kறைந்த புகைப்படக் கலைஞர், யதார்த்தத்துக்கு நெருக்கமாக தன் படைப்புக்களைத் தந்த அமரர் பாலுமகேந்திராவின் வாழ்க்கை முழுவதும் பெண்களால் நிரப்பப்பட்டதுதான். பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா, இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி அகிலா குறித்து பாலு மகேந்திரா கூறியிருந்த கருத்து என்ன ... இதோ அவரது வார்த்தைகளில் ‘சினிமாவையும் இலக்கியத்தையும் அசுர வெறியோடு நேசிக்கும் எனக்கு என் வாழ்க்கைத் துணையும் சினிமாவோடும், இலக்கியத்தோடும் சம்பந்தப்பட்டவர்களாக, என் அலைவரிசையில் இருப்பவளாக வேண்டும் என்ற ஒரு பேராசை. இது அபத்தமான ஆசை. முட்டாள்தனமான எதிர்பார்ப்பு என்பதும் எனக்குத் தெரியும்.
அபத்தங்களும் முட்டாள் தனமும் நிறைந்ததுதான் என் வாழ்க்கை. ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்த என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான். இந்த உறவை (மெளனிக்காவுடனான) ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் பற்றி நான் யோசித்திருக்க வேண்டும்.
இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். வாழ்க்கையை அந்தந்த நொடிகளாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை. உள்ளும் புறமும் அழகானவள் அகிலா. எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் பதினெட்டு வயது சரியாகப் புடவை கட்டக் கூடத் தெரியாத வெகுளிப்பெண்.

என்னை மாதிரி ஒரு கோணங்கிக்கு வாழ்க்கைப்பட்டது அவள் விதி. இந்தப் பத்தினிக்கு வலிகளையும் காயங்களையும் தவிர, வேறு என்ன தந்தேன் என்று நினைக்கும் போது எங்காவது கண்காணாமல் போய்விடத் தோன்றுகிறது. மெளனிக்காவின் பேரன்பு... மெளனிகாவும் என் மனைவிதான். இந்த இடத்தில் மெளனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது.
மெளனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! ஏறக்குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்து போன ஒரு தருணத்தில், நான் உங்க கூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை. அந்த அபலைப் பெண்ணின் கேள்விக்குப் பின்னே இருந்த வேதனை, அவமானம், வலி அனைத்தையும் நான் அறிவேன்.
புத்திபூர்வமாக வாழாமல் , உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்த என்னை அது வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவுதான் எனக்கும் மெளனிக்குமான உறவு இவ்வளவு வேதனைப்படுகிற நீங்கள் ஏன் உங்கள் வாழ்வை இத்தனைச் சிக்கலாக்கிக் கொண்டீர்கள்?” “காரணம் மெளனியின் பேரன்புதான். “நீங்க எனக்குத் தாலி கட்ட வேண்டாம். உங்க காசு, பணம், சினிமா எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் மூலமாக ஒரு குழந்தை கூட வேண்டாம்.
நீங்கள் என்னருகில் இருங்கள். அது போதும்! என்று சொல்லும் ஒரு ஆத்மாவை நான் எப்படி உதறித் தள்ளுவது? தன் இளமைக் காலத்தை எனக்காக, என்னுடன் பகிர்ந்து கொண்டவளை எப்படி உதற? எனீ; உறவு காரணமாகப் பழிச்சொல், அவமானம் அடைந்தவள் அவள். நான் வேலை இன்றி இருந்த மாதங்களில், தான் மட்டும் மாங்கு மாங்கென்று உழைத்து, பொருளாதார ரீதியாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள்.
இந்த செவ்வாய்க்கூட எனக்காக மாங்காடு அம்மன் கோயிலுக்கு வீட்டிலிருந்தே நடந்து போய், அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறாள். ஒரு பெண்ணின் பூரணமான அன்பையும், அழுத்தமான பஜீ;தியையும் உணர்ந்தவர்களால் எங்கள் உறவைப் புரிந்துகொள்ள முடியும்.
இருபது வருடங்கள், தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு இப்போது 35 வயதாகும். மெளனியை எப்படி நான் தூக்கிப் போடுவது? அதே சமயம், என் அகிலாவை நான் எந்தக் காலத்திலும் எவளுக்காகவும் விட்டு விலகியவன் அல்ல. அவளை நான் ஆத்மார்த்தமாக, ஆழமாக நேசிக்கிறேன் என்றாவது ஒரு நாள், என் நெஞ்சில் நிறைந்து வழியும் அன்பை, பொங்கிப் பிரவாகமெடுக்கும் பாசத்தை அகிலா புரிந்துகொண்டால் எனது இறுதி மூச்சு நிம்மதியாகப் பிரியும்! “மெளனிகாவுக்கும் உங்களுக்குமான உறவில், உங்கள் மகன் ஷங்கியின் நிலை என்ன?” “ஷங்கி என் சிநேகிதன். என்னை அணு அணுவாகப் புரிந்தவன். (தொடரும்)
No comments:
Post a Comment