Thursday, May 25, 2023

பங்குனி மாதம்

 

பங்குனி மாதம் என்பது எதற்கு உரிய மாதம்?

வழிபாட்டுக்கு

பங்குனி மாதம் என்பது வேறு எதற்கு உரிய மாதம்?

வணங்குவதற்கும் பூஜைக்கும்

பங்குனி மாதம் என்பது வேறு எதற்குரிய மாதம்? வைபவங்களுக்கான மாதம்.

அற்புதமான பங்குனி மாதத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

தெய்வ மாதம் என்று போற்றுகின்றனர். பங்குனி உத்திரம் யாருக்கு உகந்த விழா?

தமிழ் கடவுள் முருகனுக்கு

பங்குனி மாதத்தில் பௌர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் இணைந்து வரும் நாள் என்னவாக கொண்டாடப்படுகிறது?

பங்குனி உத்திர திருவிழாவாக

தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமாக வருவது எந்த மாதம்?

பங்குனி

அதே போல் நட்சத்திரங்களில் பன்னிரண்டாவதாக வருவது எந்த நட்சத்திரம்?

உத்திரம்

பங்குனி உத்திரத்தின் சிறப்பு என்ன?

அந்த நாளில் பௌர்ணமியும் இணைந்து வருவது சிறப்பாகும். தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாள் எது? பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரத்தன்ற விரதம் இருந்து வழிபட்டால் என்ன நடக்கும்?

நிச்சயம் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

அதனால் பங்குனி உத்திர விரதத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

திருமண விரதம்

ஸ்ரீராமபிரான்- சீதாதேவி திருமணம் நடந்த நன்னாள் எது?

பங்குனி உத்திரம்

பரதன்- மாண்டவி திருமணம் நடந்த நன்னாள் எது?

பங்குனி உத்திரம்

லட்சுமணன்- ஊர்மிளை திருமணம் நடந்த நன்னாள் எது?

பங்குனி உத்திரம்

சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் எது?

பங்குனி உத்திரம்

முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டது எப்போது? பங்குனி உத்திர நன்னாளில்தான்.

ஸ்ரீவள்ளி அவதரித்த நாள் எது? பங்குனி உத்திரம் என்கிறது புராணம்.

தேவர்களின் தலைவன் என்று போற்றப்படுகிறவர் யார்?

தேவேந்திரன்

தேவேந்திரன் இந்திராணி திருமணம் நடைபெற்றது எப்போது?

பங்குனி உத்திர நன்னாளில்தான்.

நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான்,

அழகும் திறனும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் புரிந்தது யார்? நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான்,

சந்திர பகவான் 27 நட்சத்திரக் கன்னியரை மணம் புரிந்தது எப்போது?

இதே பங்குனி உத்திர நாளில்தான் என்கிறது புராணம்.

ஸ்ரீமகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டது எப்போது?

பங்குனி உத்திர நாளில்

ஸ்ரீமகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டதுதால் மகிழ்ந்த திருமால் என்னசெய்தார்?

தன் திருமார்பில் மகாலக்ஷ்மிக்கு வீற்றிருக்கும் வரத்தைத் தந்தருளினார் என்கிறது எது?

புராணம்

எந்த புராணம்?

விஷ்ணு புராணம்.

தன்னுடைய நாவில் ஸ்ரீசரஸ்வதி தேவியை வைத்துக் கொண்டது யார்?

படைப்புக்கடவுளான பிரம்மா

அது எப்போது வைத்துக் கொண்டார்?

பங்குனி உத்திர நாளில்தான்!

ஐயப்ப அவதாரம் நிகழ்ந்தது எப்போது? பங்குனி உத்திர நாளில்தான்!

நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க சித்திரையே

வா“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்ற பெருமைக்குரிய தமிழினம் ஆனது ஒவ்வொரு வருடமும் தமிழில் சித்திரை முதலாம் திகதியை வருடப்பிறப்பாக கோலாகலமாக கொண்டாடுகிறது.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் உலக தமிழர்களால் இப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழர்கள் ஆரம்ப காலங்களில் இருந்தே வானியல் ஜோதிடங்களில் சிறந்து விளங்கியதால் ஒரு தமிழ் ஆண்டு காலரீதீயாக சிறப்பாக கணிப்பிட படுகின்றது.

அதாவது சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் வருடம் மீன ராசியில் பிரவேசிக்கும் போது முடிவடைகின்றது. இதனடிப்படையில் பஞ்சாங்கங்களின் வாயிலாக தமிழ் புத்தாண்டானது கணிப்பிடப்படுகிறது.

சித்திரை மாதம் காலநிலை அடிப்படையில் வசந்த காலத்தின் ஆரம்பமாகும் இதனால் மக்கள் மகிழ்ச்சியோடு இப்புத்தாண்டை வரவேற்கின்றனர்.

தமிழ் புத்தாண்டின் வரலாறு சித்திரையின் மரபுகள் சிறப்புக்கள் என்பவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

தமிழர்கள் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தவர்கள். இதனால் பண்டிகைகளை பருவகாலங்களுக்கு ஏற்ப கொண்டாடினார்கள்.

தமிழர்களின் நாட்காட்டி 12 ராசிகளை அடிப்படையாக கொண்டதாகும். இதனால் ராசிகளில் முதலாவதான மேட ராசியில் சூரியன் ​ முதல் நாள் தமழிர்களின் புதுவருடம் ஆகும்.

இதை சங்க இலக்கியமான நெடுநல்வாடை “திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக விண்ணுர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து” குறிப்பிடுகிறது.

மேலும் அகத்தியாயிரம் புட்பவிதி நூலின் மூலம் சித்திரை முதல் நாளே தமிழ்புத்தாண்டு என்பதற்கான சான்றுகள் கிடைக்கப்பெறுகின்றன.

சித்திரை புத்தாண்டு பலவகையான சம்பிரதாயங்களை கொண்டதாகும். புத்தாண்டு ஆரம்பித்து விட்டால் வீடுகளில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.

புத்தாடை வாங்குதல், மருத்துநீர் வைத்து நீராடல், இனிப்பு பண்டங்களை பரிமாறி கொள்ளல், பொங்கல் இடுதல், கைவிசேடம் பெறுதல் சுபநேரத்தில் புதிய தொழில்களை ஆரம்பித்தல், பெரியவரக்ளிடம் ஆசி பெறுதல்,

கிளித்தட்டு, ஊஞ்சல், மாட்டுவண்டில் சவாரி, ஏறுதழுவுதல் என தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் வழிபாடுகளோடு மங்களகரமாக மக்கள் புத்தாண்டை வரவேற்பர்.

தமிழர்கள் உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமது பண்பாடான பண்டிகையை கொண்டாட தவறவில்லை.

தமிழ் மாதங்களிள் ஒவ்வொரு மாதங்களும் தனி சிறப்புடையன. அவற்றில் சித்திரை தனித்துவமானது.. அம்மாதத்தின் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதனால் இம்மாதம் சித்திரை என அழைக்கப்படுகிறது.

“சித்திரையே வா நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு காணப்படுகிறது இதன்மூலம் சித்திரையின் சிறப்பினை காணலாம். காலநிலை ரீதியாக சித்திரை சிறுமாரி என்று குறிப்பிடுவார்கள்.

இக்காலத்தில் நெல் விதைப்பில் சிறுபோகம் ஆரம்பமாவதுடன் விவசாயிகள் பயிர்செய்ய ஆரம்பிப்பார்கள். இவ்வாறு பல மகத்துவங்களை தன்னகத்தே கொண்டது இம்மாதமாகும்.

சங்கடஹர சதுர்த்தி

பங்குனி மாதத்தில், ஐயப்பனின் அவதார தினமும் வரும். ஸ்ரீராமபிரானின் அவதார நன்னாளும் வரும். ஸ்ரீவள்ளி அவதரித்ததும் பங்குனி மாதத்தில்தான். இத்தனைப் பெருமையும் புண்ணியமும் நிறைந்த மாதத்தில், விநாயகப் பெருமானை தினமும் வழிபட்டு வந்தாலே உன்னத பலன்கள் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்

எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வழிபட வேண்டும் என்று விவரிக்கிறது தர்மசாஸ்திரம். ஆகம விதிப்படியும் ஆலயங்களில், முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம். அதன் பின்னரே மூலவரை தரிசிக்கிறோம்.

எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வழிபட வேண்டும் என்று விவரிக்கிறது தர்மசாஸ்திரம். ஆகம விதிப்படியும் ஆலயங்களில், முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம். அதன் பின்னரே மூலவரை தரிசிக்கிறோம்.

விநாயகர், முழுமுதற் கடவுள் என்று போற்றப்படுகிறார். பிரமாண்டமான கோயிலிலும் பிள்ளையாரைத் தரிசிக்கலாம். தெருமுனைக் கோயிலிலும் கணபதி காட்சி தருவார். ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் கூட, அரசமரத்தடி நிழலில் கூட பிள்ளையாரப்பா அற்புதமாகக் காட்சி தந்து, நமக்கு அருளையும் பொருளையும் அள்ளித்தந்தருளுகிறார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

நம் விக்னங்களையெல்லாம் தீர்த்து அருளுகிறார். அதனால்தான் அவருக்கு விக்ன விநாயகர் என்றே திருநாமம் அமைந்தது. கணங்கள் என்றால் பொழுதுகள் என்று அர்த்தம். நம்முடைய ஒவ்வொரு கணத்துக்கும் அதிபதி பிள்ளையார்தான். அதனால்தான் அவருக்கு கணபதி எனும் திருநாமமும் அமைந்தது என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இத்தனை பெருமைகள் கொண்ட பிள்ளையாருக்கு உகந்தது சங்கட ஹர சதுர்த்தி நன்னாள். நாளை, சங்கடஹர சதுர்த்தி. பங்குனி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தி. இந்த நன்னாளில், விரதம் இருந்து பிள்ளையாரை தரிசிப்போம். விநாயகர் அகவல் பாராயணம் செய்வோம். மகா கணபதி மந்திரம் ஜபித்து வேண்டிக்கொள்வோம்.

விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சார்த்தி வேண்டிக் கொள்வது ரொம்பவே மகத்துவம் மிக்கது. அதேபோல், பிள்ளையாருக்கு வெள்ளெருக்கு மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் விக்னங்களெல்லாம் பறந்தோடும். கவலைகள் அனைத்தும் காணாமல் போகும். துக்கங்களையெல்லாம் போக்கித் தருவார் தும்பிக்கையான்! சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுகத்தானை மனதார பிரார்த்திப்போம்

araneri

 

அறநெறி

ஒரு வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால், அந்த வீட்டில் இருப்பவர்கள் அந்த வீட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு காது குத்தலாமா?

கூடாது

எவ்வளவு காலத்திற்கு இவ்வாறு செய்யக் கூடாது?

ஆறு மாதத்திற்குள்ளாக காது குத்துதல் சடங்கை செய்யக்கூடாது.

சிலர் ஆண் குழந்தைகளுக்கு பூணூல் அணிவிக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவ்வாறு அந்த பூணூல் அணிவிக்கும் சடங்கினை செய்யலாமா?

கூடாது

எவ்வளவு காலத்திற்கு செய்யக்கூடாது?

திருமணம் நடந்த ஆறுமாதத்திற்கு செய்யக்கூடாது.

6 மாத காலத்தில் புண்ணிய நதிகளைக் கடந்து செல்லும் தீர்த்த யாத்திரை மேற்கொள்ளலாமா?

கூடாது.

வேறு என்ன செய்யக்கூடாது?

தாங்கள் வசிக்கின்ற வீட்டிலிருந்து புதிதாக ஒரு வீட்டிற்கு இந்த ஆறு மாத காலத்திற்குள்ளாக குடியேறக்கூடாது.

வாடகை வீட்டில் வசிப்பவர்களாக இருந்தால் என்ன செய்யலாம்?

புது வீட்டுக்கு ஒரு சுப நாளில், சூரிய உதயத்திற்கு முன்பாக குடியேறிவிட வேண்டும்.

புது வீட்டில் குடியேறிய பிறகு என்ன செய்ய வேண்டும்?

