(கடந்தவாரத் தொடர்)
பாகவதர் ஒப்பந்தமான படங்களில் ஜுபிடரின் “வால்மீகி”யும் ஒன்று. கொள்ளைக்காரனாக இருந்து, பிறகு முனிவரானவர் வால்மீகி.
பாகவதருக்கு ஜோடியாக நடிக்க, நடிகை யு.ஆர். ஜீவரத்தினம் ஒப்பந்தமானார். சொந்தமாக பாடி நடத்த ஒருசில நடிகைகளில் ஜீவரத்தினமும் ஒருவர். அவர் முதன் முதலாக பாகவதருடம் இணைந்து நடித்ததால், ரசிகர்களிடம் “வால்மீகி” பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டி.ஆர். ராஜகுமாரி டி.எஸ். பாலையா, என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோரும் இப்படத்திற்கு ஒப்பந்தம் ஆயினர். “வால்மீகி” படப்பிடிப்பு தொடங்கியது. பாகவதரும், ஜீவரத்தினமும் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில் “இந்து நேசன்” என்ற பத்திரிகையின் ஆசிரியரான லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாகவதர் 1944 டிசம்பர் 28ம் திகதி கைது செய்யப்பட்டார். மறுநாள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் கைதானார். இரு பெரும் கலைஞர்கள் கைதானது கண்டு தமிழகமே அதிர்ச்சி அடைந்தது.
பாகவதரும், கிருஷ்ணனும் விரைவில் விடுதலையாகி விடுவார்கள் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. பாகவதர் வந்து விடுவார் என்று கருதி, “வால்மீகி” படப்பிடிப்பை சிறிது காலம் ஜுபிடர் நிறுவனம் நிறுத்தி வைத்தது.
ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், வேறு வழியின்றி வால்மீகியாக ஹொன்னப் பகவதரை நடிக்க வைத்து, படத்தை முடிக்க சோமுவும், மொகிதீனும் முடிவு செய்தனர். ஹொன்னப் பாகவதர், கன்னடத்தில் பிரபல நடிகர், சில தமிழ்ப்படங்களிலும் நடித்திருந்தார். தியாகராஜ பாகவதர் நடித்த “ அம்பிகாவதி”யில் அரசவையில் பாடகராக கச்சேரி செய்வார்.
சொந்தக் குரலில் பாடி நடிப்பவர் என்ற முறையில், அவர் தேர்வு செய்யப்பட்டார். அவர் நடித்த “வால்மீகி” 13-4-1946 ல் வெளிவந்து, ஓரளவு வெற்றிகரமாகவே ஓடியது.
No comments:
Post a Comment