Wednesday, October 17, 2012

 

பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே...

படம்: மணமகன் தேவை பாடியவர்: சந்திரபாபு இசை: எம். எஸ். வி.
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டுப்படி ஆகலே காதல் தரும் வேதனை
கட்டுப்படி ஆகலே காதல் தரும் வேதனை
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
கண்டவுடன் காதலே கொண்டாளே நெஞ்சிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே கொண்டாளே நெஞ்சிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது - என்
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
திண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
திண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே

முதன் முதலில் பெண்ணாக நடித்து அசத்தியவர் பாலாஜp

திவான்பகதூர், ரங்காச்சாரி அவர்களின் பேரன். இவர் சென்னை, புரசைவாக்கத்தில் இருக்கும் எம்.ஸி.டி. உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, மாடப்புறா டைரக்டர் எஸ்.ஏ. சுப்பராமன் அப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். பள்ளி நாடகங்களை அவர்தான் டைரக்ட் செய்வார்.
எதிரொலி என்ற நாடகத்தின் போது தலைமை ஆசிரியராக இருந்த கோபாலகிருஷ்ணய்யர் மேக்கப் அறைக்கு வந்தார். அங்கே எழிலே உருவாய்ப் பூத்து குலுங்கிய மங்கை ஒருத்தி, தலைமை ஆசிரியருக்குக் கை கூப்பி வணக்கம் செய்தாள்! ஆண்கள் பள்ளியில் மாணவர்கள் நடிக்கும் நாடகத்தில் ஒரு பெண்ணா என எண்ணிய அவர் ‘மிஸ்டர் சுப்பராமன்’ என்று கூப்பிட்டு சுப்பராமனை கோபத்தோடு அழைத்துக்கொண்டு வெளியே போனார். ‘என்ன இது! உங்கள் நாடகத்தில் பெண்கள் நடிக்கப் போவதாக என்னிடம் சொல்லவே இல்லையே? இது மகா தவறு’ என்றார்.
சுப்பராமன் சிரித்தபடி ‘சார் மன்னிக்கணும். அது பெண் அல்ல! நம்ம பள்ளி மாணவன்தான் சார்’ என்றார். தலைமை ஆசிரியருக்கு ஆச்சர்யம் தாள முடியவில்லை. அத்தனைப் பொருத்தமாகப் பெண் வேடம் அமைந்த அந்த நடிகர், படித்துக்கொண்டிருந்த போதே ஜெமினியின் ஒளவையார் படத்தில் முருகனாகத் தோன்றினார். பின்னர் தன் தந்தை பணியாற்றிய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஒபீசிலேயே ஒரு குமாஸ்தாவாகச் சேர்ந்தார்.
சில மாதங்களில் அதை இராஜினாமா செய்து விட்டு நரசு ஸ்டூடியோவில் புரொடக்ஷன் மனேஜராகப் பணியாற்றினார். பின்பு அதையும் விட்டுவிட்டுத் திரையுலகில் நுழைந்து நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார். முன்பு சோழவரத்தில் நடைபெற்ற நட்சத்திரங்கள் பங்கெடுத்துக் கொண்ட கார் பந்தயத்தில் முதலாவதாக வந்தார். கார் என்றால் இவருக்கு அலாதி ஆசை!
இவருடைய பிள்ளை சுரேஷ் நடிப்பில் தந்தையை மிஞ்சி விடுகிறானாம். இந்த நடிகரின் பெயர் பாலாஜி.