அங்கு தங்கள் குலதெய்வத்திற்கென்று ஒரு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அந்த குலதெய்வத்தின் ஆணைப்படியே தற்போது புது வீட்டிற்கு வந்ததாக நினைத்து, தோஷங்கள் ஏற்பட்டுவிட்டதோ என எண்ணி வருந்தாமல், தங்களின் அன்றாட கடமைகளை செய்ய வேண்டும்.

சில குறிப்பிட்ட நாட்களில் கடன் வாங்கினால் அதை திருப்பி செலுத்த முடியாது என சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. அது என்னென்ன நாட்களில்?

மாத பிறப்பு, அஸ்தம் நட்சத்திரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை இந்த தினங்களில் கடன் வாங்கக்கூடாது.

அப்படி வாங்கினால் என்ன நடக்கும்?

தீர்க்க முடியாத கடனாக அது வளர்ந்து கொண்டே போகும்.

அதே நேரத்தில் செவ்வாய்க்கிழமை வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் என்ன நடக்கும்?

கடனை விரைவில் முழுவதுமாக அடைக்க முடியும்.

புதன்கிழமை வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்துவது தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது? அது ஏன்?

ஒருவேளை செலுத்தினால், மீண்டும் மீண்டும் கடன் வாங்கவும், வாங்கிய கடனை கட்ட முடியாமல் போகும் நிலையும் உருவாகும் என கூறப்படுகிறது.

தங்களுக்கென்று புதிதாக வீடு, வாகனம், நகை இதர வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை வாங்க எந்த கிழமை நல்லது?

புதன்கிழமை சிறப்பான நாளாகும்.

வேறு எந்த நாட்களில் வாங்கலாம்?

ஞாயிற்றுக்கிழமைகளிலும் புதிய பொருட்களை தாராளமாக வாங்கலாம்.

புதிய பொருட்களை வாங்குவதால் மேலும் புதிய பொருட்களை வாங்கும் யோகம் எப்பொழுது வாங்கினால் உண்டாகும்?

“அசுவதி, சித்திரை, சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி” நட்சத்திர தினங்களில்

அதே போன்று தங்களிடம் இருக்கின்ற பழைய பொருட்களை விற்க நினைப்பவர்கள் எந்த நட்சத்திர தினங்களில் விற்கலாம்?

“பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூரம், விசாகம், பூராடம், பூரட்டாதி” ஆகிய நட்சத்திர தினங்களில் விற்கலாம்.

பழைய பொருட்களை விற்க ஏற்ற தினங்கள் எவை? வாரத்தில் திங்கட்கிழமை, வியாழக்கிழமை ஆகியவை ஏற்ற தினங்களாக இருக்கின்றன.

ஒருவரின் ஜென்ம நட்சத்திர தினத்தன்று ஒரு சில காரியங்களை செய்யலாம் என முன்னோர்கள் சாஸ்திர விதிகளாக வகுத்துள்ளனர்.

அவை எவை?

புதிதாக கல்வி பயிலுதல், நிலம், தோட்டம் போன்றவற்றை வாங்குதல், குழந்தைகளுக்கு அன்னபிரசன்னம் எனப்படும் சடங்கு செய்தல், பூணூல் போட்டுக் கொள்ளுதல், யாகம் செய்தல் போன்ற செயல்களை ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த நட்சத்திர தினமான ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யலாம்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திர நாளில் என்னென்ன செய்வதை தவிர்க்க வேண்டும்?

வளைகாப்பு, சீமந்தம், முடி இறக்குதல், முகச்சவரம், நோய்க்கு முதன்முதலாக மருந்து சாப்பிடுதல், வெளியூர் பயணங்கள், கடல் கடந்த பயணங்கள் போன்றவற்றை

araneri

 

காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் எப்படி அழைக்கப்படுகிறது?

சந்தியா காலங்கள்

இந்த இரு வேளைகளிலும் என்ன செய்யக்கூடாது?

தெய்வ வழிபாட்டை தவிர எந்த விஷயங்களையும் செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.

மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள்

சொல்வதன் காரணம் என்ன?

சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை, மாலை ஆகிய இரு வேளைகளும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது.

செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?

செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் என்ன நடக்கும்?

