
வசனகர்த்தா என்று எட்டுத் துறைகளிலும் கொடி நாட்டிய அசாதாரண திறமை கொண்ட நடிகை. இவர் திறமையை எண்ணி வியக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். தமிழக சூப்பர் ஸடார்கள் தியாகராஜ பாகவதர் அவர்களுடன் ‘ராஜமுக்தி’ திரைப்ப டத்திலும், பி.யூ.சின்னப்பா அவர்களுடன் ‘ரத்னமுமார்’ திரைப்படத்திலும் நடித்து பெரும் புகழ் பெற்றவர். 1953 இல் வெளிவந்த ‘சண்டிராணி’ என்ற தன் சொந்தத் தயாரிப்பு படத்தின் இயக்குனரும் இவரே. இருபத்தெட்டு வயதிலேயே இயக்குனரான இமய நடிகை.

தெலுங்குத் திரைப்பட உலகில் ‘பாவுரமா பானுமதி’ என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறார். தெலுங்கில் டாப் ஸ்டார்களாய் திகழந்த என்.டி.ஆர். நாகேஸ்வரராவ், நாகையா ஆகியோருடன் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் படங்களை அளித்தவர்.
நடிகர் திலகத்துடன் ‘கள்வனின் காதலி’ யில் முதன் முதலாக ஜோடி சேர்ந்தார் பானுமதி. இந்தப் படத்தில் நடிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது.
பானுமதியோ சீனியர் நடிகை. மிகவும் கண்டிப்பானவர். கதாநாயகர்கள் அவரை தொட்டு நடிக்கக் கூட பயப்படுவார்கள். அவர் பெர்மிஷன் இல்லாமல் அவரை தொடக் கூட முடியாது. அப்படிப்பட்ட சீனியருடன் நடிக்க ‘கள்வனின் காதலி’யில் நம்மவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஷ¥ட்டிங் நடக்கத் தொடங்கியது. பானுமதி 1939 இல் திரையுலகில் களமிறங்கியர்.
நம்மவர் 1952 இல் புயலாகப் புகுந்தவர். கிட்டத்தட்ட 13 வருடங்கள் பானுமதி நம்மவருக்கு சீனியர். பட ஆரம்ப ஷ¥ட்டிங்கின் போது பானுமதி இயக்குனர் வி.எஸ். ராகவனிடம் “பையன் எப்படி நன்றாக நடிப்பானா... எனக்கு சமமாக நடிக்க வேண்டுமே!” என்றாராம்.
நடிப்பு என்று வந்துவிட்டால் நம்மாளுக்கு சீனியராவது ஜூனியராவது... நடிகர் திலகம் வழக்கம் போல கள்வனின் காதலியில் நடிப்பில் களேபரம் செய்ய பானுமதி நம்மவரின் நடிப்பில் மிரண்டு, அரண்டு போய் இயக்குனரை சில நாட்களுக்குள்ளேயே தனியே அழைத்து “அந்தப் பையனை (நடிகர் திலகத்தை) கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்... விட்டால் என்னையே காணாமல் காலி செய்து விடுவான் போல இருக்கிறது” என்றாராம் பரிதாபமாய்.
(இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் பின்னாளில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் மனோரமா சீனியர் நடிகையாகவும், நாகேஷ் அறிமுக நடிகராகவும் நடிக்கும் காட்சி ஒன்று சித்தரிக்கப்பட்டிருந்ததாக கூறுவோர் உண்டு... அந்த காட்சியும் பிரமாதமாகவே இருக்கும்) கல்கியின் ‘கள்வனின் காதலி’, கொங்கு நாட்டுத் தமிழை புகழ்படுத்திய ‘மக்களைப் பெற்ற மகராசி’ ‘அண்ணாவின் ரங்கோன்’ ராதா (நடிப்பின் இலக்கணம் என்று அண்ணாவால் பானுமதி போற்றப் பட்டார்” ‘அம்பிகாபதி’ ‘அறிவாளி’, ‘மணமகன் தேவை’, ‘ராணி லலிதாங்கி’ படங்களில் கதாநாயகியாக நடிகர் திலகத்துடன் சோபித்தவர். அதுமட்டுமல்லாமல் சாரங்கதாரா.
ராஜபக்தி (வில்லி) தெனாலிராமன் (வில்லி), படங்களிலும் நடிகர் திலகத்துடன் நடித்துள்ளார். “வெயிற்கேற்ற நிழலுண்டு” “வெண்ணிலா ஜோதியை வீசுதே”. “போறவளே போறவளே பொன்னுரங்கம்”, “கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே”, “மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு” போன்ற அற்புத பாடல்களைப் பாடி தன் தனித்தன்மையான குரல் வளத்தால் நம் உள்ளங்களில் குடிகொண்டவர்.
குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு படம் ‘அறிவாளி’ நடிகர் திலகமும், பானுமதியும் போட்டி போட்டுக் கொண்டு தத்தம் திறமைகளை நிரூபித்திருப்பார்கள். சும்மா நம்ம தலைவர் பானுமதியை பாடாய் படுத்துவார் பாருங்கள்... பானுமதியும் சரியாக ஈடு கொடுப்பார். அந்த ரோலில் பானுமதியைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து கூட என்னால் பார்க்க முடியவில்லை.
தத்துவம் ஜோதிடம் இவற்றிலும் சிறந்தவர் பானுமதி. இவருடைய கணவர் ராமகிருஷ்ணா சொந்தமாக தன் மகன் பெயரில் ‘பரணி ஸ்டுடியோ’ என்ற ஸ்டுடியோவும் இவருக்கு உண்டு. ‘பரணி பிக்சர்ஸ்’ பெயரில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். அதில் ‘மணமகன் தேவை’ என்ற அற்புத நகைச்சுவை படத்தை நடிகர் திலகத்தை வைத்து அருமையாக எடுத்திருந்தார் பானுமதி Western hero போல இப்படத்தில் நடிகர் திலகத்தை வித்தியாசமாக, அழகுறக் காட்டியிருந்தார்கள்.
ஏவி.எம்.ன் ‘அன்னை’ படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார் பானுமதி. பல பரிசுகளையும், அவார்டுகளையும் பானுமதி பெற்றிருக்கிறார். அவற்றுள் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் முக்கியமானவை. Western music, Hindustain music இரண்டிலும் கரை கண்டவர். பல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.
நடிகர் திலகம் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட பானுமதி “நீயுஸ் கேள்விப்பட்டவுடன் என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை” என்று துக்கம் தொண்டை அடைக்க கதறியதை நம்மால் மறக்கவே முடியாது. கொங்குநாட்டு தமிழின் பெருமையை நடிகர் திலகம் வாயிலாகப் பறைசாற்றிய ‘மக்களைப் பெற்ற மகராசி’ காவியத்திலிருந்து நடிகர் திலக மும், பானுமதியும் அசத்தும் “போறவளே... போறவளே.. பொன்னுரங்கம்” பாடல் மிகவும் பிரபல்யமானது.
No comments:
Post a Comment