கவிஞர் கண்ணதாசனின் கவி வரி
“சரஸ்வதியின் கையிலுள்ள வீணைபோல் இருக்கிaர்க ளே! உங்களை கவனிக்க யாருமில்லையா?”
என்று கவிஞர் கண்ணதாசனிடம் கேட்டவள், அவரிடம் கொஞ்ச நேர உறவுக்காக வந்த பெண்ணொருத்தி.
அந்தச் சொல்லே, வசந்தமாளிகை திரைப்படத்தில் “கலைமகள் கைப்பொருளே! உன்னை கவனிக்க ஆளி
ல்லையோ! விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ” என்ற பல்லவியாய்ப்
பூத்தது.கவிஞர் அத்தகைய பெண்களை அன்புடனும் புரிதலுடனுமே அணுகி வந்திருக்கிறார் என்பது அவரு டைய படைப்புகள் வழியாகவும் பாடல்கள் வழியாகவும் நமக்குப் புலப்படுகின்றன.
அவர் பால் இதய அன்பு வைத்து, இன்பம் கொடுத்த பெண்ணொருத்தி இளைய வயதிலேயே இறந்தது குறித்து அவர் எழுதிய இரங்கற்பா ஒன்று ஒப்பற்ற உணர்ச்சிப்படைப்பாய் ஒளிர்கிறது.
நேருவுக்கும், டி.என். ராஜரத்தினம் பிள்ளைக்கும், பெரியாருக்கும், காமராஜருக்கும், அண்ணாவுக்கும், கலைவாணருக்கும் ஆகச் சிறந்த இரங்கற்பாக்களை ஆக்கி, தனக்குத்தானே இருந்து பாடிய இரங்கற் பாவையும் எழுதிக்கொண்ட கவிஞர், பெயர் தெரியாத அந்தப் பெண்ணுக்காகவும் அந்தரங்க சுத்தியுடன் அழுது எழுதிய அஞ்சலிக் கவிதையின் தலைப்பு, “நான் மட்டும் அறிந்த கதை”
“தை மாத மேகமெனத் தள்ளாடும் பூங்கொடியே கையோடு நீயிணைந்தால் கற்பனைகள் ஊறுமடி!
பொங்கு தடந்தோளில் புல்லரித்து வீழ்ந்து விட்டால் தங்குதடை இல்லாமல் தமிழ்ப்பாடல் தோன்றுமடி!
வாழைத் தொடையிரண்டில் வசமிழந்த
வேளையிலே
ஏழைபோல் தோன்றிடுவேன் என்னதான்
விந்தையடி!
செவ்வாயில் ஒரு நிமிடம் ஜீவனுறப்
பாய்ந்துவிட்டால்
தெவ்வாதி தேவருக்கும் தேராத இன்பமடி!
தொட்டிலிலே பேரன்மார் தூங்குகிற வயதினிலும் கட்டிலிலே நீகொடுத்த கதையே நினைக்குதடி!
ஊர்பேர் அறியாமல் உயிர் துறந்த பைங்கிளியே ஊமை மனது மட்டும் உனைத்தேடி வாடுதடி” என்றெல் லாம் எழுதி விட்டு.
“அன்பே உன் ஆன்மா அமைதியுற வேண்டுமென்று என் பாடல் ஒன்று எழுதி முடிந்ததடி” என்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் கவிஞர்.
உரை நடையில் அத்தகைய பெண்களைப் பற்றிச் சொல்கையில், “பொருளாதாரத்தின் பொதுக் குழந்தை கள்” என்றெழுதுவார். தமிழில் பரத்தை என்கிற பிரிவு சங்க இலக்கியம் தொட்டுப் பேசப்பட்டிருக்கிறது. சரியான பொருளில் பார்த்தால், பரத்தையரும் கணிகையரும் வேறு வேறு தகுதிகள் கொண்டவர்கள். பரத்தையரில் ஆடல், பாடல் போன்ற கலைகளில் தேர்ந்தவர்களே கணிகையர்கள் என்றழைக்கப்பட்டனர்.
ஆனால் பரத்தையருக்கான பொதுச் சொல்லாக கணிகை என்ற பெயர் வழங்கலாயிற்று. கண்ணதாசன், மாதவி பற்றிய கவிதையொன்றில் உன்னைக் கணிகை யென் றால் உலகே கணிகைமயம்” என்பார். தகுதி யாலும் குண இயல்புகளாலும், மதிக்கத்தக்க இடத்தை மாதவி பெற்றாள். சிலப்பதிகாரத்தில் மாதவி பற்றிய ஒரு வரி பெரிதும் யோசிக்க வைத்தது. “சிறப்பிற் குன்றா செய்கையிற் பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை” என்பார் இளங்கோவடிகள்.
பெண்ணுக்கு மெல்லிய தோள்கள்தானே அழகு! “பெருந்தோள் மடந்தை” என்கிறாரே இளங்கோ! அறிஞர் அ.ச.ஞானசம்பந்தனிடம் கேட்ட போது “சேக்கிழார், திருஞான சம்பந்தரை சிறிய பெருந் தகை என்றது போல்தான் இதுவும்” என்றார் அவர். தோள் வலிமை காக்கும் தொழிலின் அடையாளம்.
தன் நடனத் திறனால் பரிசும் பொன்னும் பெற்று குடும்பத்தைக் காக்கிறாள் மாதவி என்பது கூட அதற் குக் காரணமாயிருக்கலாம்.
நீதி நூல் என்ற அளவில் பரத்தைமையைக் கண்டிக் கத் தலைப்பட்ட வள்ளுவர், சற்று கடுமையாகப் பாடிவிடுகிறார். பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழி இயற்று” என்கிறார். பணத்துக்காகப் பொய்யாகத் தழுவும் பெண்களுடன் உறவு கொள்வது,
இருட்டறையில் அனாதைப் பிணத்துடன் உறவு கொள்வதைப் போன்றது என்று கடுமையாக சாடுகிறார் திருவள்ளுவர். அறிவுலகின் நெடும் பரப்பில் வள்ளுவர் எடுத்து வைத்த இந்த வாதத்தை, கவிஞர் கண்ணதாசன் தான் எதிர்கொள்கிறார்.
அந்தப் பெண்களின் உணர்வுகளுக்கு முதலிடம் தந்து மாற்றுக் கேள்வி எழுப்புகிறார். “தொட்டவுடன் ஒட்டிக்கொள்ள சட்டிப் பானையா?
வந்த தோளுக்கெல்லாம் மாலைபோடக்
காயில் யானையா?” என்கிறார்.
No comments:
Post a Comment