Thursday, June 14, 2012

 

ஒப்பாரி பாடலை காதலிக்கு பாடலாக்கிய கவிஞர் கண்ணதாசன்

மனோரமாவை அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே

1958ல் வந்த படம் மாலையிட்ட மங்கை அப்படத்தில் இடம்பெற்றதுதான் ‘செந்தமிழ் தேன் மொழியாள்’ பாடல்.
இப்படத்தின் நாயகர் டி. ஆர். மகாலிங்கம். அக்காலத்தில் கதாநாயகனாக நடிப்பவரே பாடலைப் பாடவும் வேண்டும். அதாவது பாடியபடியே நடிக்க வேண்டும்.
பாடுவதில் டி. ஆர். மகாலிங்கம் ஒரு தனி முத்திரை பதித்தவர். அக்காலத்தில் மிக ராகமாக இழுத்து இழுத்துத்தான் பாடுவார்கள். அதை தகர்ந்தெறிந்து எளிமையான சொற்களை வைத்து மிக இனிமையாகப் பாடி எல்லோர் மனதில் அப்போது சிம்மாசனமிட்டு அமர்ந்த பாடல்தான் இந்த ‘செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்’ பாடல்.
இப்படத்தை இயக்கியவர் ஜீ. ஆர். நாதன். இப்பாடலுக்கு இசைச்சக்கரவர்த்திகளான எம். எஸ். விஸ்வநாதன், பி. ராமமுர்த்தி ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துக் கலக்கினர். இப்பாடல் அன்று மட்டுமல்ல இன்றும் ஏன் என்றென்றும் மிகச் சிறந்த பாடலாக ரசித்துக் கேட்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்.
இப்பாடலை எழுதியது யார் தெரியுமா? இப்படத்தின் கதை வசனம், பாடல், தயாரிப்பு எல்லாம் நமது கவியரசு கண்ணதாசன்தான். மற்றொரு தகவல் என்னவென்றால் ஆச்சி மனோரமா இப்படத்தில்தான் அறிமுகமானார். அவரும் கண்ணதாசனின் கண்டுபிடிப்புதான்.
என்ன ஆச்சர்யமாக இருக்கா...! உண்மைதான்.. எல்லோரும் நம்மை மெட்டுக்கே பாட்டு எழுத சொல்கிறார்களே, நாமே படம் எடுத்தால் நமக்கு பிடித்த பாடல்களை எழுதிக் கொடுத்து இசையமைக்க சொல்லலாமே என்பதற்காக கண்ணதாசன் தயாரித்த படம் இப்படம் என்றும் சொல்வார்கள்.
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே
நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே என்பது தமிழ் நாட்டில் கண்ணதாசனுக்கு முன்னே நீண்ட நெடுங்காலமாக வழங்கி வந்த ஒப்பாரிப் பாடலாகும். கவியரசு அதைத் தன் பாட்டில் இணைத்தது எப்படி?
இதோ அதற்கான பதில்
இப்பாடலிற்கான பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம், ‘தென்றல்’ பத்திரிகை அலுவலகத்தில், கண்ணதாசன் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது எம். எஸ். விஸ்வநாதனிடம் இருந்து போன் வந்தது. ‘அண்ணே பாட்டு நல்லா வந்திருக்கு இருந்தும், ஏதோ ஒரு குறை தெரியுது... மன நிறைவா இல்லை நேரில வாங்க பாட்டைக் கேட்டுட்டு என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்” என்றார். உடனே புறப்பட்டார் கவிஞர். பாடலைக் கேட்டார். பிரமாதமாகப் பாடியிருந்தார் டி. ஆர். மகாலிங்கம் இருந்தாலும். ஒரு ‘பெப்’ இல்லை என்பதை உணர்ந்து கொண்டார் கவிஞர்.
‘விசு கொஞ்சம் பொறு’ என்றபடி வெளியே வந்து மரத்தடியில் இங்குமங்கும் நடத்தபடி இருந்தார். அப்போது அவர் காலில் ஒரு நெரிஞ்சி முள் குத்திவிட்டது. குனிந்து முள்ளைப் பிடுங்கி எறிந்துவிட்டு நிமிர்ந்தவர். ‘விசு... விசு’ என கூவியபடி ஒலிப்பதிவு அறைக்கு வந்து எழுதச் சொன்னார். ‘சில்லென்று பூத்த சிறு நெருங்சிக் காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே! நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந்தாள், நிற்குமோ, ஆவி நிலைக்குமோ நெஞ்சம்! மணம் பெறுமோ வாழ்வே” என்று விருத்தம் பாடி ‘அவள் செந்தமிழ்த் தேன் மொழியாள்’ என பாடலைத் துவங்கச் சொல்” என்றார்.
ஒப்பாரிப் பாடலை... அழகான காதலிக்கு பாடலாக்கியது கவிஞரின் புலமைக்கு சான்றல்லவா...!

