Tuesday, February 28, 2012






 யார் இந்த கோமள வள்ளி?

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்தி ருப்பார். பிறந்ததும் ஜெயலலி தாவிற்குச் சூட்டப்பட்ட பெயர் அது. ஆனால் சில காலத்தில் ஜெயலலிதா ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர், அவரது அம்மாவுக்கு அம்மு, அ. தி. மு. க. வினர் அனைவருக்கும் அம்மா!
சேர்ச் பார்க் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால் மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரைசேர்ச் பார்க்கில் படித்தார். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சேர்ச்
பார்க்கில் படிக்க வேண்டும் என்பதைத் தனது ஆசையாகச்சொல்லியிருந்தார்.
போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஊட்டி கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் ஆகிய நான்கும் ஜெயலலிதா மாறி மாறித் தங்கும் இடங்கள். உடம்பை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வதில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தார். தினமும் வெந்நீரில் எலுமிச்சம் பழச் சாறும் தேனும் கலந்து குடித்தார். ஜெயலலிதா நடித்த மொத்தப் படங்கள் 115. இதில் எம். ஜி. ஆருடன் நடித்தவை 28. ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’ என்ற ‘அரசிளங்குமரி’ படப் பாடல்தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார்.
அந்தப் பாடலை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மனைவியிடம் 10 இலட்சம் ரூபா பணம் கொடுத்து, அவரது எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்கியவர் ஜெயலலிதா.
‘அரசியலில் நான் என்றுமே குதிக்க மாட்டேன்’ என்று முன்பு ஒருமுறை பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. ‘நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆகிவிடுவார்போல’ என்று அவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலி மாறன்.
ஜெயலலிதா முதலில் குடியிருந்தது சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில். பிறகு, அடையாறு பகுதியில் குடி இருந்தார். படங்கள் குவிந்து நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது. அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துக் கட்டியவர் அவரது அம்மா சந்தியா.
‘வீட்டுக்குள்ளே என்ன மாற்றமும் செய்யலாம், ஆனா, எங்க அம்மா வைத்த வாசலை மட்டும் மாற்றக் கூடாது’ என்று அப்போது சொன்னவர் ஜெயலலிதா. எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே அப்பா இறந்துபோனதால் அந்த நினைவுகள் இல்லை.

No comments:

Post a Comment