Cini Mini சினி மினி
K. Easwaralingam
Saturday, January 4, 2025
அறநெறி அறிவு நொடி 2002 இல் இருந்து
| ||||
ருக்மணிதேவிக்குப் பின் சிங்கள கலையுலகை கலக்கும் நிரஞ்சனி
ருக்மணிதேவிக்குப் பின் சிங்கள கலையுலகை கலக்கும் நிரஞ்சனி இலங்கை சிங்கள சினிமாத் துறை வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஆரம்ப காலத்தில் சிங்கள சினிமாவை கலக்கி வந்த ஒரு தமிழ் நடிகை ருக்மணிதேவி. இவர் நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகியுமாவார். அவரது மறைவுக்குப் பின் நீண்டகாலமாக வெற்றிடமாக இருந்த இந்தக் குறையை நிவர்த்திக்கும் வண்ணம் சிங்கள திரையுலகுக்குள் பிரவேசித்து கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் நிரஞ்சனி சண்மகராஜா. இவர் வரலாற்று சிறப்பிக்க இதிகாச கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குவேணி மேடை நாட்டிய நாடகம் எதிர்வரும் 2025.01.03ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் உள்ள தாமரைத் தடாக மண்டபத்தில் மேடையேறவுள்ளது. இலங்கை மேடை நாடக வரலாற்றில் இதுவரை மேடையேற்றப்படாத முறையில் மிகவும் பிரமாண்ட முறையில் மேடையேற்றப்பட இருக்கிறது இந்த நாட்டிய நாடகம். இந்த நாடகத்தில் நடிக்கின்ற ஒரே ஒரு தமிழ் நடிகை நிரஞ்சனி சண்முகராஜா. இதில் நுாறு நடனக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளார்கள். தொழில் நுட்பம், நடிப்பு என 250 கலைஞர்கள் இதில் பங்களிப்புச் செய்யவுள்ளார்கள். நடனத்துறையில் நிபுணத்துவம் பெற்ற சிரேஷ்ட நடனக்கலைஞர்களான சந்தனா விக்ரமசிங்க, லெஜெண்டரி கலாநிதி ரவிபந்து வித்யாபதி ஆகியோர் இதற்கு நடனக் கலை வழங்கி இயக்குகிறார்கள். இதுவரை தமிழ், சிங்கள திரைப்படங்களில் நடித்தவந்த நடிகை நிரஞ்சனி சண்முகராஜாவுக்கு இது புது அனுபவமாக இருக்கும் என்று கூறினார். கலாநிதி ரவி பந்து வித்தியாபதி, பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க, ரஞ்சித் பிரியங்க, சாரங்க விமுக்தி, நரேந்தர் சத்துரங்க, ரசிது லக்ஷான், தேவாங்கி விக்ரமசிங்க, கௌசல்யா மதுவந்தி, துமிந்த தர்சன ஆகியோர் இதில் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் பேசல மனோஜ் இசையமைத்துள்ளார். ஆடை ஆபரண அலங்காரம் நுாபத்தி நீலம்பர, கதை மற்றும் நடன இயக்குனர் சந்தன விக்ரமசிங்க. |
Sunday, December 1, 2024
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் சர்வதேச இளைஞர் திரைப்பட விழா
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் சினிமா கனவுகளுடன் அத்துறைக்குள் பிரவேசித்திருக்கும் இளம் சினிமா கலைஞர்களுக்கு களமமைத்து கொடுக்கும் நோக்கில் இளைஞர்களின் சினிமா அறுவடையாக (Youth cinematic Harvest) சர்வதேச இளைஞர் திரைப்பட விழாவை நடாத்தி வருகின்றது. 