நாடகக் கம்பெனிக்கு சிவாஜி சென்றார்.
“எனக்கு பாடத்தெரியும். ஆடத்தெரியும். நான் அப்பா... அம்மா இல்லாத அனாதை நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
அப்போது சிவாஜி நன்றாகப் பாடும் அளவுக்கு பயிற்சி பெற்றிருந்தார். அவரை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார்கள். ‘பழனிவேல் இது தஞ்சம்’ என்ற பாடலை சிவாஜி பாடினார். நாடகக் கம்பெனிக்காரர்களுக்குப் பிடித்துவிட்டது. உடனே கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள். அப்போது, அந்தக் கம்பெனியில் காக்கா ராதாகிருஷ்ணனும் நடிகராக இருந்தார். அவர் சிவாஜியின் பக்கத்து வீட்டுக்காரர்.
சிவாஜியைப் பார்த்த அவருக்கு ஒரே ஆச்சரியம். ‘இங்கே எப்படியடா வந்தாய் கணேசா’ என்று கேட்டார். ‘நான் வீட்டுக்குத் தெரியாமல் இந்த கம்பெனியில் வந்து சேர்ந்துவிட்டேன். வெளியே யாரிடமும் சொல்லிவிடாதே’ என்று சிவாஜி கேட்டுக்கொண்டார்.
நாடகக் கம்பெனி, திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்று முகாமிட்டது. அந்த நாடகக் கம்பெனியில், புது நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாத்தியாராக சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் இருந்தார். இவர்தான் சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.
‘சின்ன பொன்னுசாமிதான் என் நாடக குரு’ என்று சிவாஜி குறிப்பிட்டுள்ளார். சிவாஜி நடித்த முதல் நாடகம் ‘ராமாயணம்’ அதில் அவர் போட்ட வேடம் சீதை. “யாரென இந்தப் புருஷனை அறிகிறேன்’ என்ற பாட்டைப்பாடி, அதற்கு ஏற்ற மாதிரி ஆட்டம் ஆடி நடித்தார்.
முதல் நாளே சிறப்பாக நடித்தார். சிவாஜி வேஷத்தை கலைத்து உள்ளே சென்ற போது, வாத்தியார் பொன்னுசாமி, அவர் முதுகில் தட்டிக்கொடுத்து ‘மிகவும் நன்றாக நடித்தாய்’ என்ற பாராட்டினார்.
நாட்கள் ஆக ஆக புதுப்புது வேடங்களை ஏற்று நடித்தார். சீதை வேஷம் போட்ட அவர் பிறகு பரதன் வேடம் போட்டார். சூர்ப்பனகை அழகியாக மாறி ராமனை மயக்கும் கட்டத்தில் அந்த அழகு சூர்ப்பனகையாக நடித்தார். இராவணனின் மகன் இந்திரஜித் வேடமும் அவருக்குக் கிடைத்தது.
இப்படி, சிறுவனாக நாடகங்களில் நடித்த போதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்றார். பல்வேறு நாடக வசனங்கள் அவருக்கு மனப்பாடம். எனவே, திடீரென்று எந்த வேடத்தையும் கொடுத்து நடிக்கச் சொன்னாலும் அவர் ஏற்று நடித்தார்.
அந்தக்காலத்தில் நாடகத்தில் நடிக்கும் சிறுவர்கள் வெளியே எங்கேயும் போக முடியாது. கம்பெனியின் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும். ‘சிறை’ வைக்கப்பட்டது மாதிரிதான்.
‘ஊருக்கு வா’ என்று பெற்றோர் கடிதம் எழுதினால், அதை பையன்களிடம் கொடுக்கமாட்டார்கள். கடிதங்களைப் பிரித்து படித்துப் பார்த்துவிட்டு, கொடுக்கக் கூடியதாக இருந்தால் மட்டும் கொடுப்பார்கள். ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் கெஞ்சிக் கூத்தாடி, எப்படியோ அனுமதி பெற்று ஊருக்கு போய்விட்டு வந்தார். “என்ன ராதாகிருஷ்ணா என் வீட்டுக்குப் போனாயா? எல்லோரும் செளக்கியமா?’ என்று சிவாஜி விசாரித்தார்.
“எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உனக்கு ஒரு துயரச்செய்தி கணேசா’ என்று கூறினார் ராதாகிருஷ்ணன். ‘என்ன?’ என்று பதற்றத்துடன் சிவாஜி கேட்க, ‘உன் அண்ணன் திருஞான சம்பந்தமூர்த்தி இறந்துவிட்டார். என்று கூறினார் ராதாகிருஷ்ணன்.
சிவாஜி பதறினார். உள்ளே சென்று தனியாக அழுதார். ஊருக்குப் போய்வர கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார். அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்களே தவிர, அனுமதி தரவில்லை.
சில காலத்துக்குப் பிறகு, சிவாஜியின் இன்னொரு அண்ணன் கனகசபாநாதனும் இறந்து போனார். அப்போதும் சிவாஜி தன் வீட்டுக்குப் போக முடியவில்லை. முக்கிய வேடங்களில் அவர் நடித்து வந்ததால், ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்க நாடகக் கம்பெனி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.




No comments:

Post a Comment