 

சரோஜாதேவியின் தயக்கத்தை போக்கிய சிவாஜியின் யுக்தி


எழுத்தாளர்கள் லட்சுமி (டாக்டர் திரிபுரசுந்தரி) எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ‘இருவர் உள்ளம்’ (1963) ‘மனோகராவுக்குப் பிறகு கருணாநிதி சிவாஜிகணேசன், டைரக்டர் எல். வி. பிரசாத் ஆகிய மூவரும் இப்படத்தில் ஒன்று சேர்ந்தனர்.
கலைஞர் கரணாநிதி எபதிய வசனங்களை, முதல் தடவையாக சரோஜாதேவி பேசி நடித்தார். ‘என்கு என்ன அழகில்லையா, படிப்பிள்ளையா, பணம் இல்லையா? என்னை ஏன் திருமணம் செய்ய சம்மதிக்க மறுக்கிறாய்?’ என்ற சிவாஜி கேட்கும் கேள்விக்கு ‘படிப்பில் நீமேதையாக இருக்கலாம். பணத்தில் நீ குபேரனாக இருக்கலாம்.
அழகில் நீ மன்மதனாக இருக்கலாம். ஆனால் என்னை மணக்கும் கண்ணிம் உன்னிடம் இல்லை என்று சரோஜாதேவி பதில் வசனம் பேசவேண்டும். ஆனால் ஒரே தடவையில் இந்த வசனத்தைப் பேச முடியவில்லை.
உடனே, அவர் தயக்கத்தைப் போக்க சிவாஜி ஒரு யுக்தி செய்தார். சுற்றிலும் கூடியிருந்தவர்களை விலகிப் போகச் சொன்னார்.
‘தைரியமாகப் பேசு’ என்று சரோஜாதேவியை உற்சாகப்படுத்தினார். அதன்பின், ஒரே ‘டேக்’கில் அந்தக் காட்சி ‘ஓகே’ ஆயிற்று.

 

 

 

ஏ.எம்.ராஜhவை நீங்கா புகழ்பெறச் செய்தவை துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே


ஏமல மன்மதராஜு ராஜாவின் சுருக்கமான பெயர் ஏ. எம். ராஜா (ஜுலை 1, 1929 - ஏப்ரல் 7, 1989 - தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950 களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபல பாடகி ஜிக்கி.
ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார்.
மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப் பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லூரியில் பிஏ (இளங்கலை) முடித்தார்.
திரையிசைப் பாடகராக
இசையார்வம் கொண்ட ஏ. எம். ராஜா கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார். கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கி பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச். எம். வி. நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வு செய்தது.
ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப் பகுதிகளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் அவருக்கு உதவினார்.
இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்றைக் கேட்க நேர்ந்த ஜெமினி எஸ். எஸ். வாசன் கவரப்பட்டு தன்னுடைய பல மொழிப் படமான சம்சாரம் திரைப்படத்தில் தலைப்புப் பாடலைப் பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.
1951 இல் கே. வி. மகாதேவன் ஏ. எம். ராஜாவை அவரது குமாரி என்ற படத்தில் அழியாத காதல் வாழ்வில்... என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை கர்நாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப் பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார்.
வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக்கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான மொகம்மத் ராபி மற்றும் தலத் மெக்மூத் ஆகியோர் பாடும் முறைமைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடாது தனக்கே உரித்தான பாணியை உருவாக்கியவர் ஏ. எம். ராஜா.
துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ. எம். ராஜாவை தமிழில் நீங்காப் புகழ்பெறச் செய்தன. சிற்பி செதுக்காத பொற்சிலையே, தென்றல் உறங்கிய போதும் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். மேலை இசையின் சாயல் கொண்ட துள்ளலான ‘ஆடாத மனமும் ஆடுதே’, ‘பாட்டுப் பாடவா பார்த்துப் பேச வா’, ‘ஓகோ எந்தன் பேபி’ போன்ற பாடல்களிலும் கூட ஒரு இனிமையான மென்மையைச்
சேர்ப்பது அவரது குரல், ‘மைனர் லைஃப் ரொம்ப ஜாலி’ போன்ற பாடல்களையும் அவர் தன் பாணியில் பாடியுள்ளார். முறையான கர்நாடக இசைப் பயிற்சி உள்ளவரென்பதனால் ஏ. எம். ராஜா மரபான முறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்களைக் கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித் தெளிவுடன் இயல்பாக பாடியுள்ளார்.
மீண்ட சொர்க்கம் படத்தில் வரும் ‘கலையே என் வாழ்க்கையின் வாகீச்வரி’ ராகத்தில் அமைந்த பாடல் தேன்நிலவு படத்தில் வரும் காலையும் நீயே ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தது.
அதே இயல்பு மாறா துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட வாடிக்கை மறந்ததும் ஏனோ, கண்மூடும் வேளையிலும் போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட நிலவும் மலரும் இதய வானின் உதய நிலவே கண்ணாலே நான் கண்ட கணமே போன்றவை அவரது குரலின் அழகை முழுக்க காட்டி நம் இழந்த வாழ்க்கையின் இனிய துயரங்களை தொட்டு மீட்டுபவை.
தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ. எம். ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. மாசிலா உண்மைக்காதலே (அலிபாபாவும் 40 திருடர்களும்), கண்களின் வார்த்தைகள் புரியாதோ (களத்தூர் கண்ணம்மா) போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.
ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ. எம். ராஜா எம். ஜி. ஆர்., சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினி கணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது.
பி. பி. ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகி, ஜெமினி கணேசனுக்காகப் பாடத்துவங்கும் வரையிலும் ஜெமினியின் பாடற் குரலாகவே விளங்கியவர் ஏ. எம். ராஜா. ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய படங்களில் கல்யாணப் பரிசு, மிஸ்ஸியம்மா, மனம் போல மாங்கல்யம், பூலோக ரம்பை, ஆடிப்பெருக்கு ஆகியவை இறவா வரம் பெற்றவை.
நடிகராக
ஏ. எம். ராஜா சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இரு மொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் இசைக் கலைஞனைப் பற்றிய படமான ‘பக்க இந்தி அம்மாயி’ படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார்.
அந்தப் படம் இந்தியில் பாடோசான் என்ற பேரில் மறுவாக்கம் செய்யப்பட்ட போது, அதில் கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப் படம் சிலகாலம் கழித்து மீண்டும் ‘பக்க இந்தி அம்மாயி’ என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்ட போது, ஏ. எம். ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் நடித்தார்.
1955ல் மகேஸ்வரி என்ற படத்தின் அழகு நிலவின் பாவனையிலே என்ற பாடலின் ஒத்திகையின் போது ஏ. எம். ராஜா பாடகி ஜிக்கியிடம் தன் காதலை தெரிவித்தார். அது திருமணத்தில் முடிந்தது.
ஏ. எம். ராஜாவும் ஜிக்கியும்தான் பம்பாய்க்குச் சென்று இந்திப் படத்துக்காக பாடிய முதல் தென்னிந்தியப் பாடகர்கள். சங்கர் ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூரின் ‘ன்’ படத்துக்காக இதேபடத்தின் தெலுங்கு, தமிழ் வடிவங்களுக்கான பாடல்களையும் அவர்கள் இருவரும்தான் பாடினர். பகுத் தின் ஹயே போன்ற படங்களுக்கும் அவர்கள் பாடினர். ராஜாவின் பாடும் முறையில் இருந்த ஒரு பொது இந்திய இயல்புக்கு இது சான்றாகும். கன்னடத்தில் அதி மதுர அனுராகா போன்ற புகழ்பெற்ற பாடல்களை ஏ. எம். ராஜா பாடினார். சிங்களப் படத்தில் கூட அவர் பாடியிருக்கிறார்.

