Wednesday, October 3, 2012


அகத்தியன் மகள் விஜயலட்சுமி நடித்துள்ள வனயுத்தம் படம் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது. இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்துள்ளார்.

பாரதிராஜாவை நம்பும் இனியா

சின்னச் சின்ன படங்களில் நடித்து வந்த இனியா, வாகைசூடவாவில் நடித்து அனைத்து தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அடுத்து பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் அமீருக்கு ஜோடி என்ற தகவலுடன் டாப் கீயரில் சென்றார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.
அமீர் அ.கொ.கொ.வீயிலிருந்து விலக்கப்பட அவருக்கு ஜோடியாக நடிக்க இருந்த இனியாவுக்கும் அதே நிலை. சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்த இனியா சோர்ந்து போனார். ஆனாலும் கவலைப்படவில்லை, முயற்சிகளை தொடர்ந்தார். இப்போது தமிழ், மலையாளத்தில் 7 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.
தமிழில் அடுத்த அம்மாவின் கைபேசி வர இருக்கிறது. அது தனக்கு பெரிய திருப்புமுனை தரும் என்று நம்புகிறார். நீண்ட நாள் மெளனமாக இருந்தவர் இப்போது மனம் திறந்திருக்கிறார்.
“வாகை சூடவா” திடீர்னு என்னை உயரத்துக்குக் கொண்டு போச்சு, அதே அளவுக்கு அடுத்தடுத்து இரண்டு ஏமாற்றங்கள். “வாகைசூடவா”க்கு தேசிய விருது கிடைச்சுது. எனக்கும் கிடைக்க வேண்டியதாம். கடைசி ரவுண்டுல நானும், வித்யாபாலனும் இருந்தோம். நான் சொந்தக் குரலில் பேசாததால் தேசிய விருது வித்யாபாலனுக்கு போயிடுச்சி.
தேசிய விருது மட்டும் கிடைச்சிருந்தா என்னோட இன்றைய இடமே வேற. அதனால இனி எந்தப் படத்தில் நடிச்சாலும் சொந்த குரல்லதான் டப்பிங் பேசுறதுன்னு முடிவு பண்ணினேன். அடுத்த ஏமாற்றம் அன்னக்கொடியும் கொடிவீரனும், பாரதிராஜா படம், அமீர் ஜோடின்னு மகிழ்ச்சி வானத்துல பறந்தேன். அமீரோட போட்டோ ஷ¥ட் நடந்தப்போ பாரதிராஜா சார் அப்படி பண்ணும்மா, இப்படி பண்ணும்மான்னு சொன்னாரு. சார் நீங்க சொன்னா கையை கூட வெட்டிக்குவேன்னு சொன்னேன். அந்த அளவுக்கு நம்பினேன்.
இப்பவும் அந்த நம்பிக்கையை இழக்கல. படத்துல நான் நடிக்கிறதா இருந்த மல்லாங்கிணறு மங்காத்தா என்ற கேரக்டர் ரெம்பவே பவர்புல்லானது, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து விற்கிற பொண்ணு. இதுக்கா மாட்டு வண்டி ஓட்டுறது. முரட்டு காளைங்கள எப்படி கையாள்றது, வயல்காட்டுல உழவு செய்றதுன்னு நிறைய ஹோம் ஒர்க் பண்ணினேன்.
மதுரை ஸ்லாங் கத்துக்கிட்டேன். ஆனால் எல்லாமே திடீர்னு கைவிட்டுபோனது கனவு மாதிரி இருக்கு. “இந்த கேரக்டர் வந்தா அன்னக்கொடி கேரக்டர் அடிவாங்கிடும். அதனால அந்தக் கதைய தனியா பண்றேன். அதை எப்ப பண்ணினாலும் நீதான் மங்காத்தா”ன்னு பாரதிராஜா சேர் சொன்னார். அதை இப்போதும் முழுசா நம்புறேன். என்னோட ஆசையெல்லாம் வாகைசூடவால இழந்த தேசிய விருதை எப்படியாவது வாங்கியே தீருவதுங்றதுதான்.


படு கவர்ச்சியாக விஜயலட்சுமி

அகத்தியன் மகள் அகத்தியன் மகள் விஜயலட்சுமி நடித்துள்ள வனயுத்தம் படம் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது. இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்துள்ளார். விஜயலட்சுமி நடித்துள்ள வனயுத்தம் படம் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது. இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்துள்ளார்.
அடுத்து வர இருப்பது தமிழ் படம் எடுத்த சி. எஸ். அமுதனின் ரெண்டாவது படம். இதில் விஜயலட்சுமி படு கவர்ச்சியாக நடத்திருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
“படித்துல எனக்கு நெகட்டிவ் கெரக்டர். எதையும் தூசு மாதிரி பார்க்குற பொண்ணு எவ்வளவு திமிரா நடிக்க முடியுமோ, அவ்வளவு திமிரா நடிச்சிருக்கேன்.
எத்தனை படத்துல தான் குடும்ப குத்துவிளக்காக நடிச்சிட்டிருக்க முடியும். அதான் கிளாமரா நடிச்சிருக்கேன். ஏன் நான் கிளாமரா நடிக்க கூடாதா என்ன? வன யுத்தம் பார்த்துட்டு ரெண்டாவது படம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ஷாக்காத்தான் இருக்கும்” என்கிறார்.


