
அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். ஜயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும் குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.
nஜயலலிதா தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும், அவர் கதாநாயகியாக நடித்து 1965ம் ஆண்டில் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை"தான் அவரது முதல் தமிழ்ப்படம். வெண்ணிற ஆடை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பி.ஆர்.பந்துலுவின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜp.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 2 படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றன.
எம்.ஜ.ஆருடன் ஜோடி சேர்ந்ததுதான் ஜயலலிதாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
முதல் படத்திலேயே கதாநாயகியாகி புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற nஜயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். இதில் புரட்சித்தலைவர் எம்.ஜ.ஆருக்கு ஜோடியாக 28 படங்களில் நடித்துள்ளார். ஜயலலிதாவின் நிறம், அழகு அவருக்கு என்று தனி ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. எம்.ஜp.ஆர்,, சிவாஜ, ஜமினி, என்.டி.ராமராவ், nஜய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

1960, 70களில் அசைக்க முடியாத நாயகியாக திகழ்ந்த nஜயலலிதா சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார். 1980ல் வெளிவந்த “~~நதியைத்தேடி வந்த கடல்" என்ற திரைப்படம்தான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.
nஜயலலிதாவின் தாயார் சந்தியாவின் இயற்பெயர் வேதா. அவரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய nஜயலலிதா, அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சு+ட்டி மகிழ்ந்தார் nஜயலலிதா.நடிகையாக இருந்த nஜயலலிதா எம்.ஜp.ஆருடன் நடித்து, அவரின் அன்பிற்கு பாத்திரமாகி அவர் அதிமுகவை தொடங்கிய பின்னர் கட்சியில் இணைந்தார். ராஜ் யசபா எம்.பியானார்.
எம்.ஜp.ஆரின் மறைவிற்குப் பின்னர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று, பின்னர் 1991 ஆம் ஆண்டு முதன் முறையாக முதல்வரான அவர் 2001, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்று முறை முதல்வராக வெற்றி பெற்றார். நடிகையின் மகளாக பிறந்து நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கிய nஜயலலிதா,
No comments:
Post a Comment