நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை பானுமதி
தென்னிந்திய நடிகைகளில் நடிப்பின் சிகரத்தை தொட்டவர் பி. பானுமதி. இதனால் ‘நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர்.

‘வரவிக்ரயம்’ என்ற தெலுங்குப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். அவர் பாடிய பாடல்கள் இசைத்தட்டுகளாக வெளிவந்து சக்கை போடு போட்டன. இதன்பின், பிரபல டைரக்டர் பி.புல்லையா, ‘மாலதி மாதவம்’ என்ற படத்தில் பானுமதியை கதாநாயகியாக நடிக்க வைத்தார். பின்னர், ‘தர்மபத்தினி’, ‘பக்திமாலா’, ‘கருட கர்வபங்கம்’, ‘கிருஷ்ண பிரேமா’ ஆகிய படங்களில் பானுமதி நடித்தார். ‘கிருஷ்ண பிரேமா’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, பானுமதிக்கும், துணை டைரக்டர் ராமகிருஷ்ணாவுக்கும் காதல் ஏற்பட்டது.
குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, 8.8.1943 ல் ராமகிருஷ்ணாவை பானுமதி மணந்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு, சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட வேண்டும் என்பதே பானுமதியின் எண்ணம். ஆனால், அவர் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
திரைப்பட முன்னோடியான பி.என்.ரெட்டி (நாகிரெட்டியின் சகோதரர்), ராமகிருஷ்ணாவை சந்தித்து, ‘நான் தயாரிக்க இருக்கும்’ “சொர்க்க சீமா’ படத்தில் பானுமதி நடிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

சாதாரண நிலையில் இருந்து பெரிய நட்சத்திரமாக உயர்ந்த நாடக நடிகை, ஒரு டைரக்டரின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். ஏற்கனவே திருமணம் ஆன டைரக்டரின் வாழ்க்கையில் புயல் வீசுகிறது.
குடும்பப் பிரிகிறது. பல திருப்பங்களுக்குப் பிறகு, அவர் குடும்பம் ஒன்று சேருகிறது. வி.நாகையா டைரக்டராகவும், பானுமதி நடிகையாகவும் நடித்தனர். படம் பிரமாதமாக அமைந்தது, வரலாறு கண்டறியாத வெற்றியைப் பெற்றது.
அந்தப் படம் தமிழ்நாட்டிலும் திரையிடப்பட்டு, தமிழ்ப்படம் போல வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தில், கையில் வெள்ளைப் புறாவை வைத்துக்கொண்டு, ‘ஓகோ... கோ... பாவுரமா!’ என்று பானுமதி பாடுவார். தமிழ் ரசிகர்களும் அந்தப் பாட்டை முணுமுணுத்தனர். ‘சொர்க்க சீமா’ அடைந்த வெற்றி காரணமாக சினிமாவுக்கு முழுக்கு போடும் திட்டத்தை பானுமதி கைவிட்டார்.
இந்த காலகட்டத்தில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி விடுதலையடைந்த எம்.கே. தியாகராஜா பாகவதர் ‘ராஜமுக்தி’ என்ற படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பானுமதி நடித்தார். அவர் நடித்த முதல் தமிழ் படம். இது மற்றும் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, எம்.ஜி. சக்ரபாணி ஆகியோரும் நடித்த இந்தப் படம் 9.10.1948ல் வெளிவந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. அடுத்து, பேரறிஞர் அண்ணாவின் கதை - வசனத்தில், என்.எஸ். கிருஷ்ணன் சொந்தமாகத் தயாரித்த ‘நல்லதம்பி’ என்ற படத்தில் பானுமதி நடித்தார். 4.2.1949ல் வெளியான இப்படம் வெற்றி பெற்றது. இதில், பானுமதியின் நடிப்பு சிறப்பாக அமைந்தது.