கடல்' வரும் வரை கார்த்திக் ராதாவுக்கு நிபந்தனை

கடல் படம் ரிலீஸாகும் வரை கெளதம், துளசியின் போட்டோக்களை வெளியிடக் கூடாது என்று மணிரத்னம் கார்த்திக் மற்றும் ராதாவுக்கு நிபந்தனை போட்டுள்ளார்.
மணிரத்னம் கார்த்திக் மகன் கெளதம் மற்றும் ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து கடல் படத்தை எடுத்து வருகிறார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. படத்தில் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. படம் துவங்கி இத்தனை நாட்களாகியும் அது குறித்து தகவல்கள் கசிந்து விடாமல் மணி ரகசியமாக வைத்துள்ளார்.
படப் பிடிப்பு நடக்கும் இடங்களில் வெளியாட்கள் வருவதை தடுக்க தனியார் பாதுகாப்பு நிறுவன ஆட்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கார்த்திக் மற்றும் ராதா தங்கள் பிள்ளைகளின் போட்டோக்களை வெளியிட்டு விளம்பரம் செய்ய விரும்பினர். ஆனால் அதற்கு மணிரத்னம் ஒத்துக் கொள்ளவில்லை.
படம் ரீலிஸாகும் வரை கெளத்தம், துளசியின் போட்டோக்களை எந்த பத்திரிகைகளிலும் வெளியிடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனால் கார்த்திக் மற்றும் ராதா தங்கள் பிள்ளைகளை பொது நிகழ்ச்சிகள் ஏன் நண்பர்கள் வீடுகளுக்கு கூட அனுப்பாமல் பொத்தி பொத்தி வைத்துள்ளனர்.
சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த துளசி தன்னை போட்டோ எடுக்கக் கூடாது என்று கடுமையாக கூறிவிட்டார்.

 

உண்மையான பிரசவ காட்சி படத்துக்கு

நடிகை சுவேதாவுக்கும், மும்பையில் பத்திரிகை ஆசிரியராக உள்ள ஸ்ரீவல்சன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தனது பிரசவ காட்சியை படமாக்க அனுமதித்துள்ளதாக சுவேதா ஏற்கனவே தெரிவித்திருந்தார். கடந்த சனிக்கிழமை மதியம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாலை 5.27 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
சுவேதா மேனன் ஏற்கனவே கூறியது போல அவரது பிரசவ காட்சியை ‘களிமண்ணு’ என்ற மலையாள திரைப்படத்திற்காக படம்பிடிக்க அனுமதிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற பிரசவத்தை இயக்குனர் பிளஸி படம் பிடித்தார். பிரசவத்தின் முடிவில் சுவேதா மேனன் தனது குழந்தைக்கு முத்தமிடு வதுடன் படப்பிடிப்பு முடிந்தது.
இந்தியாவிலேயே ஒரு நடிகை உண்மையிலேயே பிரவசத்தில் இருக்கும் காட்சி படப்பிடிப்பு நடத்துவது இதுவே முதல் முறையாகும். படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிபி ஜேக்கப் மற்றும் 2 உதவியாளர்கள், சுவேதா கணவர் ஸ்ரீவல்சன் ஆகியோர் பிரசவத்தின் போதும் காட்சி படமான போதும் உடனிருந்தனர்.
‘களிமண்ணு’ படத்தில் சுவேதா மேனன், பிஜுமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். கர்ப்பிணியாக உள்ள போது ஒரு தாய்க்கும், சேய்க்கும் இடையிலான அன்பு எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுவதாக ‘களிமண்ணு’ படத்தின் கதை அமைந்துள்ளது. இதற்காக சுவேதா மேனன் கர்ப்பம் தரித்தது முதல் பல கட்டங்களாக, படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.



 

எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் வைத்து படம் எடுத்தவர் எனது கணவர்

எம். ஜி. ஆருடன் கத்தி சண்டை போட்ட பி. எஸ். சரோஜா
‘விகடயோகி’, ‘நாட்டிய ராணி’, ‘தன அமராவதி’, ‘பாண்டித்தேவன்’ ‘ஜெனோவா’, ‘ஓர் இரவு’, ‘கூண்டுக்கிளி’, ‘புதுமைப்பித்தன்’, ‘வண்ணக்கிளி’, ‘குமுதம்’, ‘வாழப்பிறந்தவள்’, ‘அருணகிரிநாதர்’ போன்ற ஏராளமான தமிழ்ப் படங்களிலும் இதைத் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தியென்று வேற்று மொழிப் படங்களிலும் கதாநாயகியாக வலம் வந்து சாதனைகள் பல புரிந்தவர் நடிகை பி. எஸ். சரோஜா. அவர் கூறியதாவது :-
‘எங்க தாத்தாவுக்கு பூர்வீகம் திருவனந்தபுரம். எங்க அப்பா பாலசுப்பிரமணியம் அம்மா ராஜலட்சுமி இவங்களெல்லாம் சென்னையிலேயே தங்கிவிட்டதால் நானும் சிங்காரச் சென்னை வாசியானேன். எங்க அம்மா நல்லா பாட்டு பாடுவாங்க ஹார்மோனியம் பிரமாதமா வாசிப்பாங்க. தாத்தா நல்லா வயலின் வாசிப்பார்.
இவங்களையெல்லாம் பார்த்துப் பார்த்து எனக்கும் சங்கீதத்து மேலே ஆர்வம் வந்து, எங்க அம்மாவோட ஊகத்தினால் நன்றாக பாட்டு கற்றுக்கொண்டு பாட ஆரம்பித்தேன். ‘பாலநாகம்மா’ என்கிற தெலுங்குப் படத்திற்காக பின்னணிப் பாடல் அதாவது கோரஸ் பாடத்தான் முதலில் என்னோட பெற்றோர்களின் முயற்சியால் படவுலகில் காலடி எடுத்து வைத்தேன்.
அது ஜெமினி நிறுவனம் அதனால் அவங்க கோரஸ் குழுவில் மாதச் சம்பளம் 45 ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு என்னை வைத்துக்கொண்டார்கள். அப்போது ஸ்டூடியோவில் யோகமங்களம், எம். வி. ராஜம்மா, வசந்தான்னு பல பிரபலமான நடிகைகளை ஆர்வமாய் போய் வேடிக்கைப் பார்ப்பேன்.
ஒரு சமயம் யோகமங்களத்த பாத்து அவர்களோடு பேசிக்கிட்டு இருக்கும் போது நைசாக அவங்களைத் தொட்டுப் பார்த்து பூரித்துப் போனேன். இதை, அவர்களிடம் சினிமாவில் நான் கொஞ்சம் பிரபலமான நடிகையாக வந்த சமயம் சொல்லி மகிழ்ந்தேன்.
இதைக்கேட்டு அவர் ஆச்சர்யப்பட்டார். என்னை ஸ்டூடியோக்களில் அடிக்கடி பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பார்த்ததின் பயனாக ‘விகடயோகி’ என்ற படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாயகனாக குமரேசன் என்பவர் நடித்தார். அதன்பிறகு பல படங்களில் நடித்தேன்.
நான் கொஞ்சம் துணிச்சல் பேர்வழி படப்பிடிப்பில் துறுதுறுன்னு இருப்பேன். மரத்து மேலே மலை மீது, மாட்டு வண்டியின் மீது, இப்படியாக பாடல் காட்சிகளில் இயக்குநரும், நடன இயக்குநரும் என்னை வைத்து படம் பிடிப்பார்கள், அவர்கள் சொன்னவுடனே படபடவென்று மரமோ, மலையோ ஏறிவிடுவேன். படப்பிடிப்பு முடிந்ததும், துணிச்சலா யாருடைய உதவியின்றி கீழேயும் இறங்கிவிடுவேன். இதைப் பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்படுவாங்க. இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வாங்களே அதுமாதிரி.
இயக்குநர்கே. சுப்பிரமணியம் ஒலிப்பதிவு பொறியாளராக இருந்தவர் டி. ஆர். ராமண்ணா. அவரும் நானும் நன்றாகப் பழகினோம். காதலித்தோம். இரண்டு பேரின் வீட்டு சம்மதத்துடன் மிகவும் எளிமையாக மகாபலிபுரம் ரெங்கநாதர் கோவிலில் (1949) எங்களது திருமணம் நடந்தது.
திருமணமான பிறகு, நான் என் கணவரிடம், ‘ஒலிப்பதிவு பொறியாளராக இருந்தது போதும். உங்க திறமை, உழைப்பு இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். நீங்க டைரக்ஷன் துறையில் இறங்கினீங்கன்னா பிரமாதமா வருவீங்க. உங்க திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கு’ன்னு தைரியம் கொடுத்தேன்.
கிரியேஷனஸ்ன்னு மூன்று பட நிறுவனங்களை நடத்தினோம்.
(தொடரும்...)
என் கணவர் இயக்கிய படங்களில் ‘வாழ பிறந்தவள்’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘பணக்காரக் குடும்பம்’, ‘குலேபகாவலி’, ‘பாசம்’, ‘காத்தவராயன்’, ‘கூண்டுக்கிளி’, ‘தங்கச் சுரங்கம்’, ‘நான்’, ‘மூன்றெழுத்து’, ‘புதுமைப் பித்தன்’, ‘சொர்க்கம்’, ‘பறக்கும் பாவை’, ‘நாடோடி’, ‘என்னைப்போல் ஒருவன்’ இதெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள் எந்த ஒரு படமானாலும் கதைகளிலும், காட்சிகள் அமைப்பிலும் வித்தியாசமாக ஏதாவது செய்யணும்னு என்னுடைய கணவர் நினைப்பார்.
‘அன்று வந்ததும் அதே நிலா’ அப்படிங்கிற பாடல் காட்சிக்கு எம். ஜி. ஆர். பேண்ட், கோட், ஸ¥ட் போட்டு, வெஸ்டர்டன் டான்ஸ் ஆட வைக்க முயற்சித்தபோது எம். ஜி. ஆர். இதையெல்லாம் என்னோட ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு பிடிவாதம் பிடித்தார். அதற்கு என் கணவர், விடாப்பிடியாக எம். ஜி. ஆரைத் தன்னுடைய கற்பனைப்படியே உடைகள் அணிவித்து, நடனம் ஆட வைத்து படம் பிடித்தார்.
பாட்டும், அந்தக் காட்சியும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதற்குப் பிறகு எல்லா இயக்குநர்களும் தங்கள் படங்களில் எம். ஜி. ஆரை வைத்து ஒரு வெஸ்டர்ன் நடனப் பாடல் அமையும்படி பார்த்துக்கொள்வார்கள்.
‘நீங்க ஆரம்பிச்சு வைச்சிங்க எல்லா இயக்குநர்களும் அதையே பிடிச்சுக்கிட்டாங்க....’ன்னு எம். ஜி. ஆர். என்னிடமும் என் கணவரிடமும் சொல்லி மகிழ்ந்தார். அப்போதும் சரி, இப்போதும் சரி என் கணவரை நான்தான் இயக்குநராக்கினேன் என்ற பெருமையும் சந்தோஷமும் என் மனதிற்குள் நிறைந்திருக்கிறது.
எங்களுடைய தயாரிப்பில் வரவு செலவு கணக்கு பணப்பட்டுவாடா இதையெல்லாம் நான்தான் கவனித்துக் கொண்டேன். உழைத்தவர்களின் வியர்வை நிலத்திலே விழுவதற்குள் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிடுவேன்.
எங்களுடைய நிறுவனத்தின் படங்களில் நடித்த எம். ஜி. ஆர்., சிவாஜி, &ஜயலலிதா, சரோஜா தேவி, ராமச்சந்திரன் இப்படி எல்லோருக்கும் அவர்களுடைய வீட்டிற்கே போய் பணத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டு வருவேன். அவர்கள் எல்லோரும், இதைப் பார்த்து ஆச்சர்யமும், சந்தோஷமும் அடைவார்கள்.
தோட்டக் கலையில் எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு. தாம்பரத்தில் 18 ஏக்கரில் பழங்கள், காய்கறிகள், மலர்கள் என்று எல்லா வகையானவற்றையும் பயிரிட்டு தனி கவனம் செலுத்துவேன். அடையாரில் இருந்தபோதும், தி. நகரில் வசித்த போதும் வீட்டிலேயே காய்கறி, பழங்கள் பயிரிட்டு வீட்டுக்குத் தேவையானவைகளைப் பயன்படுத்தி வந்தேன். 1957 களில் மலர் கண்காட்சி போட்டிகளில் கலந்துகொண்டு விருது வென்றிருக்கிறேன்.
என்னுடைய தோட்டக்கலை பராமரிப்பில், நிர்வாகத் திறமை, நடிப்புத் திறமை, கதைகளைக் கேட்டு தேர்வு செய்து நடிப்பது போன்றவற்றையெல்லாம் என்னுடைய கணவரின் சகோதரி டி. ஆர். ராஜகுமாரி உடனுக்குடன் கூப்பிட்டு பாராட்டி மகிழ்வார்.
அருணகிரிநாதர் படத்தில் டி. எம். எஸ்.ஸின் அக்காவாக நடித்த காட்சிகளில் ‘தம்பி திருந்துவதற்காக ஒரு காட்சியில் நான் பேசி, நடித்ததைப் பார்த்து படப்பிடிப்பில் இருந்தவர்கள் எல்லோரும் அழுதே விட்டார்கள். படத்தைப் பார்த்துவிட்டு டி. ஆர். ராஜகுமாரியும் அழுது, புலம்பி என் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். இதை என் வாழ்னாளில் என்றுமே மறக்க முடியாதது.
‘புதுமைப்பித்தன்’ படத்தில் என்னோடு எம். ஜி. ஆர். கத்தி சண்டை போடும்படியா காட்சி ஒன்றை என் கணவர் ஏற்பாடு செய்துவிட்டார். முதலில் எம். ஜி. ஆர். தயங்கினார். ‘ஒரு பெண்ணோடு கத்தி சண்டை போட வேண்டாம்...’ என்று கூறி, மறுத்தார்.
இது காட்சிக்குத் தேவை, நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இதில் இடது கையால் கத்தியைப் பிடித்து அவரோடு சண்டை போடுங்கள் பிரமாதமாக இருக்கும். உங்கள் ஸ்டைலில் இருந்து இது வித்தியாசப்படும் என்று சண்டைக் காட்சிக்கு விளக்கம் கூறி என்னுடைய கணவர், எம். ஜி. ஆரை சம்மதிக்க வைத்தார்.
நானும் சண்டைப் பயிற்சி மாஸ்டரிடம் நன்றாக பயிற்சி எடுத்துக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்தேன். உண்மையிலேயே அந்தக் காட்சி எனக்கும் எம். ஜி. ஆருக்கும் நல்ல பெயரை தேடித்தந்தது.
‘கூண்டுக்கிளி’ படத்தில் எம். ஜி. ஆர்., சிவாஜி இருவரையும் வைத்து நாங்கள் படம் எடுக்கும்போது அதில் எல்லோரும் உற்சாகமாக நடித்தார்கள். வித்தியாசத்தை விரும்பும் என் கணவர் சிவாஜியை எம். ஜி. ஆருக்கு வில்லனாக நடிக்க வைத்தார். என் கணவரிடம் அவர்கள் அண்ணன் தம்பி போலத்தான் பழகி வந்தார்கள். எதைச் சொன்னாலும் அதைச் செய்து கொடுத்தார்கள்.
இந்தப் படத்தில் இரு திலகங்களையும் சேர்த்து, நடிக்க வைத்த பெருமை என்னுடைய கணவரையே சாரும். சினிமா வரலாற்றில் எங்கள் தயாரிப்பில் ‘கூண்டுக்கிளி’ நிலையானதொரு இடத்தைப் பிடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்!
எங்களுக்கு கலாராணி, கணேஷ், சாந்தின்னு மூன்று செல்வங்கள். பேரன், பேத்திகள் ஆறு பேர். 1997 ல் என் கணவர் இயற்கை எய்தினார். அதற்கு முன்பே நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். முக்கியமான திரைப்பட விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் யாராவது கலந்துகொள்ளும்படி வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே சென்று வருகிறேன். எனக்கு தெய்வ பக்தி உண்டு. அடிக்கடி உள்ளூர், வெளியூர்களில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்று கடவுளை தரிசனம் செய்து வருகிறேன்’ என்று இனிக்க இனிக்க கூறினார்.