10 வருடங்களுக்கு முன்னர் உள் நாட்டு திரைப்படக் கலைஞர்கள் மாத்திரம் உள்வாங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா தற்போது சர்வதேச நாடுகள் பலவற்றின் தயாரிப்புகளுடன் எம்மவர்களும் இணைந்து போட்டியிடும் வகையில் வளர்ச்சி கண்டுள்ளது. இம்முறை ரஷ்ய கலாசார மத்திய நிலையத்தில் 10வது சர்வதேச இளைஞர் திரைப்பட விழாவை நடாத்தியிருந்து. இப்போட்டிக்காக சுமார் 150 உள் நாட்டு தயாரிப்புக்களும் 50 சர்வதேச தயாரிப்புக்களும் விண்ணப்பித்து தகுதி பெற்றிருந்தன. இவற்றில் 20 குறுந்திரைப்படங்களும் 20ஆவணப்படங்களும் 21இலிருந்து 23ம் திகதிவரை மக்கள் பார்வைக்காக திரையிடப்பட்டதுடன் 24ஆம் திகதி விருது வழங்கும் விழாவை நடாத்தியிருந்தது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயம் சட்டத்தரணி சிந்தக ஹேவாபத்திரனவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே கலந்துக்கொண்டார். விருதுக்காக தெரிவு செய்யும் நடுவர்குழு சர்வதேச -திரைப்பட வல்லுனர்கள் பலரை கொண்டதாக காணப்பட்டதுடன் ஜுரியின் விசேட அதிதியாக சர்வதேச திரைப்பட இயக்குனர் இந்தியாவின் ஸ்ரீ சாஜி நாராயண் கருன் கலந்து கொண்டார் அத்துடன் இவ்விழாவின்போது அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு, சர்வதேச மட்டம் என இரு பிரிவுகளாக இத்திரைப்படங்கள் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன் சர்வதேச மட்டத்தில் சிறந்த குறுந்திரைப்படமாக எகிப்து நாட்டின் மொராடா மொஸ்தபாவின் I PROMISE YOU PARADISE திரைப்படம் விருதுக்கு தெரிவாகியது. சிறந்த இயக்குனருக்கான விருது இலங்கையின் Let me go திரைப்படத்தை இயக்கிய சலன் பெரேரா பெற்றுக்கொண்டார். சர்வதேச மட்டத்தில் சிறந்த ஆவணப்படமாக இந்தியாவின் கௌரவ் பூரியினால் தயாரிக்கப்பட்ட A Bridged படம் தெரிவு செய்யப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு A Remembering of disremembering ஆவணப்படத்தை இயக்கிய பிலிப்பைன்ஸ் நாட்டின் கிரிஸ் பிரிங்காஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
உள்நாட்டுப் போட்டிப்பிரிவில் சிறந்த குறுந்திரைப்படத்துக்கான விருதுகளில் முதலாம் இடத்தை சந்தீப் மிதுனின் 'அரகல' குறுந்திரைப்படம் பெற்றுக்கொண்டதுடன் 2ஆம் இடத்தை கௌதமனின் ‘The Portraits’ உம் 3ஆம் இடத்தை கெனிஸ்டன் ஜோனின் 'நடுநிசி மாயம்' ஆகிய குறுந்திரைப்படங்களும் பெற்றுக்கொண்டன.
உள்நாட்டுப் போட்டிப்பிரிவில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதுகளுக்கு முதலாம் இடத்தினை மஹெசுரு பெரேராவின் ‘Cinephile’, 2ம் இடத்தை தரிந்து லொக்கு ஆரச்சியின் ‘The Portraits’ 3ம் இடத்தை பெதும் சந்தீப்பவின் ‘Entry prohibited’ஆகிய ஆவணத் திரைப்படங்கள் தெரிவாகின. வருடத்தின் சிறந்த நடிகருக்கான விருதினை ‘The Portraits’ 'குறும் திரைப்படத்தின் அப்துல்லா ரியாஸ் பெற்றுக் கொண்டார்.
நாட்டின் ஏனைய துறைகளைப் போலவே கலைத்துறையிலும் மிளிர துடிக்கும் இளைஞர்களின் ஆரம்பத்திற்கு உறுதியான அடித்தாளமிட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் எப்பொழுதும் துணை நிற்பதற்கு இவையும் சான்று பகிர்கின்றன..
