Sunday, December 1, 2024

அரச நாடக விழாவில் "பறையனின் கடைசி அடி"



கலாசாரத் திணைக்களம் வருடாந்தம் நடத்தி வரும் அரச நாடக விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதில் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் ஒன்று "பறையனின் கடைசி அடி". இந்த நாடகத்தை கந்தலோய தோட்டம் நாவலப்பிட்டியில் வசிக்கும் மோசஸ் சுரேஷ் தயாரித்து நெறியாள்கை செய்துள்ளார்.

நாம் பார்க்கும் சமகால உலகில் வாழ்ந்து வரும் கடைசி பறையன் அவனுடைய மனநிலையை வெளிப்படுத்தத் தெரியாமல் ஒரு சூழ்நிலை கைதியாக மாறுகிறான். ஒரு பக்கம் தன்னுடைய கலை, மறுபக்கம் இன்றைய சமூகத்தின் எதிர்பார்ப்பு. இரண்டுக்கும் இடையில் இவன் சிக்கிக் கொள்ளும் சந்தர்ப்பமானது இவனுடைய மனநிலையை மரணத்திற்கு இட்டுச் செல்கின்றது. பறையனின் கடைசி பறை அடியானது அடுத்த சந்ததியினருக்கு நல்ல கருத்துக்களை வழங்கும் முகமாக இந்த நாடகம் படைக்கப்பட்டுள்ளது.

ஆர் தனுஷன், சத்தியசீலன், கலைச்செல்வன், அல்ட்ரிக், ரஞ்சிதன் (மேடை அமைப்பு) சஞ்ஜிவனி, அனுஷ், ரிஸ்கா (நாடகக் கலைஞர்கள்) ராஜேஸ்வரி, நிரஞ்சன், பஜித்ரா ஆகியோர் இந்த நாடகத்திற்கு தங்களால் இயன்ற வகையில் பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி இந்த நாடகம் கூத்துக்கலையாக அமைந்துள்ளது. மலையகத்தில் உள்ள ஒரு பிரச்சினையை மையப்படுத்திய இந்த நாடகம் அரச நாடக விழாவில் மூன்றாம் சுற்றுக்கு தெரிவாகி கடந்த 2024.11.22 திகதி மேடையற்றப்பட்டது.

No comments:

Post a Comment