தருமி முதல் தசாவதாரம் வரை

நாகேஷ் என்றால் நகைச்சுவை புத்திசாலித்தனமான பாவனை வெளிப்பாடும் டைமிங் சென்ஸ¤ம் உடல் மொழியும் அவருடைய நகைச்சுவைக்குத் தனி ஈர்ப்பைத் தருகின்றன.
திருவிளையாடல், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை. ஆயிரத்தில் ஒருவன் சர்வர் சுந்தரம் போன்றவை அவருடைய முதல் ரவுண்டு கொமெடிகள் உடல் சேட்டைகளும் ஓங்கி ஒலிக்கும் குரலும் பிரதானமாக இருந்தன. அதில் அவருடைய இரண்டாவது இன்னிங்ஸ், ஆழ்ந்த அமைதியான உடல் சேட்டைகள் குறைந்த கொமெடிகள். பேட்டி தருவதில் பெரிய விருப்பம் எதுவுமில்லை அவருக்கு. மிகவும் விருப்பமுள்ளவர்கள் அல்லது ஏற்கனவே பழகியவர்களிடத்தில் மட்டும் தான் அவர் பேசுவார். அப்படிப் பேசும்போது அங்கே தொடர்ந்து நகைச்சுவைப் பட்டாசு வெடிக்கும்.
கமல்ஹாசனின் மகளிர் மட்டும் படத்தில் அவர் நடிப்பதை கமல்ஹாசன் இப்படி அறிவித்தார். இந்தப் படத்தில் நாகேஷ் நடித்திருக்கிறார். உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ‘இருக்கவில்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார் என்றார். ஒரு படத்தில் ஒரு நடிகர் முழுவதும் பிணமாகவே நடித்து சிரிக்க வைத்தது உலக சினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் முறை என்று தோன்றுகிறது.
‘அபூர்வ சகோதரர்கள்’,’காதலா காதலா’, ‘பஞ்சதந்திரம்’, ‘தசாவதாரம்’ என கமல் பல படங்களில் நாகேஷைப் பயன்படுத்தி இருக்கிறார். படத்தில் நடிப்பதில் அவருடைய பங்கு முக்கியத்துவமானது என்பது மட்டுமல்ல. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவர் தரும் பங்களிப்புக்காகவும் தான் அவருக்கு இந்தத் தொடர்ச்சியான வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். பஞ்ச தந்திரம் படப்பிடிப்பின்போது நடைபெற்ற சிறு சம்பவம் இது. கமல்ஹாசன் எப்போதும் அதிக காரம் சாப்பிடமாட்டார்.
அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிக்கன் துண்டில் ஒட்டியிருந்த மசாலாவைத் தவிர்க்கும் விதமான அதன் கழுத்துப் பகுதியைப் பிடித்துக் கொண்டு தட்டில் தட்டினார். மசாலா விழுவதாக இல்லை. வேகமாகப் பலமுறை தட்டினார். அருகில் இருந்த நாகேஷ் லேசாகத் திரும்பிப் பார்த்து என்னப்பா... கோழி சரியா சாகலையா. இந்த அடி அடிக்கிறே? என்றார் கூலாக. கமல் இதையெல்லாம் ரசிப்பார் என்று நாகேஷ¤க்குத் தெரியும். நாகேஷ் இப்படியெல்லாம் ரசிக்க வைப்பார் என்று கமல்ஹாசனுக்குத் தெரியும்.

மகளை நடிக்க வைப்பாரா ஸ்ரீதேவி

=தேவியின் மூத்த மகள் சினமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோலிவுட், பொலிவுட் என சினிமா உலகின் கனவுக் கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி 15 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலிஸ் விங்கிலீஸ் படத்தின் மூலம் நடிக்க வந்திருக்கிறார்.
அவருடைய இரண்டு மகள்களுமே இப்போது மீடியாவின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீதேவி - போனிகபூர் தம்பதியரின் மூத்த மகள் ஜான்வியை திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளன.
திருமணமான போனிகபூரை இரண்டாவது திருமணம் செய்தவர் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
ஜான்வி இப்பொழுதே நடனம் கற்றுக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் புஷ்டியாக இருந்த இவர் இப்போது ரெகுலராக ஜிம்முக்கு சென்று உடலை பிட்டாக வைக்க முயன்று வருகிறாராம்.
அம்மா அளவுக்கு அழகு தேவதையாக இல்லாவிட்டாலும் மொடர்ன் லுக் கொண்டு வலம் வரும் ஜான்விக்கு இப்போது 15 வயதாகிறது.
அவரைப் போலவே சிறுவயதிலேயே நடிக்க வந்தாலும் வரலாம் என்கின்றனர் திரை உலக பிரமுகர்கள். ஆனால் இது குறித்து ஸ்ரீதேவி போனிகபூர் தம்பதியர் கருத்து எதுவும் கூறவில்லை.
மகளை நடிக்க வைக்கும் எண்ணமில்லை என்று சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி கூறியது நினைவிருக்கலாம்.

