இந்திய அரசாங்கம் காலத்தின் தேவை கருதி ஆற்றிய சிறப்பான பணியொன்றில் இந்திய இராணுவ வீரருடன்....
2025 ஆம் ஆண்டு டிசம்பரில் வீசிய டித்வா புயலில் மாதம்பை இரணவில பாலம் சேதமுற்றது அதனை இந்திய இராணுவத்தினர் இரவு பகல் பாராது கடமையாற்றி ஒரு வார காலத்தில் நிறைவு செய்தனர். இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்த நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இங்கு வாழுகின்ற மீனவர்கள் இந்த ஆற்றை கடப்பதற்கு இது வரை காலமும் இயந்திரப் படகொன்றையே நம்பி இருந்தனர். ஒரு நபரிடம் இருந்து இதற்கு 30 ரூபாயும் மோட்டார் சைக்கிலுக்கு 60 ரூபாயும் மூட்டை முடிச்சுகளுக்கு 100 ரூபாயும் செலுத்தி வந்தனர். படகு நிறைய பயணிகள் சேரும் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது. இதனால் அவர்களது நேரம் வீணானது. அதிக பயணிகள் ஏற்றிச் செல்வதால் படகு கவிழ்ந்தால் உயிராபத்து கூட ஏற்படலாம். இந்த படகு இயங்க எரிபொருள் தேவை. எரிபொருள் கிடைக்காவிட்டால் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறிதான். உலகமே எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் ஒரு நிலையில் இந்திய அரசாங்கம் ஆற்றிய பணி போற்றத்தக்கது. இந்த பாலம் இல்லாவிட்டால் தரை வழியாக வருவதாக இருந்தால் 25 கிலோ மீட்டர் தூரம் சுற்றிப் பயணம் செய்து தான் வரவேண்டிய இருக்கும்.
All reactions:
20Arumugam Raveindran and 19 others9
Like
Comment
Share



No comments:
Post a Comment