அரச நாடக விழாவில் "பறையனின் கடைசி அடி"
கலாசாரத் திணைக்களம் வருடாந்தம் நடத்தி வரும் அரச நாடக விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதில் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் ஒன்று "பறையனின் கடைசி அடி". இந்த நாடகத்தை கந்தலோய தோட்டம் நாவலப்பிட்டியில் வசிக்கும் மோசஸ் சுரேஷ் தயாரித்து நெறியாள்கை செய்துள்ளார். நாம் பார்க்கும் சமகால உலகில் வாழ்ந்து வரும் கடைசி பறையன் அவனுடைய மனநிலையை வெளிப்படுத்தத் தெரியாமல் ஒரு சூழ்நிலை கைதியாக மாறுகிறான். ஒரு பக்கம் தன்னுடைய கலை, மறுபக்கம் இன்றைய சமூகத்தின் எதிர்பார்ப்பு. இரண்டுக்கும் இடையில் இவன் சிக்கிக் கொள்ளும் சந்தர்ப்பமானது இவனுடைய மனநிலையை மரணத்திற்கு இட்டுச் செல்கின்றது. பறையனின் கடைசி பறை அடியானது அடுத்த சந்ததியினருக்கு நல்ல கருத்துக்களை வழங்கும் முகமாக இந்த நாடகம் படைக்கப்பட்டுள்ளது. ஆர் தனுஷன், சத்தியசீலன், கலைச்செல்வன், அல்ட்ரிக், ரஞ்சிதன் (மேடை அமைப்பு) சஞ்ஜிவனி, அனுஷ், ரிஸ்கா (நாடகக் கலைஞர்கள்) ராஜேஸ்வரி, நிரஞ்சன், பஜித்ரா ஆகியோர் இந்த நாடகத்திற்கு தங்களால் இயன்ற வகையில் பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி இந்த நாடகம் கூத்துக்கலையாக அமைந்துள்ளது. மலையகத்தில் உள்ள ஒரு பிரச்சினையை மையப்படுத்திய இந்த நாடகம் அரச நாடக விழாவில் மூன்றாம் சுற்றுக்கு தெரிவாகி கடந்த 2024.11.22 திகதி மேடையற்றப்பட்டது. | |
அறநெறி அறிவு நொடி
20380 ) மகா கணபதி ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? தடையின்றி செயல்கள் நடைபெறும், லெட்சுமி கடாச்சம் ஏற்படும். 20381 ) சந்தான கணபதி ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன?நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும். 20382 ) வித்யா கணபதி ஹோமம் எதற்காக செய்யப்படுகிறது?கல்விக்காக 20383 ) மோகன கணபதி ஹோமம் எதற்காக செய்யப்படுகிறது? திருமணத்திற்காக 20384) ஸ்வர்ண கணபதி ஹோமம் எதற்காக செய்யப்படுகிறது?வியாபார லாபத்திற்காக 20385) நவகிரக ஹோமம்எதற்காக செய்யப்படுகிறது?நவகிரகங்களினால் நன்மை ஏற்பட 20386) லெட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? ஏழையும் செல்வந்தனாவான் 20387) துர்க்கா ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? எதிரிகளின் தொல்லை அகலும் 20388) சுதர்சன ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? கடன் தொல்லை நீங்க,பில்லி சூன்யம் ஏவந்கள் அகலும் 20389) ஆயுஷ் ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம். 20390) மிருத்துந்தய ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம். 20391) தன்வந்திரி ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? நோய் நிவாரணம் 20392) ஸ்வயம்வரா ஹோமம் ஏன் செய்யப்படுகிறது? திருமணதடை அகல, விரைவில் கைகூட 20393) சந்தான கோபால கிருஷ்ணஹோமம் ஏன் செய்யப்படுகிறது?குழைந்தை பேறு கிடைக்க 20394) மேதா தட்ஷிணாமூர்த்தி ஹோமம்ஏன் செய்யப்படுகிறது? மேற்கல்வி, தெளிந்த சிந்தனை பெற |