நகைச்சுவை வேடத்தில்; நடிக்க ஸ்ரேயா விருப்பம்

தெலுங்கு, ஆங்கில படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அனுபவ முதிர்ச்சியோடு தத்துவார்த்தமாக பேசினார். அவர் கூறியதாவது :-
காலம் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும். நேற்று போல் இன்று இருப்பது இல்லை. இன்று போல் நாளை இருப்பது இல்லை. என்னை பொறுத்தவரை, தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் திருப்தியான வேடங்களில் நடித்து முடித்துவிட்டேன்.
ஆனாலும் முழுக்க காமெடி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது. எனக்கு பிடிக்காதது திகில் கதைகள். திகில் படங்களை நான் பார்ப்பதே இல்லை. அது போன்ற படங்களில் நடிக்கவும் மாட்டேன். பணம் கொடுத்து பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது போன்ற பயங்கர கதைகளை காட்டுவது உகந்தது இல்லை.
இப்படியும்
ஒரு நடிகையா?
வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்த பு+ர்ணா!

கருவாச்சி என்ற படத்தில் பூர்ணா நடித்து வருகிறார் இல்லையா? இந்தப் படத்தைதான் கடைசி வைக்கோல் துரும்பாக அவர் எண்ணிக் கொண்டிருக்கிறார். படத்தைப் பற்றி அவர் தரும் பில்டப்புகளைப் பார்த்தால் கருவாச்சி பாரதிராஜாவின் கருத்தம்மாவை பீட் பண்ணுமோ என்று தோன்றுகிறது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு மேற்கொண்டு படத்தை நகர்த்த பணம் தேவை. இதையறிந்ததும் படத்துக்காக தான் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக்கொடுத்திருக்கிறார். அட்வான்ஸை வச்சு நாம என்ன பண்ணப் போறோம். தயாரிப்பாளரிடம் அது இருந்தால் படப்பிடிப்பாவது நடக்கும் என்று நெகிழ்கிறார் பூர்ணா.
பூர்ணாவின் இந்த நிலை வரும் போது இலியானாக்கள் தானாக திருந்திவிடுவார்கள்.
No 01 ஆக ஆசை இல்லை

வாழ்க்கையில் ஜெயிக்க நிறைய கனவு காண வேண்டும். வெற்றி பெறுவோம் என்றும் நம்ப வேண்டும். எல்லாவற்றுக்கும் ஆசைப்பட வேண்டும். ஆனால் பேராசை மட்டும் கூடாவே கூடாது. பேராசை கேடு செய்யும் சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்றும் ஆர்வப்படுகிறேன்.
அதற்காக நம்பர் ஒன் இடத்துக்கு வரவேண்டும் என்றெல்லாம் ஆசை கிடையாது. தமிழ், தெலுங்கில் நிறைய படங்கள் நடித்துவிட்டேன். வெற்றியும் தோல்வியும் கிடைத்துவிட்டது. இப்போது சினிமாவில் நிறைய பக்குவப்பட்டு விட்டேன். இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.
நான் இனி நடிக்க மாட்டேன்
உதயதாரா

இவர்களின் நிச்சயதார்த்தம் மார்ச் 7 ஆம் திகதி கோட்டயத்தில் நடைபெறுகிறது. 16 ஆம் திகதி கோட்டயம் அருகிலுள்ள கடுத்துருக்கி என்ற இடத்தில் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்று உதயதாராவிடம் கேட்டபோது ‘இனி நான் நடிக்க மாட்டேன்.
திருமணம் முடிந்ததும் கணவருடன் சார்ஜாவில் குடியேறுகிறேன். நடித்த படங்களின் ஷ¥ட்டிங்கை முடித்து விட்டேன்’ என்றார்.
No comments:
Post a Comment