Saturday, January 4, 2025

ருக்மணிதேவிக்குப் பின் சிங்கள கலையுலகை கலக்கும் நிரஞ்சனி

 

ருக்மணிதேவிக்குப் பின் சிங்கள கலையுலகை கலக்கும் நிரஞ்சனி

இலங்கை சிங்கள சினிமாத் துறை வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஆரம்ப காலத்தில் சிங்கள சினிமாவை கலக்கி வந்த ஒரு தமிழ் நடிகை ருக்மணிதேவி. இவர் நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகியுமாவார். அவரது மறைவுக்குப் பின் நீண்டகாலமாக வெற்றிடமாக இருந்த இந்தக் குறையை நிவர்த்திக்கும் வண்ணம் சிங்கள திரையுலகுக்குள் பிரவேசித்து கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் நிரஞ்சனி சண்மகராஜா. இவர் வரலாற்று சிறப்பிக்க இதிகாச கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குவேணி மேடை நாட்டிய நாடகம் எதிர்வரும் 2025.01.03ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் உள்ள தாமரைத் தடாக மண்டபத்தில் மேடையேறவுள்ளது. இலங்கை மேடை நாடக வரலாற்றில் இதுவரை மேடையேற்றப்படாத முறையில் மிகவும் பிரமாண்ட முறையில் மேடையேற்றப்பட இருக்கிறது இந்த நாட்டிய நாடகம். இந்த நாடகத்தில் நடிக்கின்ற ஒரே ஒரு தமிழ் நடிகை நிரஞ்சனி சண்முகராஜா. இதில் நுாறு நடனக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளார்கள். தொழில் நுட்பம், நடிப்பு என 250 கலைஞர்கள் இதில் பங்களிப்புச் செய்யவுள்ளார்கள். நடனத்துறையில் நிபுணத்துவம் பெற்ற சிரேஷ்ட நடனக்கலைஞர்களான சந்தனா விக்ரமசிங்க, லெஜெண்டரி கலாநிதி ரவிபந்து வித்யாபதி ஆகியோர் இதற்கு நடனக் கலை வழங்கி இயக்குகிறார்கள். இதுவரை தமிழ், சிங்கள திரைப்படங்களில் நடித்தவந்த நடிகை நிரஞ்சனி சண்முகராஜாவுக்கு இது புது அனுபவமாக இருக்கும் என்று கூறினார். கலாநிதி ரவி பந்து வித்தியாபதி, பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க, ரஞ்சித் பிரியங்க, சாரங்க விமுக்தி, நரேந்தர் சத்துரங்க, ரசிது லக்‌ஷான், தேவாங்கி விக்ரமசிங்க, கௌசல்யா மதுவந்தி, துமிந்த தர்சன ஆகியோர் இதில் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் பேசல மனோஜ் இசையமைத்துள்ளார். ஆடை ஆபரண அலங்காரம் நுாபத்தி நீலம்பர, கதை மற்றும் நடன இயக்குனர் சந்தன விக்ரமசிங்க.


No comments:

Post a Comment