மணப்பாற மாடு கட்டி மாயாவரம்...

மணப்பாற மாடு கட்டி
மாயாவரம் ஏரு பூட்டி
மணப்பாற மாடு கட்டி மாயாவாரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு சின்னக்கண்ணு
ஆத்தூரு கிச்சிலி சம்பா
ஆத்தூரு கிச்சிலி சம்பா பார்த்து வாங்கி விதை விதைச்சி
ஆத்தூரு கிச்சலி சம்பா
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு சின்னக்கண்ணு
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு சின்னக்கண்ணு
கருதை நல்ல வியளவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
கருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
அறுத்து போடு களத்த மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு சின்னக்கண்ணு
(என்றா பல்லக்காட்டுற... அட தண்ணிய சேந்து...)
பொதிய ஏத்தி வண்டியில் பொள்ளாச்சி
சந்தையிலே ஆ... ஆ.... ஆ.... ஆ.....
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
விருதுனகா வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்த போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்த போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு (மணப்பாற)


 

எம்.ஜP.ஆரின் தீவிர ரசிகரான சத்யராஜ் எம்.ஜP.ஆரை சந்தித்தது எப்படி?

நடிகர் சத்யராஜ், மக்கள் திலகத்தின் அவர்களுடைய ரசிகர் ஆரம்ப காலத்தில் இருந்தே இவர் ஒரு தீவிர ரசிகராக இருந்தவர். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். மக்கள் திலகம் எம். ஜி.ஆரை நேரில் பார்த்து பேச பல வருடங்கள் முயற்சித்துள்ளார். மக்கள் திலகம் நடித்த படங்களை பார்க்கத் தவறுவதில்லை.
இப்படி இருந்த இவர் சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று இவரும் ஒரு பிரபல நடிகராகி விட்டார். பிறகு என்ன மக்கள் திலகம் எம். ஜி. ஆரை ஈசியாக பார்த்து விடலாமே என்று நினைக்கும்போது, அவர் தமிழக முதலமைச்சராகிவிட்டார். இருந்தாலும் சத்யராஜ் தன்னுடைய முயற்சியை விடவில்லை.
தன்னுடைய நண்பர்களிடம் இதற்கு வழியை கேட்டுக்கொண்டே இருந்தார். பல வருடங்கள் முயற்சி செய்துகொண்டு இருந்த இவருக்கு ஒரு வழி கிடைத்தது. அதாவது சத்யராஜுடைய தங்கைகளுக்கு திருமண ஏற்பாடு செய்து பத்திரிகை அடித்து கோயம்புத்தூரில் உறவினர்களுக்கு எல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையில் சினிமா துறையில் முக்கியஸ்தர்களுக்கு கொடுக்க பத்திரிகை வந்து விட்டது.
இது 1987 மே மாதம் கடைசியில் தன் தங்கையின் திருமண பத்திரிகையை முதல்வரிடம் நேரில் தானும் தன் மனைவியும் ராமாபுரம் எம். ஜி. ஆர். தோட்டத்திற்கு சென்று கொடுத்து அவரிடம் பேசி வணங்கி வாழ்த்தும் பெற்று வரணும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
அதற்கான பலன் இரண்டே நாளில் கிடைத்துவிட்டது. ஒரு நாள் காலை 9.00 மணிக்கெல்லாம் எம். ஜி. ஆர். தோட்டத்திற்கு திருமண பத்திரிகையுடன் தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு போனார். தோட்டத்திற்குள் போகத் தடை ஒன்றும் இல்லை. வீட்டு வராண்டாவில் அரசாங்க அதிகாரி ஒருவரும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இருப்பார்கள்.
அவர்கள் சத்யராஜ் மனைவியுடன் வந்து இருப்பதை மேலே உள்ள இன்டர்காம் வழியாக மக்கள் திலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு மக்கள் திலகம் ஜானகி அம்மாளுடன் 15 நிமிடத்தில் கீழே வந்து விட்டார். இந்த இருவரையும் பார்த்த அந்த இருவரும் நாம் யாரை பார்க்கிறோம் என்பது போல், பிரமித்து நிற்கிறார்கள்.
