நடிகை விஷாகா சிங் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் டிஷேர்ட் அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் நுஎநசலடிழனல ளை ளழஅநடிழனல’ள கழசநபைநெச என்கிற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒருவர் மிக மோசமான முறையில் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கொமெண்ட அடித்தார். வழக்கமாக இதுபோன்ற ஆபாசமான கொமெண்ட்களை நடிகைகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அல்லது நீக்கிவிடுவார்கள். ஆனால் விஷாகா சிங் ஆபாசமாக கொமெண்ட செய்த நபரை ஒரு பிடி பிடித்தார்.
நான் பெண் என்று எனக்குத் தெரியும். ஒரு பொது அறிவு தெரியுமா, உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, மகள், தோழிகளுக்கு இருப்பதுபோலத்தான் எனக்கும் உள்ளது. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பதுதான். உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை, தோழிகளுக்கும் இது பொருந்தும். அவர்களிடம் போய் இப்படி அசிங்கமாக கொமெண்ட் அடிக்க முடியுமா? உனக்காக நான் வருத்தப்படுகிறேன். தைரியம் இருந்தால் என் முன்னால் வந்து சொல். இல்லையென்றால் என்னுடைய பக்கத்தை விட்டு வெளியே செல் என்று பதிலடி கொடுத்தார்.
பிறகு அந்தப் புகைப்படத்தையும் அதனால் உருவான கொமெண்டகள் அத்தனையும் நீக்கிவிட்டார். தேவையில்லாத எதிர்வினையை உருவாக்கும் என்பதால் அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டேன் என்று பின்னர் விளக்கம் கொடுத்தார். இவர் கண்ணா லட்டு திங்க ஆசையா என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
No comments:
Post a Comment