15.12.1949ல் வெளிவந்த ‘ரத்னகுமார்’ சுமாராகவே ஓடியது.
பானுமதியின் நடிப்புத் திறமையை முழுவதுமாகப் பிரகாசிக்கச் செய்த படம் ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ இதில் பானுமதியின் நடிப்பை ‘அற்புதம்’ என்றே கூறவேண்டும். படத்தில் இரட்டை வேடங்களில் மிகப்பிரமாதமாக நடித்தார். எம்.கே. ராதா அவருக்கு இணையாகப் புகழ் பெற்றார், பானுமதி ‘அபூர்வ சகோதரர்கள்’, தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. மூன்று மொழிகளிலும் பானுமதிதான் கதாநாயகி. மூன்று படங்களிலும் சிறந்த நடிகைக்கான பரிசு பெற்றார்.
இதன்பின், சொந்தப் படத் தயாரிப்பில் பானுமதி ஈடுபட்டார். ‘லைலா மஜ்னு’ கதையை, தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாரித்தார். இரண்டு மொழிகளிலும் கதாநாயகன் ஏ. நாகேஸ்வரராவ் பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இப்படத்தை டைரக்ட் செய்தார். இனிய பாடல்களும் சிறந்த நடிப்பும் கொண்ட ‘லைலா மஜ்னு’ வெற்றிகரமாக ஓடியது. பிறகு பானுமதி ‘சண்டி ராணி’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து இரட்டை வேடங்களில் நடித்ததுடன், டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றார். கதாநாயகன்: என்.டி. ராமராவ்
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் தமிழில் சுமாராகவே ஓடியது.
குடும்பத்தின் கடைக்குட்டியான ரஜனியின் தந்தை பொலிஸ்காரர்
அவருக்கு கிடைத்த மாதாந்த ஓய்வு+தியம் 30 ரூபாவே!
uஜினி சினிமாவில் சம்பாதித்து சொந்தமாக வீடு கட்டிக் கொண்டது முதலில் சென்னையில்தான். இங்குள்ள தமிழ்ப் பெண் லதாவை கலப்புமணம் புரிந்து தானும் ஒரு தமிழரானார். தமிழகம் வந்து இருபது வருடங்களுக்குப் பின்புதான் இவர் பெங்களூரில் பிளாட் ஒன்று வாங்கினார்.

வானில் தோன்றும் நிலவல்ல இன்றைய வேகமான உலகில் திரையில் ரஜினியின் வேகம் பார்க்கும் எவருக்கும் அவர் காந்த சக்தியாகத் திகழுகிறார். அதற்கு வெறும் ஸ்டைல் மட்டுமே காரணமா? விடை காண முடியாத வினா அது.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகமாகி, ‘மூன்று முடிச்சு’ மூலம் புகழின் உச்சிக்குச் சென்று ரஜினி மேலும் மேலும் ஏற்றம் கண்டு வருகிறாரே தவிர சிறு அணுவளவும் குன்றிவிடவில்லை. இந்திய திரையுலகம் காணாத சாதனை இது.

சினிமாவுக்கு அப்பாற்பட்டு ரஜினியிடம் பந்தா, வீண் பகட்டு எதுவும் கிடையாது. வெளிப்படையாக, எதையும் மனம் திறந்து பேசும் தனது தனித்தன்மையால் எம்.ஜி.ஆருக்குப் பின் திரையுலகிலும் நல்ல பெயரையே தேடிக் கொண்டிருக்கிறார்.
ரஜினியின் உடன் பிறப்புகளெல்லாம் இன்றைக்கும் பெங்களூரிலேயே அவர்களது பூர்வீக வீட்டிலேயே (மாற்றியமைக்கப்பட்டது) வசித்துக் கொண்டு அவரவர் பணிகளைச் செய்து வருகிறார்கள்.

நாகேஷ்ராவ் (உயிரோடு இல்லை) அடுத்து கடைக்குட்டி சிவாஜிராவ் கெய்க்வாட் (ரஜினிகாந்த்). இப்போதும் ரஜினியை அவரது உடன் பிறப்புகள் ‘சிவாஜி’ என்றுதான் அன்புடன் அழைக்கிறார்கள். வெளி மனிதர்களிடம் மட்டும் ‘ரஜினிகாந்த்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
ரஜினியின் தனித் தன்மைகளில் ஒன்று அவரது அடக்கம், அதில் அவரிடம் மாறுபாடே காணமுடியாது எந்த நிலையிலும். அது போலவே பெங்களூரில் அவரது குடும்பத்தினரும் உள்ளனர்.

ரஜினியின் தந்தை ரானோஜிராவ் பொலிஸ்காரராகப் பணிபுரிந்தவர். அவர் ஓய்வு பெற்ற போது 3 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அதில் 800 ரூபாய்க்கு இப்போதிருக்கும் இடத்தை வாங்கி மீதிப் பணத்தில் வீட்டைக் கட்டி முடித்தார். மாதாந்தோறும் அவருக்கு வந்த ஓய்வூதியம் 30 ரூபாய் மட்டுமே. இது படிப்படியாக அதிகரித்து 160 ரூபாயானது.
2 ஆயிரம் ரூபாய் செலவு செய்து 300 சதுர அடியில் சிறிய வீடொன்றைக் கட்டினார்.
ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவின் திருமணம் நடந்தது இந்த வீட்டில்தான்.
ரஜினியை பற்றி சத்யநாராய ணராவ் கூறும்போது, நான் என்ன உதவி கேட்டாலும் உதவுவதற்குத் தயாராக இருப்பார் என்றார்.
சத்யநாராயணராவ் ரஜினியை ‘அவர்’ ‘இவர்’ என்று மரியாதையுடனேயே குறிப்பிடுகிறார்