வளரும்.

செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கலாமா? இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா?

காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா?

கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

araneri

 கோயிலில் முதலில் யாரை தரிசித்து வலம் வரவேண்டும்?

பிரதான மூலவரை

அடுத்து யாரை தரிசித்து வலம் வரவேண்டும்?

அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும்.

மூன்றாவது யாரை தரிசித்து வலம் வரவேண்டும்?

நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

பஞ்சாங்கத்தில் நட்சத்திரம் திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருந்தால் விரதம் வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்?

விரதம், வழிபாடு மேற்கொள்வதற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால் முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.

பொதுவாக எவற்றுக்கு இடையில் அல்லது யாருக்கு குறுக்கே செல்லக்கூடாது என்பார்கள்?

சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு -சிஷ்யன், பசு - கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.

சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்?

நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். சுவாமிக்கு சாத்திய

மாலையை வாகனத்தின் முன்

கட்டிக் கொள்ளலாமா?

சுவாமிக்கு சாத்திய மாலைகள் என்னவாகும்?

பிரசாதம் எனும் புனிதப் பெயரையடைகின்றன.

இதனால் இதை பாதுகாக்க வேண்டுமா? எப்படி பாதுகாக்கவேண்டும்?

காலில் படும்படியாக எங்கும் விழ வைக்கக்கூடாது.

வாகனங்களில் கட்டிக் கொள்ளலாமா?

வாகனங்களில் கட்டிக் கொள்வதால் அது செல்லும் இடம் எல்லாம் சிதறி விழும்.

இதனால் என்ன நடக்கும்?

அதன் மீது மற்றைய வாகனங்கள் ஏறிச்செல்வது, நம் காலில் படுவது போன்ற தவறுகள் ஏற்படலாம். இது பாவச் செயல். செய்யக்கூடாது.

வீட்டிலிருந்து கிளம்பும்போது மூன்று பேராகச் செல்லக்கூடாது

என்பது உண்மைதானா?

சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்சினையில்லை என்று சொல்லப்படுகிறது.

வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா?

முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.



வத்தளை, மாபொல, பங்களாவத்தை ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா


வத்தளை, மாபொல, பங்களாவத்தை அருள்மிகு ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் முதலாவது வருஷாபிஷேகம் கடந்த 30 ஆம் திகதி காலை நடைபெற்ற கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியது. அன்று மாலை மாரியம்மன் ஆலய திருவிழாவும் நடைபெற்றது.

கடந்த 2ஆம் திகதி முதல் மாலை 4. 30 மணிக்கு அருள்மிகு ஶ்ரீ கனகதுர்க்கை அம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேகங்களும் பூஜைகளும் நடத்தப்படுவதுடன் வசந்த மண்டப பூஜைகளும் நடத்தப்பட்டு அம்பாள் உள்வீதி வலம் வந்து அருள்பாலிக்கும் நிகழ்வும் இடம்பெறுகிறது. இந்நிகழ்வுகள் இவ்வாறு எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறும். எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை அஷ்டோத்திரசதா சங்காபிஷேகம், அபிஷேகம், பூஜை என்பன நடத்தப்படும். அன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த மண்டப பூஜை நடத்தப்படு​ம். அதனைத் தொடர்ந்து வண்ணமிகு தேரில் ஆரோகணித்து அம்பாள் வௌிவீதி வலம் வந்து அருள்பாலிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

ஆலயத்திலிருந்து புறப்படும் தேர், அல்பர்ட் பீரீஸ் மாவத்தை, பரணவத்தை, கெரவலப்பிட்டிய அதிவேக வீதி சந்தி வரை சென்று கெரவலப்பிட்டி 20 அடி வீதி சாந்தி வீதி, பங்களாவத்தை சாந்தி வீதி, எட்டபலம்வத்தை வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடையும். எதிர்வரும் 10 ஆம் திகதி பால்குடபவனியும் தீர்த்தோற்சவமும் நடைபெறும். எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு திருவூஞ்வல் திருவிழாவும் பூங்காவனமும் நடைபெறும். 12 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வைரவர் மடை இடம்பெறும்.