Wednesday, May 23, 2012

மூன்று தலைமுறை நடிகைகள்

லட்சுமி தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் பாலச்சந்தரால் தமிழ் தரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர். அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்தது. லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரத ராவ் மற்றும், தாய் ருக்மணி இருவருமே திரைத் துறையில் பணியாற்றியவர்கள்.
தந்தை வரத ராவ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப் பிரச்சினைகளை அலசும் திரைப் படங்களை தயாரிக்கவும் செய்தார், லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார். எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.

தேசிய விருது
1970 ஆம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப் படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப் படம் சட்டக்காரி (1974) அவருக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975 ஆம் ஆண்டு ஜூலி என இந்தியிலும் மிஸ் ஜூலி பிரேம கதா என தெலுங்கிலும் எடுக்கப்பட்டன. இந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விரும் வங்காள திரையிதழாளர்கள் விருதும் கிடைத்தது.
1977 ஆம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 1980 களில் முதன்மை பாத்திரங்களில் நடிப்பது குறைந்தபோது துணை நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்து கவனத்தைக் கவர்ந்தார். 400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.
சின்னத்திரையிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற அரட்டைக் காட்சியில் தமது முத்திரையைப் பதித்தார். சமூகப் பிரச்சினைகளையும் தனிமனித அவலங்களையும் இத்தொடர் வெளிக்கொணர்ந்தது.
லட்சுமியின் திருமண வாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்ததாக அமைந்தது. தனது பதினேழாம் வயதில் அவரது பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன் வளர்க்கும் உரிமை பெற்றார்.
ஐஸ்வர்யா 1990 களில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் உடன் நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

லட்சுமியின் தாயார் ருக்மணி


நடிகை லட்சுமியின் தாயாரும், பழம்பெரும் நடிகையுமான ருக்மணி சென்னையில் மரணமடைந்தார்.
டி.ஆர். மகாலிங்கம் நடிக்க, ஏவி.எம். ருக்மணி வித் டீ.ஆர்.மகாலிங்கம் தயாரிப்பில் உருவான ஸ்ரீவள்ளி படம் மூலம் நடிகையானவர் ருக்மணி.
இதையடுத்து லவங்கி, முல்லைவன், கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார்.
ருக்மணியின் கணவர் ஒய். வி. ராவும் ஒரு பிரல நடிகர், எம். எஸ். சுப்புலட்சுமிக்கு ஜோடியாக சாவித்ரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
பின்னர் தியாகராஜ பாகவதர் நடித்த சிந்தாமணி படத்தை இயக்கினார். இப்படத்தில் ருக்மணியும் நடித்தார். இதில் நடித்தபோது தான் ராவுக்கும், ருக்மணிக்கும் காதல் மலர்ந்து மணமுடித்துக்கொண்டனர்.
81 வயதான ருக்மணி சில மாதங்களாக உடல் நலம் சரியின்றி சிகிச்சை பெற்று வந்தார். இவர் 2007 செப்டெம்பர் 05 ஆம் திகதி மரணமடைந்தார்.

