சமூகத்தில் ஏழ்மை நிலைக்கான காரணத்தை அறிந்து அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள்
வழங்கப்பட வேண்டும் என்று கூறியவர் என். டி. ராமாராவ்

தென்னிந்திய திரையுலக வாழ்க்கையின் பிற்பகுதியில், இவர் கதை வசனம் எழுதுவதிலும், இயக்குவதிலும் ஆர்வம் காட்டினார். திரை வசனம் எழுத, முறையான பயிற்சிப் பெறாத போதிலும், என். டி. ராமா ராவ் எழுதிய பல உரைகள் மிகவும் பிரபலமானது. அவரது சொந்த படங்களான ‘சீதாராம கல்யாணம்’ மற்றும் ‘தான வீர சூர்ண கர்ணன்’ போன்ற திரைப்படங்களை அவரே இயக்கினார்.
அரசியல் வாழ்க்கை
1980 களில் என். டி. ராமா ராவ் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். திரைப்படத் துறையில் ஒரு அங்கமாக இருந்தபோதும் கூட, அவர் ஆந்திர பிரதேச கிராம பகுதிகளில் திரையரங்குகள் அமைக்க, அரசாங்கத்தை சம்மதிக்க வைக்க கடும் முயற்சி எடுத்தார்.
திரைப்படங்களுக்கு சரியான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக பணம் வழங்கும் நிர்வாக அமைப்பின் ஆதரவாளர்களுள் ஒருவராக இருந்தார் அவர். எனவே அரசியலில் ஈடுபடும் நோக்கம் எப்போதும் என். டி. ராமா ராவிற்குள் ஒளிந்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 1982ல், தெலுங்கு தேசக் கட்சியை உருவாக்கிய என். டி. ராமா ராவ் தொடர்ந்து மூன்று முறை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 1983- 1994ஆம் ஆண்டுகளுக்கிடையே தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையில் 1983ல் தெலுங்கு தேச சட்டமன்ற கட்சித் தலைவரானார். சாதாரண மக்களிடையே, அரசியல்வாதிகள் நேரடி தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நம்பிய என். டி. ராமா ராவ் அவரது கட்சியான ‘தெலுங்கு தேச கட்சியை ஊக்குவிக்கும் விதமாக ஆந்திரா மாநிலம் முழுவதும் விரிவான பயணங்கள் மேற்கொண்டார். ‘சைதன்யா ரதம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு தனிப்பட்ட வேனில் அவர் பயணம் மேற்கொண்டார்.
சமூகத்தில் ஏழ்மை நிலைக்கான காரணத்தையும், அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் என். டி. ராமா ராவ் அவர்கள் வாதாடினார். ஆந்திர மாநிலத்தில் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு வெற்றி வீரர் ஆவார். 1986ல் இயற்றப்பட்ட ‘பெண்கள் மூதாதையர் சொத்து மரபுரிமை அனுமதிக்கப் படவேண்டும்’ என்ற மசோதாவை முன்மொழிந்தார்.
என். டி. ராமா ராவ் அவர்கள், பிரபலமான அரசியல்வாதியாக இருந்ததால், அவரது தெலுங்கு தேசக் கட்சி அப்போதைய ஆட்சியிலிருந்த இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அச்சுறுத்தலை விடுத்தது.
தேர்தலில் என். டி. ராமாராவ், வெற்றிப் பெற்றாலும், இந்த அச்சுறுத்தலின் காரணமாக, 1984ல், ஆந்திர பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். என். டி. ராமாராவ் காலத்தில், தெலுங்கு தேசக் கட்சி நாட்டின் மிகவும் வலிமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சிகளுள் ஒன்றாக பேசப்பட்டது.
தெலுங்கு தேசக் கட்சியின் நடவடிக்கைகளும், அனைத்து வேலைகளும் முறையாக கணனி மயமாக்கப்பட்டதன் காரணமே, அதன் நிறுவனராக என். டி. ராமாராவ் இறந்த பின்பும் கூட, கட்சி இன்றைக்கும் நிலைக்க பொறுப்பு காரணிகள். 1994ல் என். டி. ராமா ராவ் அவர்கள், ஏகோபித்த முறையில் ஆந்திர மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது மோசமான உடல் நிலையின் காரணமாக, அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. என். டி. ராமா ராவ். 1989 ஆம் ஆண்டு பக்கவாதத்தால்’ பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
என். டி. ராமா ராவ் தெலுங்கு சினிமாவிலா சிறந்த நடிகருக்கான பத்து ஃபிலிம்பேர் விருதுகளை 1954 முதல் 1958 வரையும், பின்னர் 1961, 1962, 1966, 1968 மற்றும் 1972 ஆண்டுகளுக்கும் பெற்றார்.
1968ல், வெளியான அவரது படமான, ‘வரகட்னம்’ சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான ‘தேசிய திரைப்பட விருதினை’ பெற்றது. மேலும் தெலுங்கு சினிமா உலகில் என். டி. ராமாராவ் அவர்களது பங்களிப்பைப் போற்றும் விதமாக 1968 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருதை’ வழங்கி கெளரவப்படுத்தியது. 1978ல், ஆந்திர பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ ‘டாக்டர் பட்டம்’ வழங்கிப் பாராட்டியது.
இறப்பு
என். டி. ராமா ராவ் அவர்கள், தனது 72 வயதில், ஜனவரி 18, 1996 அன்று இறந்தார். அவர் இறந்த நேரத்தில், ஆந்திர பிரதேசத்திலுள்ள ஹைதெராபாத்தில் ஒரு குடியிருப்பாளராக அவர் இருந்தார். டோலிவுட்டில் மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேச அரசியலிலும் இன்றும் கூட அவர் இல்லாக்குறை உணர்வு இருந்து வருகிறது.
கால வரிசை
1923- என். டி. ராமாராவ் மே. 28, 1923 ஆம் ஆண்டு பிறந்தார்.
1942- பசவ தராகம் என்பவரைத் திருமணம் செய்தார்.
1947- என். டி. ராமாராவ் அவர்கள் பொலிவூட்டில் நுழைந்தார்.
1949- அவரது முதல் படமான ‘மன தேசம்’ வெளியானது.
1951- சாதனை முறியடிக்கும் வெற்றிப் படங்களில் நடித்தார்.
1958- தனது முதல் புராணக் கதாபாத்திரமான ‘இராவணன்’ வேடத்தில் நடித்தார்
1960- புராண பாத்திரங்களின் ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநாட்டினார்.
1968- பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment