எப்படி இந்த குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும் என்று அடுத்த நாளில் எந்த விதமான குடும்ப சிந்தனையும் இல்லாமல் ஒரு புதுமனிதன் போல் வெளியே தன் தொழிலுக்காக சென்றார்.
எப்போதும் போல் காலை 5 மணிக்கு எழுந்து தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியில் செல்லும் போது அறையில் செல்லமாக மனைவியின் கன்னத்தை கிள்ளிவிட்டு ஒரு பொன் சிரிப்போடு சிரித்து விடைபெற்று அம்மாவுடைய ஆசிர்வாதத்தோடு வெளியே செல்லும் பழக்கத்தை வைத்துக் கொண்டார்.

எந்தப் படத்தில் எந்த வேடத்தில் கிடைத்தாலும் நடிப்போம் என்ற முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது ஒரு நாள் தன் தாய் எம். ஜி. ஆர். சூட்டிங் முடித்து வீட்டிற்கு வந்த பிறகு சந்தர்ப்பம் பார்த்து மகனே என்று அழைத்து உனக்கு நான் ஒரு சந்தோசமான செய்தியை சொல்ல போகிறேன்.
அப்பிடியா என்னங்கம்மா சொல்லுங்கம்மா என்றார் எம். ஜி. ஆர். மகனே நீ ஒரு குழந்தைக்கு தகப்பனராக ஆகிவிட்டாய் என்று தாய் மிக மன மகிழ்ச்சியோடு சொன்னார். இதை கேட்ட எம். ஜி. ஆர். முகத்தில் எந்த விதமான ஒரு சந்தோசமும் இல்லை. ஆனாலும் அதை அம்மாவிடம் காட்டிக்கொள்ளாமல் அம்மா ரொம்ப சந்தோசம் என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.
அண்ணனுக்கு இரண்டு குழந்தைகள் ஒன்று பெண், ஒன்று ஆண். இந்த நிலையில் இவ்வளவு சீக்கிரம் நமக்கும் குழந்தையா என்று நினைத்து வேதனைப்பட்டார். என்ன செய்வது எல்லாம் கடவுள் செயல் உழைப்பில் கவனமாகவும் உறுதியாகவும் இருந்த எம். ஜி. ஆருக்கு மீண்டும் ஒரு கடுமையான சோதனை ஏற்பட்டது.
No comments:
Post a Comment