 

 

அஞ்சலியின் உதடுகளை தீண்ட ஆர்யாவுக்கு அதிர்ஷ்டம்


சீமலா பாலைத் தொடர்ந்து தற்போது அஞ்சலியின் உதடுகள் ஆரியாவின் கஸ்டடிக்குப் போகப் போகிறது. சேட்டை படத்திற்காக இருவரும் சேர்ந்து ஒரு லிப் லாக் காட்சியில் லவ்லியாக க(ந)டிக்கப் போகிறார்களாம்.
டெல்லி பெல்லி இந்திப் படத்தை சேட்டை என்ற பெயரில் ரீ மேக் செய்கின்றனர். கண்ணன் இயக்குறார் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். பிரேம்ஜி, சந்தானம் காமெடியைக் கவனிக்கிறார்கள். நாயகியாக மசாலா கபே அஞ்சலி.
டெல்லி பெல்லியின் சூடான, சுவையான லிப்லாக் உண்டு. அதேபோல் சேட்டையிலும் இருக்கிறதாம். அஞ்சலி உதடுகளை ஆர்யா கவ்விக் கொள்வது போல காட்சி வைத்துள்ளனராம்.
இந்த லிப்லாக்கின் அவசியம், முக்கியத்துவம், கட்டாயம் குறித்து ஆர்யாவிடமும், அஞ்சலியிடமும் கண்ணன் விளக்கினாராம். இதை ஏற்று இருவரும் முத்தமிட்டுக் கொள்ள சம்மதித்து விட்டனராம்.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காட்சியை வடிவமைத்து விட்ட கண்ணன், அக்காட்சியை மும்பையில் போய் ஷ¥ட் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
இதையடுத்து ஆரியாவும், அஞ்சலியும் தங்களது உதடுகளுடன் மும்பை செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம். அதேசமயம், டெல்லி பெல்லியில் வருவது போன்ற படுக்கை அறைக் காட்சி சேட்டையில் இருக்காதாம்.
ஏற்கனவே அமலா பாலின் உதட்டில் விளையாடியுள்ள ஆர்யா, இப்போது அஞ்சலியிடம் வருகிறார்...!