சுனைனா புலம்பல்

vன்னைப் பற்றி நிறைய வதந்திகளை பரப்புகிறார்கள் என்று நடிகை சுனைனா புலம்பி வருகிறார். காதலில் விழுந்தேன். படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுனைனா.
தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை. தற்போது புதுமுகங்கள் ஜோடியாக அவர் நடித்து வருகிறார். முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வராததால் புதுமுக நடிகர்களுடன் ஜோடி சேர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுனைனா நடித்த பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தில் புதுமுகம் சபரீஷ் ஜோடியாக நடித்தார்.
இவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பெப்சி விஜயன் மகன் ஆவார். தற்போது சீனுராமசாமி இயக்கும் நீர்பறவை படத்தில் விஷ்ணு ஜோடியாக நடித்து வருகிறார்.
அடுத்து நாஞ்சில் பி. சி. அன்பழகன் இயக்கும் நதிகள் நனைவதில்லை படத்தில் இன்னொரு ஸ்டண்ட் மாஸ்டரான ஜாகுவார் தங்கத்தின் மகன் ஜெய்ஜித் ஜோடியாக நடிக்கிறார். வாய்ப்புகள் இல்லாததால்தான் சுனைனா சிறு நடிகர்களுடன் நடிக்கிறார் என்று வெளியாகியுள்ளன. இதனை சுனைனா மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. நல்ல கதையுள்ள படங்கள் எதுவானாலும் நடிப்பேன். சிறிய நடிகர்கள், பெரிய நடிகர்கள் என்றெல்லாம் பார்ப்பது இல்லை என்று கூறியுள்ளார்.

கேரளா சுசித்ரா உன்னி

கீதாலயா மூவிஸ் தயாரிப்பில் வேலு விஸ்வநாத் இயக்கியுள்ள படம், வெள்ளச்சி. நடிகர் பாண்டுவின் மகன், பிண்டு நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் கேரள வரவு சுசித்ரா உன்னி நாயகியாக நடித்துள்ளார்.
பாரதிராஜா இயக்கிய, ‘கருத்தம்மா படத்துக்கு இணையாக , ஒரு அழுத்தமான காதல் கதையில், இப்படம் உருவாகியிருப்பதாக சொல்லும் இயக்குனர் வேலு விஸ்வநாத், ‘நிஜமாக காதலிப்பவர்கள், தங்கள் காதலை மறைப்பதால் ஏற்படும் விபரீத விளைவுகளே இப்படம் என்கிறார்.
அழுத்தமான, சீரியசான கதைக்களம் என்றாலும், இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து கொமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதையை நகர்த்தியுள்ளேன், பருத்திவீரன், மைனா போன்று, இப்படத்தின் கிளைமாக்சும் பேசப்படும் வகையில் இருக்கும் என்று சொல்லும் இயக்குனர், இப்படத்தில் இன்னொரு ஹைலைட் பவதாரிணியின் அற்புதமான இசை என்கிறார்.

 

 

அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அறிமுகம்

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு பட்டத்து யானை.
பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் ஹீரோ விஷால். அர்ஜுனிடம் ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷால் என்பது நினைவிருக்கலாம்.
எத்தனையோ ஹீரோக்கள் கேட்டபோதும் தன் மகளை நடிக்க அனுமதிக்காத அர்ஜுன், ஹீரோ விஷால் என்றதும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம். அர்ஜுனிடம் நேரில் போய் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டவரே விஷால்தானாம்.
‘என்ன நினைப்பாரோ என்ற சந்தேகத்துடன்தான் அர்ஜுனிடம் போய் கேட்டேன். ஆனால் அவர் எடுத்த எடுப்பிலேயே ஒப்புக் கொண்டார். இந்த கெரக்டருக்கு ஐஸ்வர்யா தவிர பொருத்தமான ஒருவர் கிடைப்பது கஷ்டம் என்கிறார் விஷால். விஷ¤வல் கொமியுனிகேஷன்ஸ் படித்துள்ள ஐஸ்வர்யாவுக்கு நடிப்பு மீது ரொம்ப ஆர்வமாம்.

No comments:

Post a Comment