மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பான எங்கள் தங்கம் படத்தின பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அதில் குறிப்பிட்ட இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஓன்று நான் அளவோடு ரசிப்பவன்" மற்றொன்று நான் செத்து பிழைச்சவன்டா இரண்டு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. நான் அளவோடு ரசிப்பவன் பாடலின் முதல் வரியை எழுதிவிட்டு அடுத்த வரிக்காக யோசித்து கொண்டிருந்த வாலியின்; அருகில் வந்த கருணாநிதி என்ன பல்லவி எழுதி விட்டீர்களா என்று கேட்டார். நான் அளவோடு ரசிப்பவன் என்று முதல் வரியை சொன்னார் வாலி எதையும் அளவின்றி கொடுப்பவன் என்று கருணாநிதியிடம் இருந்து வந்தது இரண்டாவது வரி. எம் ஜி ஆரின் வள்ளல் தன்மையை மனதில கொண்டு கருணாநிதி கூறிய இந்த வரிக்குப் பிறகு பாடலை கடகடவென எழுதி முடித்தார் வாலி. பாடல் எம் ஜி ஆரிடம் சென்றது. பாடலின் இரண்டாவது வரியை வாலிக்கு கருணாநிதி எடுத்து கொடுத்த விஷயம் எம் ஜி ஆருக்கு தெரியாது.
சில நாட்கள் கழித்து வாஹினி ஸ்டூடியோவில் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த எம் ஜி ஆரை சந்தித்தார் வாலி. அவரை வரவேற்று பேசிய எம் ஜி ஆர் நான் அளவோடு ரவிப்பவன் பாட்டு பிரமாதம் அதிலும் அந்த இரண்டாவது வரி அருமை என்று கூறிய எம் ஜி ஆர் வாலியை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். அண்ணே இந்த முத்தத்தை; நீங்க கருணாநிதிக்கு தான் கொடுக்கணும் என்று கூறிய வாலியிடம் ஏன்? ஏன்று புரியாமல் கேட்டார் எம் ஜி ஆர். விஷயத்தை வாலி சொன்னதும் சிந்தனையில் ஆழ்ந்தார் எம் ஜி ஆர்.
அதன் விளைவு அந்த படத்தில் இடம்பெற்ற நான் செத்து பிழைச்சவன்டா என்ற பாடலின் பல்லவியை எழுதி எம் ஜி ஆரிடம் காட்டினார் வாலி. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எம் ஜி ஆர் உயிர் பிழைத்த பிறகு வெளியான இந்த பாடல்; அவருக்கு சரியாக பொருந்தியது. திருப்தியடைந்த எம் ஜி ஆர் வாலியிடம் இந்த பாடலின் இரண்டாவது சரணத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது பற்றி நாலு வரியிலே நறுக்குனனு எழுதிடுங்க என்று எம் ஜி ஆர் கூற இதையடுத்து பிறந்த வரிகள் தான ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலை வைத்து உயிரையும் துறும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டமிது. தனது கொடை உள்ளத்தை அளவின்றி கொடுப்பவன் என்று புகழ்ந்து கூறிய கருணாநிதியின் போர்க் குணத்திற்கு எம் ஜி ஆரின் பதில் மரியாதை
No comments:
Post a Comment