Friday, March 9, 2012


 

பிரச்சினைகளை சந்தித்த சோனியா அகர்வால்



xரு நடிகையின் வாக்கு மூலம் என்ற படத்தை அடுத்து, சோனியா அகர்வால் இயக்குநர் ராஜ் பிரபு இயக்கத்தில் ‘அச்சம் என்ன’ என்ற படத்தில் நடிக்கிறார்.
மேலும் இப்படத்தின் கதை முழுவதும் பெண்களின் பிரச்சினையை மையமாக கொண்ட கதையாகும். இது குறித்து சோனியா அகர்வால் கருத்து தெரிவிக்கையில், பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
ஏனென்றால் பெண்கள் தமது வாழ்க்கையிலும், வெளியிடங்களிலும் நாளுக்கு நாள் அதிகமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவ்வாறு பிரச்சினைகளை சந்தித்த பெண்களில் நானும் ஒருவர் என்று கூறியுள்ளார்.

நாய் வேண்டுமா?  

த்ரிஷாவை நாடவும்



நாய் வேண்டும் என்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர் நடிகை த்ரிஷா அவ்வப்போது தனது பேட்டியில் நாய்கள் பற்றி பேசுவார்.
ஐதராபாத்தில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில் நாய்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதில், நான் இரு நாய்க்குட்டிகளை வீட்டில் வளர்க்கிறேன். அதில் ஒரு குட்டியை பிராணிகள் நலப்பாதுகாப்பு அமைப்பான

புளு கிரா சுக்கு சென்று எடுத்து வந்தேன். அங்கு சென்ற போது, அக்குட்டி முணங்கிக் கொண்டு இருந்தது. உடம்பிலும் சில காயங்கள் இருந்தன. அதற்கு மருத்துவ சிகிச்சை அளித்து வீட்டிலேயே வைத்துக் கொண்டேன். அதற்கு மைலோ என்ற பெயரும் சூட்டி உள்ளேன். நாய்களை வளர்த்து தத்து கொடுக்க முடிவு செய்துள்ளேன்.
தெருவோரத்தில் கேட்பாரற்று கிடக்கும் நாய்களை எடுத்து வந்து அவற்றின் படங்களை ட்விட்டரில் வெளியிடுவேன். தத்து எடுக்க விரும்புவோர் என்னை தொடர்பு கொண்டு அந்த நாய்களை வாங்கிச் செல்லலாம்.
வாய் இல்லாத ஜீவன்களை ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நயன்தாரா சென்னையில் செட்டிலாக முடிவு


நயன்தாராவும், பிரபுதேவாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். இதனால் மீண்டும் நடிக்க வருகிறார் நயன்தாரா. திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவில்தான் இருந்தார். கடைசியாக தெலுங்கில் ராமராஜ்ஜியம் படத்தில் நடித்து முடித்து விட்டு கண்ணீருடன் விடைபெற்று சென்றார்.
பல மாதங்கள் திருமணத்துக்காக காத்து இருந்தார். ஆனால் பிரபுதேவா பிடிகொடுக்கவில்லை. ஆரம்பத்தில் திருமணத்துக்கு ஆர்வமாக இருந்தவர் பிறகு ஒதுங்க ஆரம்பித்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். தெலுங்கில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.
அஜீத்துடன் பில்லா2 படத்திலும் சில சீன்களில் நடிக்க பேசி வருகின்றனர். தமிழ் படங்களில் முழு வீச்சில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக சென்னையிலேயே குடியேற முடிவு செய்துள்ளார். வீடு தரகர்கள் மூலம் வடபழனி, சாலிகிராமம் பகுதிகளில் பங்களா வீடு தேடி வருகிறார். வீடு அமைந்ததும் அங்கு தங்குவார். அடுத்த மாதத்தில் இருந்து சென்னையில் நிரந்தரமாக தங்கப் போகிறார்.

தமன்னா பற்றி தவறான செய்திகள்


தமிழில் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில் தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. இந்நிலையில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனல் கால்iட் குழப்பம் காரணமாக அப்படத்திலிருந்து தமன்னா விலகிவிட்டார்.
அவருக்கு பதிலாக கன்னட நடிகை அக்ஷரா நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இதற்கு தமன்னாவின் தந்தை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘தமன்னா பற்றி சமீபகாலமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். மகேஷ்பாபு படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறுவது தவறு. அந்தப் படத்தில் நடிப்பது உறுதி.
ஆனால் மற்ற படங்களில் நடிப்பதால் கால்iட் தருவதில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தி படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. ரன்பீர் கபூர், அஜய் தேவ்கன் ஆகியோர் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது என்றார்.





No comments:

Post a Comment