ஆப்கானிஸ்தானில் விஸ்வரூபம்


ஹொலிவுட் பாணியில் தயாராகி இருக்கும் விஸ்வரூபம் படத்தின் டிரைலர் மற்றும் படக் காட்சிகளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன், பயங்கரவாதமும், அதற்கு எதிரான போராட்டம்தான் படத்தின் கதை என்பது ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது- அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இதுவரை பார்த்திராத இடங்களில் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த ட்ரைலரில், படத்தின் பிரமாண்டம் தெரிகிறது. அதுமட்டுமல்ல படத்தில் கதக் டான்சராகவும் மிரட்டியுள்ளார் கமல்.
விஸ்வரூபம் படம் குறித்து சிங்கப்பூரில் கமல் கூறியதாவது :-
கடந்த 7 வருடங்களாக என் மனதில் பதிந்திருந்த கதைதான் விஸ்வரூம். அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்க்க தமிழ்ப் பெண் நிருபமா. அங்குள்ள விஸ்வநாதனை திருமணம் செய்துகொள்கிறாள். 3 வருடம் காதல், ஊடல், கூடலின்றி இல்லறம் நடத்தி பி. எச். டி. முடித்து வேலைக்கும் செல்கிறாள்.
தனது நடன பள்ளியை சம்சாரம் இடைஞ்சலின்றி நடத்தி வருகிறார் விஸ்வநாத். ஆசை யாரை விட்டது. நிருபமா வேறு புதுக்கனவு காணுகிறாள். திருமணத்தை துறக்க விரும்புகிறாள் மன முறிவிற்கு என்ன காரணம் சொல்வது என குழம்புகிறாள். விஸ்வநாத்திடம் ஏதாவது களங்கம் உள்ளதாக என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிறது என்றோடு முடித்து கொண்ட கமல் மீதியை திரையில் நீங்களே பாருங்கள் என்று கூறி முடித்துவிட்டார்.

தாயாக சங்கீதா தாத்தாவாக சத்யராஜ்


நடிகை சங்கீதா எத்தனையோ தமிழ் படங்களில் நடித்தும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது பிதாமகன் படம் தான். அந்தப் படத்துக்காக அவருக்கு பிலிம்பேர் விருதும், சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தன. அதையடுத்து அவர் நடித்த உயிர் படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசனின் மன்மதன், அம்பு படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சங்கீதா பாடகர் கிருஷ்-ஐ கடந்த 2009 ஆம்ஆண்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைத்து மணந்தார். திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இன்னும் ஒரு சில மாதங்களில் தாயாகிவிடுவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, நடிகர் சத்யராஜ் தாத்தாவாகப் போகிறார். அதாவது அவரது மகன் சிபிராஜ் தந்தையாகப் போகிறார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு மீண்டும் அப்பாவாகிறார். அவருக்கு ஏற்கனவே ஷிவாணி என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

குனிந்து நிமிரும்போது குதூகலம் தந்த உடை

கொஞ்சம் அரோகன்டான நடிகை என்றுதான் அம்மணிக்கு பெயர். குணத்தில் மட்டுமல்ல ஒன்றாக இருக்கும் குடும்பத்தைப் பிரிப்பதிலும் நடிகையின் மூர்க்கம் கோடம்பாக்கம் அறிந்ததுதான்.
மிக சமீபத்தில் அண்மையில் ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருக்கிறார் இந்த நடிகை. ஏடாகூடமான உடையில் எக்கச்சக்க கவர்ச்சி ததும்ப வந்திருந்தாராம்.
அவர் ஒவ்வொரு முறை குனிந்து நிமிரும்போதும் புகைப்படக்காரர்கள் வேறு பக்கம் பார்க்கும்படி இருந்ததாம் நிலைமை. அவர் எதையும் கண்டு கொள்ளாமல், மீண்டும் மீண்டும் குனிந்து நிமிர, எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு க்ளிக் அடித்திருக்கிறார் போட்டோகிராபர்.
அவ்வளவுதான், கோபத்தின் உச்சிக்கே போய்விட்ட நடிகை, போட்டோகிராபரை அருகில் அழைத்து பளார் விட்டாராம். கடுமையாக அவரை எச்சரித்ததோடு, அந்த போட்டோக்களையும் அழித்துவிட்டாராம்.
கன்னத்தைத் தடவிக் கொண்டே கேமராவைக் கொடுக்கும்போது நடிகை குனிந்து நிமிர்ந்ததை கடைசியாகப் பார்த்தபடி வெளியேறினாராம் போட்டோகிராபர்.

No comments:

Post a Comment