உணர்வுபூர்வமாக உள்ளத்தை ஊடுருவிச் செல்லும் இது ஒரு உண்மைக் கதை. இந்தக் கதையின் நாயகியான இந்த இளம் பெண் இன்று நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அக்கரப்பத்தனையில் பால் பண்ணை ஆரம்பித்து நடத்தி வருகிறார். 200 வருட கால வரலாற்றைக் கொண்ட மலையகத்தின் விதியை மாற்றி அமைக்கத் துணிந்த இவர் அவுஸ்திரேலியாவில் இருந்து பசுக்களை இறக்குமதி செய்து தனது பாற் பண்ணையை விஸ்தரித்து பாற்பொருட் உற்பத்திகளை மேலும் அதிகரித்து ஒரு ஐம்பது அறுபது பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முயற்சித்து வருகிறார். தன்னைப் போல மேலும் பலரை உருவாக்க முயற்சித்து வருகிறார். தற்போது இவரது பண்ணையில் ஐந்தாறு பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். பாற்பொருட்களை உற்பத்தி செய்து விநியோகத்து வருகிறார்.
மலையகத் தியாகிகள் ஒன்றியத்தின் மலையகச் செம்மல் விருது பெற்ற ஒரு பெண் தொழில் முயற்சியாளர் இவர்.

No comments:
Post a Comment