எம்.ஜp.ஆர் பற்றி சரோஜhதேவி


கன்னடப் படத்தில் எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற சரோஜாதேவிக்கு, தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித் தந்த படம் எம். ஜி. ஆரின் ‘நாடோடி மன்னன்’. இதுபற்றி சரோஜாதேவி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது :-
‘கன்னட கச்சதேவயானி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது கோடி சூரிய பிரகாசத்துடன் ஒருவர் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தார்.
அவரைப் பார்த்ததும், அங்கு இருந்த எல்லோரும் எழுந்து, வணக்கம் தெரிவித்தனர். ஆனால், அவர் யார் என்று எனக்கு தெரியாது. எனவே நான் பேசாமல் உட்கார்ந்து இருந்தேன்.
அவர் படப்பிடிப்பு தளத்தினை சுற்றிப் பார்த்துவிட்டு இயக்குனரிடம் சென்றார். என்னைக் காட்டி, ‘யார் அந்தப் பெண்’ என்று கேட்டார்.
அதற்கு இயக்குனர் ‘அவர்தான் இந்தப் படத்தின் கதாநாயகி. புதுமுகம் பெங்களூரைச் சேர்ந்தவர். பெயர் சரோஜாதேவி’ என்று தெரிவித்தார்.
வந்தவர் பேசாமல் சென்றுவிட்டார். அவர் போகும்போதும் எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவித்து பணிவுடன் வழியனுப்பினார்கள். அவர் சென்றபிறகு ‘வந்தது யார்’ என்று நான் இயக்குனரிடம் கேட்டேன். ‘அவர்தான் எம். ஜி. ஆர்’ என்று அவர் தெரிவித்தார்.
அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். ‘அவ்வளவு பெரிய மனிதர் வந்து இருக்கிறார். எதுவும் தெரியாமல் சும்மா இருந்து விட்டோமே’ என்று நான் வருந்தினேன்.
எம். ஜி. ஆர். நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ‘திருடாதே’ என்ற படத்தில் நடிக்க கதாநாயகியை தேடிவந்தனர். பட அதிபர் ஏ. எல். சீனிவாசனிடம் எம். ஜி. ஆர். ‘கச்சதேவயானி படத்தில் ஒரு கன்னடப் பெண் நடித்து வருகிறார். அவரை அழைத்து வந்து ஒப்பனை செய்து பாருங்கள், பிடித்து இருந்தால் கதாநாயகியாக போடலாம்’ என்று கூறினார்.
அதன்படி ஏ. எல். சீனிவாசன், சின்ன அண்ணாமலை, மா. லட்சுமணன் மற்றும் பலர் முன்னிலையில் எனக்கு ‘மேக்கப் டெஸ்ட்’ நடந்தது.
எம். ஜீ. ஆர். என்னைத் தேர்வு செய்தாலும், ‘ஒரு புதுமுகத்தை எப்படி நமது படத்தில் போடுவது’ என்று அவர்களுக்கு குழப்பமாக இருந்தது. அவர்கள் யாரும் எம். ஜி. ஆரிடம் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.
ஆனால் எம். ஜி. ஆர். அதை புரிந்துகொண்டார். என்றாலும் என்னைத்தான் கதாநாயகியாக போடவேண்டும் என்று அவர் வற்புறுத்தவில்லை. என்றுமே அவர் யாரையும் எதற்காகவும் வற்புறுத்தியது கிடையாது. அவருடைய கருத்தை யார் மீதும் திணித்தது கிடையாது.
இந்த சூழ்நிலையில் என்னை கதாநாயகியாகப் போடவேண்டும் என்ற எம். ஜி. ஆரின் எண்ணத்தில் மட்டும் மாற்றம் இல்லை. அவருடைய சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக என்னை அவர் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

 

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர்



இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தருக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், 10 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது. 45 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் உள்ள பாலச்சந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார்.
அசாதாரண கதைகளைப் படமாக்குவதில் பாலச்சந்தரின் துணிச்சலுக்கு நிகர் அவரே. மிகச் சிறந்த கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மிகச் சிறந்த நடிகரான நாகேஷ், ராதாரவி, நடிகைகள் ஜெயந்தி, ஸ்ரீபிரியா, ஜெயசுதா, ஜெயப்பிரதா, சுஜாதா என 30க்கும் மேற்பட்டோரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
பாலச்சந்தர், கமல்ஹாசன் உள்ளிட்ட 12 இயக்குநர்களை உருவாக்கியவர். இவர் இயக்கிய ‘இருகோடுகள்’ ‘அபூர்வராகங்கள்’ ‘தண்ணீர் தண்ணீர்’ ‘அச்சமில்லை அச்சமில்லை’ ‘ஒரு வீடு இரு வாசல்’ ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும் ‘ருத்ரவீணா’ தெலுங்குப் படமும் தேசிய விருதுகளை வென்றுள்ளன.
பல முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினையும் அளித்து கெளரவித்துள்ளது. தஞ்சை மாவட்ட நன்னிலத்தில் 1930ம் ஆண்டு பிறந்தவர் பாலச்சந்தர். ‘மேஜர் சந்திரகாந்தா’ ‘சர்வர் சுந்தரம்’ என நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற அவரை திரையுலகுக்கு அழைத்து வந்தவர் அமரர் எம். ஜி. ஆர். அவரது தெய்வத்தாய்தான் பாலச்சந்திரரின் முதல் திரைப் பிரவேசம்.
பாலச்சந்தர் இயக்கிய முதல் படம் ‘நீர்க்குமிழி’ 1965ம் ஆண்டில் அவர் இயக்கிய இந்தப் படத்தில் நாகேஷ் நடித்தார். தமிழகம் தவிர, ஆந்திரம், கர்நாடகத்திலும் பல விருதுகளை வென்றுள்ளார் பாலச்சந்தர். சின்னத் திரையில் அட்டகாசமான தரம் கொண்ட நாடகங்களை அறிமுகப்படுத்தியதும் பாலந்தர்தான்.
தூரதர்ஷனுக்காக இவர் இயக்கிய ‘ரயில் சினேகம்’ மறக்க முடியாத ஒரு படைப்பாகும். ‘அவர்கள்’ ‘47 நாட்கள்’ ‘சிந்துபைரவி’ ஆகியவை பாலச்சந்தரின் மாபெரும் படைப்புகளாகும்.



