Tuesday, March 24, 2015

குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றவர்

வாழ்க்கையில் ஏமாற்றம்
சந்திரபாபுவுக்கு 1956-ல் திருமணம் நடந்தது. மதுரையைச் சேர்ந்த 'Pலா என்னும் ஆங்கிலோ-இந்திய பெண்ணை மணந்தார். ஆனால் இருவரும் சேர்ந்து வாழவில்லை. விவாகரத்து செய்து கொண்டனர். என் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. முதல் இரவிலேயே நாங்கள் பிரிந்து விட்டோம் என்று, பல கட்டுரைகளில் சந்திரபாபு குறிப்பிட்டு இருந்தார்.
தனியாகவே சந்திரபாபு வாழ்ந்தார். வேலைக்கார சிறுவன் மட்டுமே கூட இருந்தான்.
பாதியில் நின்ற படம்
எம்.ஜp.ஆரை கதாநாயகனாக வைத்து, மாடி வீட்டு ஏழை என்னும் படம் தயாரிக்கத் தொடங்கினார். ஆனால் அது பாதியில் நின்றுவிட்டது.
சந்திரபாபுவின் பிற்கால வாழ்க்கை சோகமயமானது. பட அதிபர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று பரவலாக புகார் கூறப்பட்டது. அதனால் ஒரு காலத்தில் சந்திரபாபுவின் கால்'Pட்டுக்காக தவம் கிடந்த பட அதிபர்கள், விலகி ஓடத் தொடங்கினார்கள்.
சந்திரபாபுவுக்கு மதுப்பழக்கம் உண்டு. சோகம் அதிகமாக மதுப்பழக்கமும் அதிகமாகியது.
தூக்கத்தில் மரணம்
சந்திரபாபு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் தெருவில் வசித்து வந்தார். அவர் உடல்நலம் இல்லாமல் இருந்தார். இரண்டு முறை ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றுக்கொண்டார்.
7.3.1974 அன்று இரவு 3.30 மணிக்கு அவர் உடல்நிலை திடீரென்று மோசமாகியது. ரத்த வாந்தி எடுத்தார். அப்போது அவருடைய வேலைக்கார பையன் வந்து அவருக்கு உதவி செய்தான். அறையை சுத்தம் செய்துவிட்டு சந்திரபாபுவின் முகத்தையும் துடைத்துவிட்டான்.
~~நான் தூங்கப் போகிறேன். நீ கவலைப்படாமல் போய்ப்படு'' என்று அவனிடம் கூறிவிட்டு சந்திரபாபு படுத்துக்கொண்டார். 8-ந் திகதி அதிகாலை 5 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
சிவாஜpகணேசன் கதறல்
சந்திரபாபு மரணம் அடைந்த செய்தி நடிகர் சங்க தலைவர் சிவாஜpகணேசனுக்கு தெரிவிக்கப்பட்டது. சிவாஜpகணேசன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மேக்கப் போட்டுக் கொண்டு இருந்தார். இந்த துயர செய்தியை கேட்டதும் மேக்கப்பை கலைத்துவிட்டு சந்திர பாபு வீட்டுக்கு விரைந்தார்.
சந்திரபாபு உடலைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார்.
நடிகர் சங்கம்
சிவாஜpகணேசனின் ஏற்பாட்டின்படி, சந்திரபாபுவின் உடல் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள நடிகர் சங்க கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சந்திரபாபுவின் உடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
சந்திரபாபு கிறிஸ்தவர் என்பதால், அவர் தலை அருகே சிலுவை அடையாளம் வைக்கப்பட்டு இருந்தது. அதன் இரு புறங்களிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டு இருந்தன.
நடிகர்- நடிகைகள் பெருந்திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். பெற்றோர் சந்திரபாபுவின் தந்தையும் தாயும் வாலாஜhபாத்தில் குடியிருந்து வந்தனர். அவர்கள் இருவரும் சென்னைக்கு வந்து மகனின் உடலைப் பாத்து கண்ணீர்விட்டு அழுதனர்.
சந்திரபாபு மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்து அவர் தந்தைக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி அனுதாப செய்தி அனுப்பி வைத்தார். பெருந்தலைவர் காமராஜர் நேரில் வந்து சந்திரபாபு உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
~~சந்திரபாபு ஒரு சிறந்த கலைஞர். தேசிய தியாகப் பரம்பரையில் வந்தவர். அவருடைய மறைவு வருந்தத்தக்கதாகும். அவருடைய பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்!'' என்று காமராஜர் துயரத்துடன் கூறினார். சந்திரபாபுவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மைலாப்பு+ர் கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment