Monday, August 4, 2014

மக்கள் திலகத்தின் அரசியல் பிரமுகர்களுக்கான அறிவுரைகள்

ஒருநாள் மக்கள் திலகம் மாம்பலம் அலுவலகத்தில் மந்திரி சபை அமைத்ததைப் பற்றி பேசிய போது, 1980ல் நடந்த எம்.பி. தேர்தலில் (அ.இ.அ.தி.மு.க.) நம்ம கட்சி படுதோல்வி அடைந்தது. அதனால், மந்திரி சபையை கலைத்தார்கள். அதேநேரம் மனம் தளராமல் அடுத்து நடந்த எம்.எல்.ஏ. தேர்தலில் ஆட்சியில் மக்கள் எம்மை அமர்த்தினார்கள்.
ஆக எல்லாம் நம் கையில் இல்லை மக்கள் கையில் தான் இருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து கொண்டு இருந்தால் போதாது மக்கள் மனதில் குடிபோக வேண்டும்.
அவர்களை நாம் எப்போதும் சந்தித்துக் கொண்டே இருக்கணும். இந்த கட்சிக்கு நீங்கள் எல்லாம் எப்படி என்னைத் தலைவராக தேர்ந்து எடுத்துள்Zர்களோ அதேபோல் தான் நம்மை மந்திரிகளாக இருக்க ஆட்சி நடத்த மக்கள் தேர்ந்து எடுத்து உள்ளார்கள். நான் சினிமாவில் புகழ் அடைந்தேன் என்றால் அது மக்களால்தான். நான் அப்பவே மக்களுக்கு நண்பனாகிவிட்டேன் அதனால்தான்.
இப்போ என்னால் ஒரு பெரிய அளவில் வளர்ந்து உள்ள அரசியல் கட்சிக்கு தலைவனாகவும் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராகவும் இருக்க முடிந்தது. அதனாலே நாம் எல்லாம் மக்கள் மனதில் இருக்கனும். இது முக்கியமாக மற்ற மந்திரிகளுக்கும் எம்.பி., எம்.எல். ஏக்களுக்கும் மக்கள் திலகம் அடிக்கடி சொல்லும் அறிவுரைகள்

No comments:

Post a Comment