சிரஞ்சீவி மகன் ராம் சரணுக்கு திருமணம்


காங்கிரஸ் எம்.பி.யும் நடிகருமான சிரஞ்சீவி மகன் ராம் சரண். இவரும் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். ராம் சரணுக்கும் அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேத்தி உபஷனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி இவர்களது திருமணம் நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை சிரஞ்சீவி குடும்பத்தினர் பிரமாண்டமாக செய்து வருகிறார்கள் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விட்டது.
திருமண அழைப்பிதழுடன் சிரஞ்சீவி மனைவி சுரேகா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அர்ச்சகர் மூலம் ஏழுமலையான் பாதத்தில் அழைப்பிதழ் வைத்து வழிபட்டார். பின்னர் பத்திரிகையை உண்டியலில் போட்டார்.
இது பற்றி சுரேகா கூறும்போது, ஏழுமலையான் சந்நிதியில் திருமண அழைப்பிதழ் வைத்து வழிபட்டேன். முதலில் தெய்வத்தின் ஆசி பெற்ற பிறகு மற்றவர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கப்படும் என்றார். சுரேகாவுடன் அவரது தங்கை வசுந்தரா சென்று இருந்தார்.

நடிகையின் தலையெழுத்து வெள்ளியில் நிர்ணயம்


எல்லோரையும் டொப் நடிகை எனக் கூறுகிறார்கள். ஒருவர்தான் டொப் நடிகையாக இருக்க முடியும் என்றார் சமந்தா. ‘பாணா காத்தாடி’, ‘மாஸ்கோவின் காவிரி’ ஆகிய படங்களில் நடித்தவர் சமந்தா. அவர் கூறியதாவது :-
இந்த வருடம் நான் நடித்து 8 படங்கள் வெளிவர உள்ளது. ஆனாலும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. சந்தோஷமாக இல்லாததற்கு காரணம் என்ன என்கிறார்கள். இண்டஸ்ட்ரீயில் பெரும்பாலான நடிகைகளை நம்பர் வன் நடிகைகள் என்று சொல்கிறார்கள். எல்னையும் அந்தப் பட்டியலில் குறிப்பிடுகிறார்கள்.
நான் கேட்கிறேன், நம்பர் வன்னாக ஒருவர்தானே இருக்க முடியும். ஆனால் அத்தனை பேரையும் நம்பர் வன் என்று எப்படி சொல்கிறார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு நடிகையின் தலையெழுத்தும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் நிஜம். மணிரத்னம், கெளதம் மேனன் என பெரிய இயக்குனர்களுடனும், மகேஷ் பாபு, நாக சைதன்யா உள்ளிட்ட டொப் நடிகர்களுடனும் நடித்து வருகிறேன்.
இதுதவிர ஒப்புக்கொள்ளாத படங்கள் நிறைய உள்ளன. பெரிய இயக்குனர்கள், பெரிய படங்கள் என்பதை நானாக தேர்வு செய்யவில்லை. அது தன்னால் அமைந்தது. இண்டஸ்ட்ரிக்கு வந்து 2 வருடங்களில் இவ்வளவு பெரியவர்களுடன் பணியாற்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
கடின உழைப்புக்கு கிடைத்த பலன் என்ற கருதுகிறேன். ஒரே படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். பள்ளி மாணவி தோற்றத்துக்காக உடல் இளைக்க வேண்டி உள்ளது. கல்லூரி மாணவிக்காக சற்று குண்டாக வேண்டி உள்ளது. இதெல்லாம் புதிய அனுபவம். மணிரத்னம் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருப்பதைவிட பயமாகவே உணர்கிறேன். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகி இருக்கிறது. ஆனால் அவருடைய எதிர்பார்ப்பு என்னை நடுங்க வைக்கிறது. இவ்வாறு சமந்தா கூறினார்.




 

மனசுக்கு பிடித்தவர் கிடைத்தால் காதல்


குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மோனிகா. தொடர்ந்து பகவதி, சண்டைக்கோழி போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்த அவர் சிலந்தி படம் மூலம் ஹீரோயினாக அவதரித்தார்.
ஹீரோயினாக மட்டும் அல்லாமல் அந்தப் படத்தில் அதிரடி கவர்ச்சியும் காட்டினார். தொடர்ந்து அ ஆ இ ஈ, வர்ணம் போன்ற படங்களில் நடித்தார். தமிழ் தவிர மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ள மோனிகாவிடம் சில கேள்விகள்... கேட்டோம். அதற்கு அவரின் பதில்கள்...
திரைக்குப் பின்னால் நீங்கள் எந்த மாதிரியான கேரக்டர்?
ரொம்ப ஜாலியான பெண் என்னைச் சுற்றியிருப்பவர்கள், எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். நிறைய காமெடியாக பேசுவேன்.
அம்மா முத்தம் – சினிமா முத்தம், வித்தியாசம் என்ன?
அம்மாவின் முத்தம் ரியல்; சினிமா முத்தம் ரீல்.
மூடு அவுட்டானால் என்ன செய்வீர்கள்?
இசை மீது கவனத்தை திருப்புவேன். பிடித்த பாடலைப் போட்டு, ஆடிப் பாடுவேன்; மனசு ரிலக்சாகிவிடும்.
எத்தனை நாய்க்குட்டி வளர்க்கிaர்கள்? இப்போதைக்கு எதுவும் இல்லை. ஆனால், பூனை, முயல், கிளி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கு.
அழகை பராமரிக்க, என்ன பயிற்சி செய்கிaர்கள்?
உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி மற்றும் நடனம் ஆடுவதுண்டு. மேலும், நீச்சல் பயிற்சி, எனக்கு ரொம்ப பிடிக்கும். நீச்சல் குளத்தில் குதித்தால், ஒரு மணி நேரத்திற்கு பிறகே வெளியேறுவேன்.
காதலித்த அனுபவம் உண்டா?
நான் யாரையும் காதலித்ததில்லை. ஆனால், என் மனசுக்கு பிடித்தவர் கிடைத்தால் காதலிப்பேன். ஒருவேளை அப்படிப்பட்டவர் கிடைக்கவில்லை என்றால், பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையே, காதலித்து திருமணம் செய்வேன்.

வித்யாபாலன் விளம்பரத்தில் நடிக்க ரூ. 10 இலட்சம்

விளம்பர படத்தில் நடிக்க நடிகை வித்யா பாலன் ரூ. 30 இலட்சம் ரூபா வாங்குகிறாராம். தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்கு பிறகு வித்யா பாலனின் மார்க்கெட் எகிறியிருக்கிறது. தனது சம்பளத்தை 2 கோடி ரூபாவாக உயர்த்தியுள்ளார்.
இதன் மூலம் பொலிவுட் நடிகைகள் கத்ரீனா, தீபிகா ஆகியோரின் சம்பளமான ரூ. 2.5 கோடி ரூபாவை நெருங்கி இருக்கிறார் வித்யா பாலன். மேலும் இப்போது அதிகமாக விளம்பர படங்களிலும் தோன்ற ஆரம்பித்து இருக்கிறார்.
சமீபத்தில் கேரளாவில், விளம்பர படம் ஒன்றில் நடிக்க வித்யா பாலனை அணுகியுள்ளனர். ஆனால் அவரோ அந்த விளம்பர படத்தில் நடிக்க 30 இலட்சம் ரூபா கேட்டுள்ளார். அந்த நிறுவனமும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்புக்காக கேரளா செல்ல இருக்கிறார் வித்யா பாலன்.






No comments:

Post a Comment