முதல்வரும், ஜானகி அம்மையாரும் அவர்களைப் பார்த்து சிரித்த முகத்துடன் அமர சொல்கிறார். சத்யராஜுக்கு ஆனந்தத்தில் பேச்சு வரவில்லை. பிறகு தன் தங்கைகளுடைய திருமண பத்திரிகையை கொடுக்கிறார். அதை வாங்கி உடனே படிக்கிறார். முதல்வர் பத்திரிகையில் எந்த பிரமுகர் பெயரும் இல்லை மிக எளிமையான குடும்பப் பத்திரிகையாக இருந்தது. சற்று நேரம் மக்கள் திலகம் எதையோ யோசித்துக்கொண்டு இருந்தார்.
சத்யராஜ் இப்போ ஒரு பெரிய நடிகர் மக்களுக்கெல்லாம் மிகவும் அறிந்தவர் நல்லநடிகர் இவர். எந்த வித விளம்பரமும் இல்லாமல் தன்னுடைய தங்கைகளுடைய திருமணத்தை நடத்துகிறாரே இந்தத் திருமணத்திற்கு நாம் எப்படியும் போகவேண்டும் என்ற யோசனைதான் அது.
பிறகு, சத்யராஜை பார்த்து நானும் ஜானுவும் இந்த திருமணத்திற்கு வருகிறோம் என்றார். உடனே சத்யராஜ், “அண்ணே! நீங்கள் இந்த திருமணத்திற்கு வரவேண்டாம். இந்த பத்திரிகையில் உங்கள் பெயரை போடவில்லை. மேலும் காலை 4 மணிக்கு திருமணம் தயவு செய்து வரவேண்டாம்.
உங்களுடைய வாழ்த்துச் செய்தி மட்டும் கிடைத்தால் போதும், அண்ணே உங்களை எப்படியாவது நேரில் பார்க்கனும் உங்களிடம் இரண்டு வார்த்தையாவது பேசணும் உங்களிடம் ஆசிர்வாதம் பெறணும் என்ற ஆசையோடு தான் வந்தேன். நீங்கள் இந்த நாட்டின் முதல் அமைச்சர் நீங்கள் தயவு செய்து வரவேண்டாம்.
உங்களுடைய வாழ்த்து செய்தியே போதும் நீங்கள், நேரில் வந்த மாதிரிதான் என்னை மன்னிக்கணும் என்று சொல்லி முடித்தவுடனே மக்கள் திலகம் சத்யராஜுடைய தோள் பட்டையை தட்டிக்கொண்டே நான் வருவேன் என்று சொல்லி கொண்டே அவர்களை வழி அனுப்பி வைத்தார். பிறகு, அந்தப் பத்திரிகையை தன்னுடைய அரசு உதவியாளரிடம் கொடுத்து நாங்கள் இந்த திருமணத்திற்கு போகனும் மறக்காமல் ஞாபகப்படுத்துங்கள் முதல் நாளே போகனும் அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடு செய்யுங்கள்.
இந்த விசயம் ரகசியமாக இருக்கட்டும் என்று சொல்லிய மக்கள் திலகம் பிறகு, காண வந்து இருந்த மற்றவர்களை எல்லாம் அழைத்துப் பேசினார். சத்யராஜுடைய தங்கைகள் திருமண விழாவிற்கு முதல் நாளே தன் மனைவி ஜானகி அம்மாளுடன கோயம்புத்தூர் புறப்படுகிறார். கூடபேச்சு துணைக்கு அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் முத்துசாமியையும் அழைத்துச் செல்கிறார்.
இந்த விசயத்தை உடனடியாக முதல்வருடைய செயலாளர் கோவை மாவட்ட கலெட்டருக்கு தகவல் கொடுக்கிறார். இந்தத் தகவலை கேட்ட கலெக்டர் உடனே சத்யராஜ் வீட்டுக்குச் சென்று முதல்வர் கோவைக்கு புறப்பட்டுவிட்டார்.
உடனே, விமான நிலையத்துக்கு போகணும் நீங்களும் விமான நிலையத்துக்கு வருவது தான் நல்லது என்று சற்று கோபமாக பேசிவிட்டு, கலெக்டர் முதல் அமைச்சரை வரவேற்க விமான நிலையத்துக்கு சென்றுவிட்டார். கலெக்டர் கோபமாக ஏன் சத்யராஜிடம் பேசினார். முதல்வர் உங்கள் குடும்ப திருமணத்திற்கு வருகிறார் என்பதை ஏன் எனக்கு முன்னதாக தெரிவிக்கவில்லை என்றதற்காகத்தான்.
இதை அறிந்த சத்யராஜும் உடனே விமான நிலையத்துக்கு கிளம்பி சென்று எம். ஜி.ஆர் தன் மனைவியோடு விமானத்திலிருந்து இறங்கும் காட்சியை சத்யராஜும் மற்றவர்களும் பார்க்கிறார்கள்.
