Saturday, January 4, 2025


 


 

அறநெறி அறிவு நொடி 2002 இல் இருந்து

 

20419 ) வியாசர் எழுதிய புராணங்கள் எத்தனை ? 18

20420 ) வேதங்களில் மிகவும் பழைமையானது எது?

ரிக் வேதம்

20421 )திருக்கோவிலூர் பெருமாளின் பெயர் என்ன?திருவிக்கரமன்

20422 )சிவனின் ஐந்து தொழில்கள் யாவை? படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், மற்றும் அருளல்.

20423 ) திருஆவினங்குடி என்ற முருகனின் அற்படை வீடு எது? பழனி

20424 ) தேவேந்திரனின் வாகனமான யானையின் பெயர் என்ன?ஐராவதம்

20425 ) சீதையை மணமுடிக்க இராமர் ஒடித்த வில்லின் பெயர் ? சிவதனுசு

20426 ) அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் யார்? சுக்ராச்சார்யார்

20427 )சைவ சமய குரவரர் யார் யார்? அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

20428)சிவபெருமான் யாருக்காக காலனை காலால் உதைத்தார்?மார்க்கண்டேயர்

20428) சிவனுக்கு எத்தனை வடிவங்கள்? 64

20428) திருமுருகாற்று்படையை இயற்றியது யார்? நக்கீரன்

20428)சூரபத்மன் முருகனிடம் போரிடும் பொழுது எந்த மரமாக மாறி நின்றான்? மாமரம்

20428) காவேரி உற்பத்தியாகும் இடம்? கர்நாடக மாநிலம் தலை காவிரி

20428) உப்பினால் செய்த லிங்கம் எங்குள்ளது? இராமேஸ்வரம்

20428) குரு பூர்ணிமாவில் சன்யாசிகள் செய்யும் பூஜா ? வியாச பூஜா

20428) பரமேஸ்வரனை அதிதேவதயாக கொண்ட நக்ஷத்திரம்?திருவாதிரை

20428) மஹா பிரதோஷம் வைணவர்கள் யாரை வணங்குவர்?

ரீ லக்ஷ்மி நரசிம்மர்

20428) தக்ஷிணாமூர்த்தி காட்டும் முத்திரையின் பெயர் என்ன?சின்முத்திரை

20428) பூதத்தாழ்வார் பிறந்த ஊர்? திருக்கடல்மல்லை

20428) சாம வேதம் எதை ஆதாரமாகக் கொண்டது? இசை

ருக்மணிதேவிக்குப் பின் சிங்கள கலையுலகை கலக்கும் நிரஞ்சனி

 

ருக்மணிதேவிக்குப் பின் சிங்கள கலையுலகை கலக்கும் நிரஞ்சனி

இலங்கை சிங்கள சினிமாத் துறை வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஆரம்ப காலத்தில் சிங்கள சினிமாவை கலக்கி வந்த ஒரு தமிழ் நடிகை ருக்மணிதேவி. இவர் நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகியுமாவார். அவரது மறைவுக்குப் பின் நீண்டகாலமாக வெற்றிடமாக இருந்த இந்தக் குறையை நிவர்த்திக்கும் வண்ணம் சிங்கள திரையுலகுக்குள் பிரவேசித்து கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் நிரஞ்சனி சண்மகராஜா. இவர் வரலாற்று சிறப்பிக்க இதிகாச கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குவேணி மேடை நாட்டிய நாடகம் எதிர்வரும் 2025.01.03ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் உள்ள தாமரைத் தடாக மண்டபத்தில் மேடையேறவுள்ளது. இலங்கை மேடை நாடக வரலாற்றில் இதுவரை மேடையேற்றப்படாத முறையில் மிகவும் பிரமாண்ட முறையில் மேடையேற்றப்பட இருக்கிறது இந்த நாட்டிய நாடகம். இந்த நாடகத்தில் நடிக்கின்ற ஒரே ஒரு தமிழ் நடிகை நிரஞ்சனி சண்முகராஜா. இதில் நுாறு நடனக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளார்கள். தொழில் நுட்பம், நடிப்பு என 250 கலைஞர்கள் இதில் பங்களிப்புச் செய்யவுள்ளார்கள். நடனத்துறையில் நிபுணத்துவம் பெற்ற சிரேஷ்ட நடனக்கலைஞர்களான சந்தனா விக்ரமசிங்க, லெஜெண்டரி கலாநிதி ரவிபந்து வித்யாபதி ஆகியோர் இதற்கு நடனக் கலை வழங்கி இயக்குகிறார்கள். இதுவரை தமிழ், சிங்கள திரைப்படங்களில் நடித்தவந்த நடிகை நிரஞ்சனி சண்முகராஜாவுக்கு இது புது அனுபவமாக இருக்கும் என்று கூறினார். கலாநிதி ரவி பந்து வித்தியாபதி, பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க, ரஞ்சித் பிரியங்க, சாரங்க விமுக்தி, நரேந்தர் சத்துரங்க, ரசிது லக்‌ஷான், தேவாங்கி விக்ரமசிங்க, கௌசல்யா மதுவந்தி, துமிந்த தர்சன ஆகியோர் இதில் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் பேசல மனோஜ் இசையமைத்துள்ளார். ஆடை ஆபரண அலங்காரம் நுாபத்தி நீலம்பர, கதை மற்றும் நடன இயக்குனர் சந்தன விக்ரமசிங்க.