Friday, March 6, 2015

கடல் அலையில் இழுத்துச் சென்ற கமலை கடலுக்குள் குதித்து காப்பாற்றியவர்

1978ம்;ஆண்டு ‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. கமல், ஸ்ரீதேவி நடிப்பில், சினிமாத் தனங்கள் எதுவும் இல்லாமல், மிகவும் இயல்பா எடுக்கப்பட்டிருந்த கதை, படத்தில் இடம்பெற்ற அனைத்துக் கதாபாத்திரங்களும் எந்தவித ஜோடனையும் இல்லாமல், யதார்த்தமாக இருந்தன.
படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது ‘யார் இந்த ஆர்.சி. சக்தி?’ என்று பலரது மனங்களில் கேள்விகள் எழுந்தன. அதற்கு முன்பே கமல் ஹாசனை வைத்து ‘உணர்ச்சிகள்’ என்ற படத்தை அவர் இயக்கியிருக்கிறார் என்பதைப் பின்னர்தான் தெரிந்து கொண்டனர்.
ரஜினியைத் தூக்கி நிறுத்தியவர்
ரஜினிகாந்த் சற்று உடல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிப் படவுலகமே அதுபற்றி பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் திரைக்கு வந்த படம் ‘தர்மயுத்தம்’ ஒப்பந்தம் செய்யப்பட்ட பல படங்களிலிருந்து ரஜினியைத் தூக்கிக் கொண்டிருந்த நேரத்தில், அவருக்குக் கை கொடுத்த படம் ‘தர்ம யுத்தம்’, ‘பின்னணி இசை அமைப்பதற்கு முன்பே வெளியீட்டுத் திகதியை அறிவித்து விளம்பரம் செய்துவிட்டார் தயாரிப்பாளர்.
அவசர அவசரமாகப் படத்தொகுப்புச் செய்து பின்னணி இசைக்குப் படத்தை அனுப்ப வேண்டிய நெருக்கடி நிலை. புரிந்து கொள்ள முடியாத அளவுக்குப் படத்தொகுப்பின் போது எதையெதையோ வெட்டினார்கள். எதையெதையோ ஒட்னார்கள். செய்வது சரிதானா என்பதை உணரும் நிலையில் கூட அவர்கள் இல்லை. ஆனால் ‘தர்மயுத்தம்’ வெற்றி பெற்றுவிட்டதும் ஆர்.சி. சக்தி அளவில்லா ஆனந்தம் அடைந்தார்.
1983ம் ஆர்.சி. சக்தி இயக்கிய படம் ‘உண்மைகள்’ யாரும் தொடுவதற்கே அஞ்சக்கூடிய கதை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டது. படம் முழுவதிலும் வாழ்ந்திருந்தார் சக்தி, அவரால் மிகவும் கூர்மையாக எழுதப்பட்டிருந்த உரையாடல்கள் இப்போதும் சிலரின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
சமூகத்தின் போலித்தனங்கனையும், அவலங்களையும் மிகவும் கடுமையாகச் சாடியிருந்தார் சக்தி.
ஆர்.சி. சக்தி அதன்பின் ‘சிறை’ படத்தை தயாரித்தார். அனுராதா ரமணனின் கதை. ராஜேஷ், லட்சுமி நடித்தார்கள். வாகினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது காக்கி காற்சட்டையும் காக்கிச் சட்டையும் அணிந்து ஒரு தொழிலாளியாகவே தன்னை நினைத்துக் கொண்டு, படத்தை இயக்கியவர் சக்தி.
மிகவும் ஈடுபாட்டுணர்வுடன் படத்தை இயக்குவார் சக்தி, லட்சுமி கண்ணீர் விட்டுக் கதறி அழுத காட்சியொன்று படமாக்கப்பட்ட போது, தன்னை மறந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார் ஆர். சி. சக்தி அதுதான் அந்த உயர்ந்த கலைஞனின் தனித்துவக் குணம்!
விஜயகாந்த், சத்யராஜ் இணைந்து நடித்த ‘சந்தோஷக் கனவுகள்’ படம் தயாரிப்பில் இருந்த போது, அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.என்.எஸ். திருமால், சக்தி கேட்ட குறைந்தபட்ச தேவைகளைக் கூடச் செய்து கொடுக்கவில்லை. அந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளலாமா என்று கூடப் பல நேரங்களில் நினைத்திருக்கிறேன் என்று சொன்னவர் சக்தி.
1986ல் ரகுவரன் - அமலாவை வைத்து ‘கூட்டுப் புழுக்கள்’ என்றொரு அருமையான படத்தை இயக் கினார் சக்தி, நாவலாக வந்து புகழ்பெற்ற கதை. இன்றும் பலரின் மனதிலும் அப்படம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வில்லன் நடிப்பிலும் தனித்துவம் காட்டிய ரகுவரனின் மென்மையான நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய படம்.
அந்தப் படத்தில் நடிக்கும் போது சக்தி ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும் விதத்தைப் பற்றிப் பெருமையாக ரகுவரன் கூறியிருக்கிறார்.
எழுத்தாளர் சவீதா எழுதிய ‘இவளா என் மனைவி!’ என்ற நாவலை விஜயகாந்த் கதாநாயகனாக, நடிக்க சக்தி இயக்குவதாக இருந்தது. அதற்கு இயக்குநராக சக்தியை ஒப்பந்தம் செய்யும்படி தயாரிப்பாளரிடம் சிலர் கூறினார்கள். அதற்காகப் பாடல்கள் கூடப் பதிவு செய்யப்பட்டன. ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தொடர வில்லை.
எனினும், அதே கதையை ஆர்.சி. சக்தி தொலைக் காட்சித் தொடராக இயக்கினார், அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இரண்டு மணி நேர சினிமாவோ, 24 வாரத் தொடரோ எந்த ஊடகமும் சக்திக்கு வசப்பட்டிருந்தது.
1970ல் ‘அன்னை வோளாங்கண்ணி’ படப்பிடிப்பின் போது உதவி இயக்குநர்களாகத் தங்கப்பன் மாஸ்ட ரிடம் பணிபுரிந்த போது கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட கமல்ஹா சனை, கட லுக்குள் குதித் து த்தன் முதுகில் ஏற்றிக் கொண்டு வந்து காப்பாற்றியவர் சக்தி.
ஆர்.சி. சக்தி தன் படைப்பா ளுமையாலும் அரிய குணங்களாலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஆழமாகத் தடம் பதித்த பெயர் எளிமையின் மொத்த உருவம் அவர்.

No comments:

Post a Comment