மக்கள் திலகம் மைதானத்திற்கு வந்தவுடனே, சத்யராஜ் ஓடோடி வந்து ராமருடைய பாதங்கள் தொட்டதுபோல் இந்த ராமச்சந்திரனுடைய பாதங்களை தொட்டு வணங்கி வரவேற்றார். பிறகு, விமான நிலையத்தில் இருந்து முதல்வர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ள விடுதிக்கு செல்ல காரில் ஏறும்போது அருகில் நின்று கொண்டிருந்த சத்யராஜை தன் காரிலே ஏற்றிக்கொண்டு உடன் வந்த அமைச்சர் முத்துசாமியையும் அதே காரில் ஏற்றிச் செல்கிறார்கள்.
அடுத்த நாள் காலையில் நடக்கும் திருமணத்தைப் பற்றி பேசிக்கொண்டே செல்கிறார்கள். இதன்படி அடுத்த நாள் காலை 4 மணிக்கு நடைபெறும் திருமணத்திற்கு முதல்வர் தன் துணைவியாருடன் மற்றும் அமைச்சர் முத்துசாமியுடன் செல்கிறார். முதல்வர் வந்ததை அறிந்து எல்லோரும் சென்று வரவேற்கிறார்கள்.
தமிழக முதல்வரான மக்கள் திலகம் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீர் என்று வந்து இருக்கிறாரே என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்த விசயம் அப்போதைக்கு தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. திருமண மேடையில் மண மக்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகளை வழங்கி செல்கிறார். இந்த சம்பவத்தை நினைத்து சத்யராஜும் அவரது குடும்பமும் ‘தெய்வமே’ நேரில் வந்து வாழ்த்தி சென்றது போல, நினைத்து ஆனந்தம் அடைந்தனர்.
மக்கள் திலகம் திருமண மண்டபத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருக்கிறார் மேடையில் ஐயர்கள் பூஜை அதாவது மாங்கல்ய பூஜை நடக்கும். இதற்கிடையில் இந்தத் திருமணத்திற்கு முதல் அமைச்சர் எம். ஜி. ஆர். வந்து இருக்கிறார். மேடைக்கு அருகில் அமர்ந்து இருக்கிறார் என்ற செய்தியை திருமணத்திற்கு வருகிறவர்கள் அறிந்ததும், உடனே முதல்வர் இருந்த இடத்திற்கு வந்து, அவரைப் பார்த்து வணங்கிச் செல்பவர்களும், அவருக்கு அருகிலேயே அமருபவர்களும் உண்டு.
இப்படி இருக்கும் நேரத்தில் சிவாஜி, சிவகுமார் ஆகியோர் மண்டபத்திற்குள் நுழைந்தார்கள். மக்கள் திலகம் திருமணத்திற்கு வந்து அமர்ந்திருக்கிறார் என்பதை அறிந்தவுடன் மக்கள் திலகம் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு நடிகர் திலகமும், சிவகுமாரும் வந்து நடிகர் திலகம் மக்கள் திலகத்தை கட்டிப் பிடித்துக் கன்னத்தைக் கிள்ளிக் கொண்ட காட்சியை கண்டவர்கள் மனமகிழ்ந்தார்கள். சிவாஜிக்கும், சிவகுமாருக்கும் முதல்வர் அருகிலேயே கதிரைகள் போடப்பட்டன.
மக்கள் திலகம், ஜானகி அம்மாள், சிவாஜி, சிவகுமார் இவர்கள் மேடைக்கு அருகில் வரிசையாக அமர்ந்து இருக்கும் அழகான காட்சியை பார்த்து பார்த்து ரசித்து அளவற்ற அளவிற்கு ஆனந்தப்பட்டார்கள். சத்யராஜும் அவரது குடும்பமும் இதற்கு இடையில், திருமண மேடைக்கு அருகில் அமர்ந்து வாசித்துக் கொண்டு இருந்த நாதஸ்வரத்தையும், மேளத்தையும் கவனிக்கத் தவறவில்லை. மக்கள் திலகத்து மேளக் கச்சேரி என்றால் மிகவும் பிடிக்கும்.
அதற்கு ஏற்ற மாதிரி அவர்களும் நல்ல நயத்துடன் வாசித்தார்கள். காலை 5 1/2 மணிக்கெல்லாமத் திருமணம் முடிந்தது. மக்கள் திலகமும் ஜானகி அம்மாவும் இவர்கள் தங்கி இருக்கும் அரசு மாளிகைக்குச் சென்றார்கள். அன்று கோவையிலேயே தங்கி இருந்து அடுத்த நாள் நடக்கும் சத்யராஜுடைய மற்றொரு தங்கையின் திருமணத்தில் கலந்துகொண்டு விட்டு சென்னைக்கு புறப்படும்போது, சத்யராஜும் விமான நிலையத்துக்கு வழியனுப்ப வந்தார்.
வந்தவர் விமானம் நிற்கும் இடம் வரை வந்து, முதல்வர் படிக்கட்டில் ஏறி, விமானத்தில் நுழையும் வரை படிக்கட்டு அருகிலேயே நின்று கொண்டிருந்த சத்யராஜைப் பார்த்து கை அசைத்து வாழ்த்தினார் மக்கள் திலகம் இதில் ஒரு முக்கிய விஷயம் விமானப் பயணிகளைத் தவிர வேறு பயாரும் விமானம் வரை போகக் கூடாது இது விமான நிலைய சட்டம். இதை மீறி சத்யராஜ் விமானம் வரை அருகே சென்று மக்கள் திலகத்தை வழி அனுப்பியது மக்கள் திலகம் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மிக மிக ஆச்சர்யமாக இருந்தது.
இதில் மற்றொரு விஷயம் சத்யராஜையோ அவரது குடும்பத்தையோ முன் அறிமுகம் இல்லாமல் அந்தக் குடும்பத் திருமண விழாவிற்கு கோயம்புத்தூருக்குப் போய், தன் மனைவியுடன் சென்று, இரண்டு நாள் அங்கேயே தங்கி, வேறு எந்தவித நிகழ்ச்சிகளையும் வைத்துக்கொள்ளாமல், அந்தத் திருமணத்திற்கு சென்று வந்தது. அதுவும், தமிழ்நாட்டு முதல் அமைச்சர் எப்படி என்று இந்த விஷயத்தை ஆச்சரியமாக சினிமா துறை, அரசியல் துறையினர்கள் பரவலாக பேசினார்கள்.
சத்யராஜும் ஒரு நடிகர் குறுகிய காலத்தில் பிரபலம் ஆனவர். மக்கள் திலகம் தன்னுடைய உயர்வுக்கு அதிக செல்வாக்கை கொடுத்தது சினிமாவா? அரசியலா? என்பதை அடிக்கடி அளந்து பார்க்கக்கூடியவர்.ஆனாலும் தனக்கு சினிமா தான் முதலில் அப்புறம் தான் அரசியல் என்று மக்கள் திலகம் நினைப்பவர்.
மக்கள் திலகத்தை புகழ் ஏணியில் ஏற்றிவிட்டது சினிமா தான் இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம், மக்கள் திலகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது சினிமாதான். சத்யராஜ் தன்னுடைய பரம ரசிகர் இப்போதுஅந்த மாமனிதருடைய பக்தராக உள்ளார். அவருடைய இல்லத்தில் எம். ஜி. ஆருடைய புகைப்படத்தை வைத்து வணங்கி வருகிறார்
பிறகு? ஒரு நாள் சத்யராஜ் தன் மனைவியுடன் ராமாபுரம் எம். ஜி. ஆர். தோட்டத்திற்கு முதல்வரை சந்திக்க நேரத்தை தெரிந்துகொண்டு காலை 8.30 மணிக்கு செல்கிறார்.
தோட்டத்திற்கு சென்றவுடன் சத்யராஜும் அவரது மனைவியும் வந்திருக்கும் தகவல் முதல்வருக்கு தெரிவிக்கப்படுகிறது. அதன்படி முதல்வரும் துணைவியார் ஜானகி அம்மையாரும் கீழே இறங்கி வந்து இவர்களை பார்த்து குடும்ப நலனை விசாரிக்கிறார்.
அந்தநேரம் உடனே சத்யராஜ் தனது தங்கையின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தி சென்ற, உங்களுக்கு எனது குடும்பத்தினர் சார்பில் நானும் என் மனைவியும் நன்றி சொல்ல வந்து இருக்கிறோம். எங்களை வாழ்த்தி அனுப்புங்கள் என்று சொன்னபோது அவர்களை வாழ்த்தி விட்டு சத்யராஜை பார்த்து தம்பி உனக்கு வேற ஏதாவது என்னால் உதவி வேண்டும் என்றால் கேள்! எதுவாக இருந்தாலும் செய்கிறேன் என்று அன்புடன் சிரித்து கொண்டே கேட்கிறார். உடனே, சத்யராஜ் அண்ணே நான் இப்போ நிறைந்த வசதியுடன் இருக்கிறேன்.
எனக்கு உங்களுடைய உடற் பயிற்சி பொருள்களில்இருந்து ஏதாவது ஒன்றை தாருங்கள். அதை நான் உங்களுடைய ஞாபகமாக தினமும் உடற் பயிற்சி எடுத்து செய்றேன் என்றார். உடனே மக்கள் திலகம் சற்று யோசித்து அருகில் நின்றுகொண்டிருந்த மாணிகத்திடம் மேலே உள்ள என்னுடைய கர்லா கட்டையில் ஒன்றை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னார்.
உடனே கர்லா கட்டை வந்தது மக்கள் திலகம் அந்த கர்லாகட்டையை தன் கைபட கொடுத்தார். அத்துடன் தினமும் காலையில் உடற் பயிற்சி செய்ய வேண்டும் உடல் நல்லா இருந்தால் தான் உழைக்க முடியும். உழைப்பால் உயர்வதே முக்கியம் என்று அறிவுரை சொல்லி வாழ்த்தி அனுப்பினார். இதை மறக்காமல் சத்யராஜ் பின்பற்றி வருகிறார்.







No comments:

Post a Comment